சூசி 3 அல்லது சூப்பர் சிங்கர் 3 எனப்படும் தமிழகத்தின் சிறந்தகர் பாடகர் தேர்வுப் போட்டியின் 3ம் பருவம் பல சமயம் வேண்டுமென்றே இழுக்கப்படுகிறது எனும் உணர்வைத்தருகிறது. உவப்புச் சீட்டு சுற்றில் (Wild card round) ஒரு வாரம் இவர்கள் தம் திறமையைக் காட்டினால் போதாதா? இரண்டாவது வாரம் எதற்கு? முதல் வாரத்திலேயே தெரிந்து விட்டதே அத்தனையும் தங்கமென்று. இவர்களை அடுத்த வாரமும் துன்பப்படுத்தி, அவர்கள் பட்ட கஷ்டத்தை பிலிம் போட்டுக் காட்டி...ஏதோ தெருவோர பிச்சைக்காரி ஒரு பிள்ளையை (அது அவள் பிள்ளையாகக் கூட இல்லாமல் இருக்கலாம்) இடுப்பில் தூக்கிக்கொண்டு பிச்சை எடுப்பது போல் உள்ளது. அதற்கென்று அந்த ஷாட் எல்லாம் கருப்பு, வெள்ளையில் எடுத்திருக்கிறார்கள் :-)
வேறு எந்த நாட்டிலும் நடக்காது! நீதிபதிகளே போட்டியாளர்களுக்கு ஓட்டுக் கேட்பது! முன்பு தோற்றுப்போன போட்டியாளர்கள் வந்து ஓட்டுக் கேட்பது. அது மட்டுமல்ல, ஒரு போட்டியாளருக்கு என்றில்லாமல் பல போட்டியாளர்களுக்கு ஒருவரே ஓட்டுப்போடச் சொல்வது. இவையெல்லாம் திட்டம் ஏதுமில்லாமல் ஏதோ நிகழ்ச்சியை இழுக்க வேண்டுமென்று செய்வது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. மேலும் நீதிபதிகளை இஷ்டத்திற்கு மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். தன்யா ஒருமுறை சொல்லியவாறு, ஸ்ரீநிவாஸ், உன்னி, சுஜாதா என்று எண்ணி பாடலை தயாரித்து வந்தால் அங்கு வேறொரு செட் உட்கார்ந்து இருக்கிறது! எதிலுமே ஒரு தரக்கட்டுப்பாடு இல்லை (no standardized protocol). மக்களிடம் ஓட்டுக்கேட்கிறார்கள், பின் நீதிகளின் மார்க்கு எதற்கு? அநேகமாக இறுதிச் சுற்று என்று சொல்லிவிட்டு, மீண்டுமொரு அரையிறுதிச் சுற்று போல் நான்கு பேரைப் பாடவிடப்போகிறார்கள் என்று தெரிகிறது. மக்கள் தீர்ப்பாக ஒருவர், நீதிபதிகள் தேர்வாக ஒருவர். இது எப்படியும் சாய் சரணை இறுதிச் சுற்றில் நிற்க வைக்கும் முயற்சியாக இருக்கலாம். பூஜா, சத்யா இருவரும் அரையிறுதி வென்று விட்டோம் என்று மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் நடக்கப்போவது இறுதிப்போட்டி அல்ல. மீண்டுமொரு அரையிறுதிப் போட்டியே. இல்லையெனில் இறுதிப்போட்டியில் நான்கு பேர் போட்டி போடுவார்களோ?
Shame on you Vijay!
இந்த வாரத்தில் நடந்திருக்கும் சில நன்மைகள். ஹரிஹரசுதன், ‘வெறிஹரசுதனாக’ மாறி வெளுத்துக்கட்டுவது! அவனது பெரியம்மா முதன்முறையாக அரங்கில் கலந்து கொண்டு பிள்ளைக்கு ஓட்டுக்கேட்பதுடன் அவனைக் கலாய்வது! மாளவிக்காவின் அம்மா பச்சைப்புடவை கட்டாமல் வருவதுடன், மாளவிக்காவைக் கலாய்வது! சாய்சரணைப் பார்த்தால்தான் பாவமாய் உள்ளது!
ம்ம்ம்..எல்லோருமே ஒருவகையில் பாவம்தான்.
ஜவ்வாக இழுபடும் சூசி 3
பதிப்பு:
நா.கண்ணன்
Thursday, September 08, 2011
at
Thursday, September 08, 2011
Subscribe to:
Post Comments (Atom)


0 பின்னூட்டங்கள்:
Post a Comment