tag:blogger.com,1999:blog-5593630.post8633598569047760915..comments2023-09-04T17:50:55.107+05:30Comments on கவினுலகம் - K's world: கேள்வி பிறந்தது எங்கே?Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5593630.post-34322239738956977292006-12-25T18:23:00.000+05:302006-12-25T18:23:00.000+05:30நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லும் கருத்தை ஒத்துக் க...நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லும் கருத்தை ஒத்துக் கொள்கிறேன் ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-62215685942729571952006-12-23T06:16:00.000+05:302006-12-23T06:16:00.000+05:30குமரன்:
எழுதாத இன்னுமொரு எண்ணம். மனிதன் பிறக்கும்...குமரன்:<br /><br />எழுதாத இன்னுமொரு எண்ணம். மனிதன் பிறக்கும் போதே இறைத் தேடலுடன் பிறப்பதாக அறிவியல் சொல்கிறது. அதாவது நிருவனப்படுத்தப்பட்ட சமய ஒழுங்குகள் இல்லாத இடத்திலும் மனுதனாகப் பிறந்தவனுக்கு ஏதாவதொரு வகையில் சமயச் சிந்தனை இருக்குமாம். என்னைக் கேட்டால், இந்தியா தனது சமயச் சிந்தனைகளை நிருவனப்படுத்தாமல் இத்தகைய இயற்கை நிலையிலே இன்றளவும் வைத்திருக்கிறது என்று சொல்லுவேன். அதனால்தான் 'இந்து மதம்' என்று ஒரு மதம் இல்லாமல் இருக்கிறது. வேத, உபநிஷத்துகளில் 'இந்து' என்ற வார்த்தை கிடையாது என்று சொல்லக் கேள்வி. இதை 'சநாதன தர்மம்' என்றே பெரியோர் அழைப்பர். தர்மம்/அறம் என்பது ஒரு ஒழுக்கம். நம் சமயம் என்பதொரு இயற்கை ஒழுக்கம் அவ்வளவே! எனவேதான், சைவத்தைப் பற்றிப் பேசினால் பாசுரங்களிலிருந்து மேற்கோள் காட்டமுடிகிறது, வைணைவம் பேசினால் வள்ளலாருக்குள் போகமுடிகிறது, ஏன் பௌத்தம் பேசினால் கூட கீதைக்குள் போகமுடியும். எல்லாம் ஒன்றுள், ஒன்று பின்னிப் பிணைந்த ஒரு அழகான, complicated fabric! ஒரு கழுகுப் பார்வையில் (இதை ஜடாயுப் பார்வை என்று கூடச் சொல்லலாம் :-) இந்த pattern தூரத்திலிருந்து ரம்மியமாகத் தெரிகிறது. இயற்கையில் காணும் எப்பொருளிலும் உள்ளது போல் உள்ளே நுழையும் போது பல்வேறு மார்க்கங்கள் தெரிகின்றன. ஒன்றையே சொன்னாலும், வெவ்வேறு குறியீடுகளில் சொல்கிறார்கள். ஒன்றையே சொன்னாலும் வெவ்வேறு பெயர்களில் சொல்கிறார்கள். ஒன்றையே செய்தாலும் அதை வெவ்வேறு அநுஷ்டானங்களில் செய்கிறார்கள். இது அழகிற்கு வளம் சேர்க்கிறது. உண்மைதான். ஆனால், அது அபிப்பிராய பேதத்திற்கும், சில சரித்திரப் பிழைகளுக்கும் காரணமாகிப் போகிறது. அதைப் பற்றி கொஞ்சம் சிலாகித்துப் பேசும் கட்டுரை அது.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-70576645267107189792006-12-22T22:01:00.000+05:302006-12-22T22:01:00.000+05:30கண்ணன் ஐயா. இந்த நீண்ட கட்டுரையை இன்று தான் படிக்க...கண்ணன் ஐயா. இந்த நீண்ட கட்டுரையை இன்று தான் படிக்க முடிந்தது. எங்கோ தொடங்கி எங்கேயோ சென்று எதை எதையோ தொட்டு மிக நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். உங்கள் எண்ணங்களை நன்கு பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-83990783604893842422006-12-19T18:23:00.000+05:302006-12-19T18:23:00.000+05:30அன்பின் ஜடாயு:
