tag:blogger.com,1999:blog-5593630.post115123960174476320..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: புறக்கணிக்கப்பட்ட தென்னகம்Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5593630.post-1151416209705186072006-06-27T19:20:00.000+05:302006-06-27T19:20:00.000+05:30கண்ணன், கருத்துகளை நிதானத்துடன் அணுகியதற்கு நன...கண்ணன், கருத்துகளை நிதானத்துடன் அணுகியதற்கு நன்றி. தாங்கள் இரண்டாவது பகுதியில் கூறுகிறீர்களே, யதார்த்தத்தில் தமிழனின் வாழ்வு, ஏன், இந்தியனின் வாழ்வு என்று கூட சொல்லலாம், ஒரு பிறழ்ந்துபட்ட மனோநிலையின்பால் காமத்தைப் பொறுத்தவரை ஆகிவிட்டிருக்கிறது என்று, இதற்கு, இந்த கருத்தை நூல் பிடித்துக்கொண்டு போனீர்கள் என்றால், மடத் தாபனத்தை முக்கியமாக முன்னிறுத்திய கொள்கைகள், புத்த மதம், சங்கரர், போன்றோர் இந்த இயல்பான கொள்ளுதல் அல்லது தள்ளுதல், காமத்தைப் பொறுத்தவரை என்பதை இந்த நிலைக்கு வர சமுதாயநிலையில் காரணங்களாக அமைந்துவிட்டனர் ென்றே சொல்லவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1151392128708031082006-06-27T12:38:00.000+05:302006-06-27T12:38:00.000+05:30நன்றி ரங்கன்:ஆஷாடபூதி என்ற பதம் சரியானதே! அப்போது ...நன்றி ரங்கன்:<BR/><BR/>ஆஷாடபூதி என்ற பதம் சரியானதே! அப்போது தோன்றவில்லை. Puritanical விளக்கத்திற்கு நன்றி. இவ்வளவு காம சாஸ்திர போதனை நம் தத்துவத்தில் இருந்தும் பலர் puritanical-ஆக இரூபது போலவே படுகிறது. அவர்களுக்கு காமப்படிப்பு காணாது என்று தோன்றுகிறது. ஒரு பிறழ்ந்து பட்ட மனோநிலையில்தான் தமிழன் வாழ்வு இந்தியாவில் செயல்படுகிறது. அதை இலக்கியமும், நடைமுறை வாழ்வும் நிரம்பவே சுட்டுகிறது. தத்துவார்த்தமாக நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். யதார்த்தமாக இல்லை :-)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-1151343747719483922006-06-26T23:12:00.000+05:302006-06-26T23:12:00.000+05:30கண்ணன், படத்தைப் பற்றிய உங்கள் கருத்தைப் பார்...கண்ணன், படத்தைப் பற்றிய உங்கள் கருத்தைப் பார்த்தேன். அதில் இரண்டு வார்த்தைகள் நீங்கள் பயன் படுத்துகிறீர்கள். ஒன்று பாஷண்டிகள், இரண்டு puritanical. பாஷண்டிகள் என்றால் வேதத்தை ஒத்துக் கொள்ளாமல், ஒழுக்கத்தில் வேதநெறிக்கு புறம்பாகச் செல்கிறவர்களை பாஷண்டிகள் என்ற வார்த்தை குறிக்கும். ஒருவேளை ஆஷாடபூதிகள் என்பதை மனத்தில் கொண்டு இந்தச் சொல்லை பயன் படுத்துகிறீர்களோ? அடுத்தது, ப்யூரிடானிக்-- இந்த சொல்லே காமம் பாவம், டாபூ, முதல் பாவத்தில் மனிதன் விழுந்தான் என்பது போன்ற கிறித்துவ மதக் கூறுபாடுகளைக் கொண்டிருப்பது. நம் மக்களிடையே காமம் என்பது பாவம் என்ற எண்ணம் கிடையாது. வாழ்க்கையின் நான்கு இலட்சியங்களில் ஒன்றாக காமத்தைக் கொள்கினறனர். ஆனால் என்ன வீடுபேறு என்று பார்க்கும்பொழுது, காமம் தடையாக ஆகிறது. தடையை விலக்கி இலட்சியத்தின்பால் கருத்து செலுத்துமாறு வீடுபேற்றில் நாட்டம் கொண்டவர்களைக் கூறுகிறது. இவை உங்களுக்கு தெரிந்ததாகத்தான் இருக்கும். இருந்தாலும் நினைவு படுத்தவேண்டி சொன்னேன்.Anonymousnoreply@blogger.com