எங்கே ரொம்ப பிசியா இந்தப் பக்கம் ப...அன்பின் ஜடாயு:<br /><br />எங்கே ரொம்ப பிசியா இந்தப் பக்கம் பார்க்கவில்லையோ..கொஞ்சம் தப்பித்தோம் என்று நினைத்தேன். இடுக்குப் பிடி பிடித்துவிட்டீர்கள். கழுகுக் கண்கள்தான் உமக்கு :-))<br /><br />உண்மையில் நீங்களும், அனானி சாரும் இன்னும் கூட கடிந்து கொண்டிருக்கலாம். ஆயினும் அன்பின் பாற்பட்டு மென்மையாக கடிந்துள்ளீர்கள். தன்யனானேன்.<br /><br />அதுசரி, நீங்களும் அவரும் கல்கி பாணியில் நம்மை முன்குடுமி ஆழ்வார்க்கடியான் ஆக்கிவிடுவீர்கள் போலருக்கே! :-) அப்புறம், எதற்கெடுத்தாலும் 'ஹரே கிருஷ்ணா!வை வேறு வம்புக்கு இழுக்கிறீர்கள். அது சரி, விக்கிபீடியாவில் 'நாரணத்துவத்தையே' மாயாவாதம் என்று ஒரு சைவ சித்தாந்தி எழுதுகிறார். அதை மேற்கோள் காட்டுகிறீர்கள். ரொம்ப bias சார் நீங்க ரெண்டு பேரும்.<br /><br />உங்களுக்குத் தெரியாது எனது சைவ சித்தாந்தப் பின்புலம் :-) ஒருமுறை தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு சைவ சித்தாந்தி நம்ம ஊர் கோயிலுக்கு போய்விட்டு வந்து என்னிடம் புலம்பிவிட்டார். அவருக்கு சிவனுக்குப் பக்கத்தில் அம்பாள் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. நவக்கிரகத்தை என்ன சாடு சாடியிருப்பார் என்று யோசித்துக் கொள்ளுங்கள். <br /><br />'மறந்தும் புறம் தொழா மாந்தர்' என்றொரு வசனத்தை திருமழிசை போடுகிறார். அப்படி சில பேர் இருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் நான் பேசுவது போலவும் உலகம் படும் என்று புரிந்து கொள்ளுங்கள்.:-)<br /><br />மேலும், வெட்டி ஒட்டும் போது முழுக் கட்டுரையின் ஓட்டம் மறைக்கப்பட்டுவிடும் அபாயமுண்டு! நான் அதை கொஞ்சம் light hearted-ஆக எழுதினேன். இந்தியாவிற்கு வந்து இந்திய சமயத்தைக் காண்பவன் மிரண்டு விடுவான். அவ்வளவு முரண்பாடுகள் அங்கே இருக்கு. இதற்கிடையில் சுகமாக நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம், சிவனே! என்று :-)<br /><br />இன்னும் என் சிக்கல் புரிந்த பாடில்லை. ஆனால் விடைக்கு அருகில் நிற்பது புரிகிறது. ஒரு பதிவாக அதுவும் வரும் (என் எழுத்து என் உரத்த சிந்தனையே. முடிவான முடிவு என்றில்லை).<br /><br />நான் வேதாந்த தேசிகர் பாணியில் சொல்லப் புகுந்தால் ஒரு போர் மேகமே சூழ்ந்துவிடும். அவர் தத்துவத் த்ரய சாரத்தில் ஆணித்தரமாக நாரணத்துவம் நிறுவுகிறார். அதில் எல்லாம் நாரணனுக்குக் கீழேதான். அது ரொம்ப காட்டமாகப்படலாம். அப்புறம் பிரபுபாதா ரேஞ்சுக்கு என்னைக் கொண்டு போய்விடுவீர்கள். அதனால் இத்தோடு விடுகிறேன் :-)<br /><br />இன்னும் புரியாத புதிர்! இந்த ரெண்டு பார்ட்டியும் ஒன்றைத்தான் பேசுகிறார்கள் என்பது மிகத்தெளிவாகப் புரிகிறது. ஆனால், ஏன் அப்படி பேசுகிறார்கள் என்பதுதான் புரிபடவில்லை.<br /><br />என்ன இருந்தாலும் இப்போது syndication இல்லாத நேரத்திலும் நீங்களும், அனானிசாரும் வந்து போனது மனதுக்கு இதமாக உள்ளது. அனானி சார் மேற்கோள்களுக்கு என் புரிதலை சாத்வீகமாக :-) ஒரு பதிவில் சொல்கிறேன்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-56446561786182866062006-12-19T15:15:00.000+05:302006-12-19T15:15:00.000+05:30// இப்போது சிக்கல் என்னவெனில், இந்த icon-க்குள் நா...// இப்போது சிக்கல் என்னவெனில், இந்த icon-க்குள் நாரணவித்தைகளைக் கொண்டு வந்து காட்ட வேண்டும்! பார்ட்டி என்று பிரிச்சாச்சு, பிறகு கொள்கை விளக்கம் தந்துதானே ஆகவேண்டும்! //<br /><br />சைவமும், வைஷ்ணவமும் தேர்தலுக்குத் தேர்தல் கட்சி மாறும் கூட்டணிகள் நிலையில் உள்ளது போலப் பேசுகிறீர்கள். <br /><br />// கிருஷ்ணர் சின்னப் பிள்ளையாக இருக்கிறாரா? சரி, ஒரு பிள்ளையாரை உருவாக்கு! கிருஷ்ணன் ருக்மணி, பாமா என்று இரண்டு மனைவியர் கொண்டுள்ளாரா? சரி, முருகனை உருவாக்கு! அவனுக்கு வள்ளி, தெய்வயானி என்று இரண்டு பெண்டாட்டிகளை உருவாக்கு. //<br /><br />என்ன பிதற்றல் இது? எவ்வளவு கேவலமான வாக்கியங்கள்! உங்கள் வைணவ வெறி இவ்வளவு தூரத்திற்குப் போகும் என்று எண்ணியும் பார்க்கவில்லை. சைவம் என்பது ஏதோ ஒரு காப்பியடிப்பு ஒட்டு வேலை என்பது போலப் பேசுகிறீரே சுவாமி? <br /><br />எல்லா சமய மரபுகளும் உருவானதற்கு ஒரு நெடிய, வரலாற்று பூர்வமான evolution உள்ளது. சிவகுமாரனான தேவசேனாபதியைப் பற்றி மகாபாரதத்தில் உள்ளது. சித்ரகூடத்தில் ராமன், சீதைக்கு லட்சுமணன் பணிபுரிந்தது சிவனுக்கும், உமைக்கும் நந்தி பணிவிடை செய்தது போல் இருந்தது என்று வால்மீகி முனிவரே சொல்லுகிறார் (சுலோகத்தைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளவும்). <br /><br />சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை மற்றெல்லா சைவ, வைணவ இலக்கியங்களுக்கும் முந்தையது. தமிழின் முதல் பக்தி நூல் அதுவே. ஆனைமுகன் வழிபாடு ஹரப்பா நாகரிகத்திலேயே உள்ளது!<br /><br />நெகிழ்ச்சித் தன்மையுடைய நம் ஆறு சமயங்களில், ஒரு சமயத்தின் முக்கிய அம்சம் வேறோரு சமயத் தளத்தில் ஆன்மிக நோக்கில் அனுபவிக்கப் பட்டிருக்கிறது. இது ரசித்து இன்புற வேண்டிய விஷயம். முன்பெ பல தடவை சொன்னது போல், சண்டை போடும் விஷயம் அல்ல. <br /><br />// சிவனோ பிறப்பிலி. ஆனால் அவதாரம் எனும் கோட்பாடு கன்னாபின்னாவென்று பாப்புலர் ஆகிவிட்டது. இதை எப்படி சரிக்கட்டுவது? திருவிளையாடல் எனும் புதிய கோட்பாடு தென்னகத்தில் உருவாகியது. இது மதுரை மற்றும் தென்னக சம்பிரதாயம் என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. // <br /><br />நரிகளைப் பரிகளாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது எல்லாம் மணிவாசகரது ஆன்மீக அனுபவம் ஐயா, அது பற்றித் திருவாசகத்திலேயே பரவசமூட்டும் பாடல்கள் உள்ளன. அதோடு, வேறு சில லீலைகளும் சேர்த்து பின்னர் திருவிளையாடற்புராணம் உருவாயிற்று. இதெல்லாம் வைணவத்திற்குப் போட்டியாக உருவாக்கிய "சரிக்கட்டா”? பயங்கர crackpot theory இது. <br /><br />ஆழ்வார்கள் வரலாற்றில் வரும் இதே போன்ற சம்பவங்களையும் எளிதாகக் கேலி செய்ய முடியும். அது போன்ற செயல்களை ஏதோ கொஞ்ச நஞ்சம் ஆன்மீகக் காற்றை சுவாசித்த நான் ஒருக்காலும் செய்ய மாட்டேன். <br /><br />// இதற்கு ஈடான குறியீட்டை சிவனுக்கு உருவாக்க முற்படும் போது தென்னிந்திய சைவ சித்தாந்திகள், 'நடராஜன்' என்ற உன்னத குறியீட்டை உருவாக்கி உலகிற்கு அளித்தனர். // <br /><br />அகண்டாகாரமான சிவ நடனம் போட்டிக்கு உருவாக்கிய குறியீடா? ஆனாலும் இது ரொம்ப ஓவர் ! நடராஜன் ஆடிய கொடுகொட்டி முதலான 64 வகை நாட்டியங்களைப் பற்றி சிலப்பதிகாரத்திலேயே மிக விரிவாக வருகிறது. காலத்தால் தொன்மையான பரத முனிவரின் "நாட்டிய சாஸ்திரம்" இந்தியாவில் எல்லா பாரம்பரிய நடனங்களுக்கும் மூலநூல். சிவனது திருநடனம் கண்ட பரத முனிவர் அதை உலகிற்கு விரித்துரைத்ததாகப் போற்றப் படும் நூல் இது. இன்றைக்கும் நடனக் கலை பயிலும் வைணவர்களும் தொழும் தெய்வம் அந்த ஆடலரசன் தான், “எல்லா மார்கெட்டையும் அவர் கைக்குள்ளே வைத்திருக்கிறார்” என்பவருக்கு இங்கே எப்படி மார்க்கெட் போயிற்று என்று உங்கள் ஆராய்ச்சிக்கு இப்போதே ஒரு விஷயம் ரெடி :))) <br /><br />சோழர் கால வெண்கலச் சிலைகளில் நடராஜ வடிவம் மகோன்னதம் அடைந்தது, அவ்வளவு தான். 5-ஆம் நூற்றாண்டு எல்லோரா குகைச் சிற்பங்கள், எலிபெண்டா குகைக் கோயில்கள், வட இந்தியாவின் தொல் சிற்பங்கள் இவை எல்லாவற்றிலும் பல நடராஜ வடிவங்கள் உள்ளன. <br /><br />// ஆனால் 'சற்றே விலகும் பிள்ளாய்!' என்று சொன்ன நந்தனை எரித்து சாம்பலாக்கிவிட்டனர் சிதம்பரத்து அந்தணர். இன்றளவும் அந்தக் கோயில் பிரச்சனைக்குரியதாகவே உள்ளது! // <br /><br />முந்தைய "இஸ்கான் மதரஸா" பட்டம் தந்த அனானி சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். உங்களுக்கு வேண்டும்போது இந்து தர்மத்தின் எதிரிகளது பொய்களை வாதம் போல எடுத்து வைப்பீர்களோ? இதைச் சொன்ன அதே கூட்டங்கள் ராமாயணம் பற்றியும், கிருஷ்ணன் பற்றியும் சொன்னதெல்லாம் தெரிந்தது தானே - அவற்றையெல்லாம் ஒப்புக் கொள்கிறீர்களா? <br /><br />கண்ணன், ஏதோ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் popularity contest நடப்பது போன்ற மனோபாவத்திலேயே நீங்கள் சஞ்சரிப்பது போன்று தெரிகிறது. பல பிறவிகள் முன்பு ராஜராஜன், வந்தியத்தேவன் காலத்தில் ஆழ்வார்க்கடியானாக இருந்தீர்களோ ?:))) <br /> <br />கிறிஸ்தவர்கள் தேவ ஊழியம் செய்வது போல, ஒவ்வொரு பதிவிலும் சைவ நிந்தனை செய்வதைக் கடமையாகவே வைத்திருக்கிறீர்களே! இது உங்கள் சமய, ஆன்மீக சிந்தனைப் பரப்பில் விழுந்துவிட்ட ஓட்டை என்பது போலவே தோன்றுகிறது. <br /><br />முந்தைய பதிவுகளாவது பரவாயில்லை. இந்தப் பதிவில் எழுதியது சகிக்க முடியாமல் இருக்கிறது.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-44609016869171772302006-12-18T09:59:00.000+05:302006-12-18T09:59:00.000+05:30//உங்கள் பதிவு இப்போது தமிழ்மணத்திலோ தேன்கூட்டிலோ ...//உங்கள் பதிவு இப்போது தமிழ்மணத்திலோ தேன்கூட்டிலோ திரட்டப் படவில்லையே, ஏன்? //<br /><br />Blogger-Betaவை அறிமுகப்படுத்துகிறது. தமிழ்மணம் கருவிப்பட்டை அதில் சரியாக வேலை செய்வதில்லை. மீண்டும் பதிவு செய்து இருக்கிறேன். சரியாகிவிட வேண்டுமென்று வேண்டுகிறேன்.<br /><br />தேன்கூடில் மீண்டும் பதிவு செய்துள்ளேன். இன்று சோதித்துப் பார்க்கிறேன்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-59418123740146804472006-12-18T09:44:00.000+05:302006-12-18T09:44:00.000+05:30உங்கள் பதிவு இப்போது தமிழ்மணத்திலோ தேன்கூட்டிலோ தி...உங்கள் பதிவு இப்போது தமிழ்மணத்திலோ தேன்கூட்டிலோ திரட்டப் படவில்லையே, ஏன்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-28232456614048145182006-12-18T07:08:00.000+05:302006-12-18T07:08:00.000+05:30//பேசாமல் நீங்கள் ஹரேக்ருஷ்ணா மதரஸாக்களில் சொற்பொழ...//பேசாமல் நீங்கள் ஹரேக்ருஷ்ணா மதரஸாக்களில் சொற்பொழிவாற்றப் போகலாம்//<br /><br />ஹ,ஹா!! I've some issues to settle with them as well! அவர்கள் என்னிடம் கேட்பார்கள், 'ஏன் தமிழகத்தில் மட்டும் ISKCON வேர் ஊன்றவில்லையென்று'. என் பதில்: We are no more innocent!!<br /><br />//உங்கள் சில கமெண்ட்கள் வெறுப்பின் உச்சம்//<br /><br />மன்னிக்கவும். இது எனக்கும் வருத்தமளிக்கிறது. எனது ஆதங்கத்தை யாராலும் புரிந்து கொள்ளமுடியாது.<br /><br />மிக அழகாக ஒன்றே தேவன் என்றொரு தத்துவம் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் நிலைபெற்றிருக்க 'தமிழகம் மட்டும்' வழி தவறிப் போவானேன்? இந்த மருட்சி எப்படி ஏற்பட்டது? இதற்கு வரலாற்று, அரசியல் காரணங்கள் உண்டா? சிவன் என்ற icon தொன்று தொட்டு இருப்பதால் அப்படித் தனிப்பாதை வளர்தெடுக்கப்பட்டதா? பழுத்த ஞானிகளான நாயன்மார்களும், சித்தர்களும் இப்படித் தனிப்பாதை உருவாக்க வேண்டிய அவசியமென்ன?இதில் ஏன், எப்படி பிரம்மா விடுபட்டுப் போனார்? தென்னிந்திய சைவ சித்தாந்தத்தின் தோற்றமென்ன? அது ஏன் வேத மரபை மறுக்கிறது? இவையே என் கேள்விகள்.<br /><br />வைதீக மார்க்கிகளுடன் எனக்குத் தகராறு இல்லை (தத்துவ அளவில்தான் பேசுகிறேன். எனக்கு யாரிடமும் தகராறு கிடையாது)<br /><br />நந்தன் கதையை எனக்கு இப்படிச் சொன்னவர் ஒரு சைவ சித்தாந்தி. இபா இப்படிச் சொன்னாரா என்று எனக்குத் தெரியாது.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5593630.post-79879375327473183552006-12-17T22:04:00.000+05:302006-12-17T22:04:00.000+05:30தத்துவ விளக்கமெல்லாம் சரி. ஆனால் உங்கள் சில கமெண்ட...தத்துவ விளக்கமெல்லாம் சரி. ஆனால் உங்கள் சில கமெண்ட்கள் வெறுப்பின் உச்சம். நந்தனைக் கொளுத்து விட்டார்கள் என்பது இபா என்ற மட மார்க்ஸீய வைணவர் கண்டுபிடித்த கதை. அப்படித்தான் நீங்கள் கண்டுபிடித்திருக்கும் கதைகளும். பேசாமல் நீங்கள் ஹரேக்ருஷ்ணா மதரஸாக்களில் சொற்பொழிவாற்றப் போகலாம்.Anonymousnoreply@blogger.com