<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5593630</id><updated>2012-01-19T23:40:41.586+09:00</updated><category term='secular'/><category term='spiritual awakening through computer analogy'/><category term='tirumangai alwar'/><category term='7 pounds'/><category term='J.Krishnamurti'/><category term='space science'/><category term='scientist'/><category term='malware'/><category term='BBC Earth 2007'/><category term='care'/><category term='conversion'/><category term='on cinema'/><category term='nakannan'/><category term='heritage news'/><category term='hindu'/><category term='hunger'/><category term='President of India'/><category term='Oil Spill'/><category term='Monk beggar'/><category term='service'/><category term='Virginia Tech mass murder'/><category term='lyrics'/><category term='quantum physics and religion'/><category term='Airtel Super Singer 3'/><category term='nammalvar'/><category term='animal behaviour'/><category term='transexual artist'/><category term='Baghavadham'/><category term='hindu renassaince'/><category term='magnet'/><category term='Sex'/><category term='spam'/><category term='&quot;I&quot; consciousness'/><category term='top 5 round.'/><category term='chinese taste for animals'/><category term='kunnakkudi vaidyanathan'/><category term='narayana kavacam'/><category term='naming in a global society'/><category term='Sivaji film songs'/><category term='fusion music'/><category term='Korea and India'/><category term='film review'/><category term='obituary'/><category term='bed bug'/><category term='drama'/><category term='Super Singer 3'/><category term='John-Dylan Haynes'/><category term='Sri Srinivasa Gadyam'/><category term='genetics'/><category term='ஆண்டாள்'/><category term='Slumdog Millionaire'/><category term='brain'/><category term='philosophy'/><category term='religious marketing'/><category term='pondichery'/><category term='siddhar'/><category term='korean olympic show'/><category term='weak and strong'/><category term='mystical tamil tradition'/><category term='africa'/><category term='Mahatma Gandhi'/><category term='caste'/><category term='College Scholastic Ability Test'/><category term='photoshop effects'/><category term='Chennai'/><category term='vERoru manaveLi'/><category term='invitation'/><category term='indian traffic'/><category term='na.kannan'/><category term='DDOS'/><category term='biography'/><category term='painting'/><category term='tamil tradition goes to Korea'/><category term='pregnancy'/><category term='poverty'/><category term='tiruppuvanam'/><category term='e-literature'/><category term='cyber union'/><category term='holy'/><category term='group psychology'/><category term='judo'/><category term='korea'/><category term='unnai pol oruvan'/><category term='soccer fun'/><category term='Narasimha Mehta'/><category term='Amit Goswami'/><category term='sex and city'/><category term='gnjanasampandar'/><category term='Thillu Mullu'/><category term='origins'/><category term='siva'/><category term='Speedy Scandal'/><category term='Sri Veda Vyasa Karavalambam'/><category term='festival of colors'/><category term='10m air riffle'/><category term='iyarkai'/><category term='Rendezvous with Rama'/><category term='book release'/><category term='hollywood'/><category term='free hug'/><category term='announcement'/><category term='bakthi'/><category term='religious view'/><category term='Vishaka Hari'/><category term='participation'/><category term='Pregnant man'/><category term='temple'/><category term='Kim Yun Jin'/><category term='free telephone'/><category term='gun rules america'/><category term='blood suckers'/><category term='dravidian politics'/><category term='arts'/><category term='exclaim'/><category term='comedy. tea ceremony'/><category term='TV Drama'/><category term='soundless films'/><category term='writer'/><category term='Two Much'/><category term='Coastal Clean up'/><category term='Vijay TV'/><category term='The Oprah Winfrey Show'/><category term='music'/><category term='President Roh'/><category term='பாதுகாப்பு'/><category term='எரிசக்தி'/><category term='August 30 2009'/><category term='harmony'/><category term='sexual harassement'/><category term='Will Smith'/><category term='UNESCO'/><category term='UN address by a girl'/><category term='Mamma Mia'/><category term='talkies'/><category term='Tamilnadu'/><category term='Queen of Soul'/><category term='Infosys Narayana Murthy'/><category term='twitter'/><category term='evolutionary biology'/><category term='us'/><category term='Daejon'/><category term='Beijjing Olympic 2008'/><category term='prakashraj'/><category term='Gender'/><category term='film'/><category term='Michael Jackson'/><category term='bilingual'/><category term='Nazi Germany'/><category term='voice column'/><category term='health'/><category term='bilateral'/><category term='Korean Wave'/><category term='gender equivality'/><category term='S.B.B.'/><category term='tamil cinema'/><category term='comedy'/><category term='bajans'/><category term='Oval Office Speech'/><category term='founder tamil heritage foundation'/><category term='mozhi'/><category term='Harichandra'/><category term='avatar'/><category term='Dr.Abdul Kalam'/><category term='diaspora tamil'/><category term='Vaishnava janatho'/><category term='எண்ணெய்'/><category term='Annamayya'/><category term='St.Thomas myth'/><category term='Randy Pausch'/><category term='breast feeding'/><category term='Spiritual travelogue'/><category term='neduthANdakam'/><category term='Raja Ravivarma'/><category term='periyar'/><category term='pushpavaneshvarar'/><category term='tamil antiquity'/><category term='vellithirai'/><category term='investment in India'/><category term='world environment day'/><category term='vivekadanda on america woman'/><category term='blogs'/><category term='re-edited Cinema'/><category term='sundarar'/><category term='N.S.Krishnan'/><category term='humor'/><category term='creation science'/><category term='on ego'/><category term='bhakti'/><category term='கோதை நாச்சியார் தாலாட்டு'/><category term='Tamil tradidition'/><category term='how you look at it'/><category term='semi-finals'/><category term='saraswathi puja'/><category term='Hari Katha'/><category term='dancer'/><category term='tamil grammer'/><category term='maths'/><category term='tamil films'/><category term='language'/><category term='heritage tunes'/><category term='america on war'/><category term='e-personality'/><category term='india'/><category term='fMRI'/><category term='appar'/><category term='agriculture in korea'/><category term='Hallyu'/><category term='transexual'/><category term='Story Teller'/><category term='korean film'/><category term='movie'/><category term='Dasavadaram'/><category term='mysticism'/><category term='tirumala tirupathi documentary'/><category term='farewell talk'/><category term='India celebrates 60th anniversary'/><category term='korean achievement'/><category term='sify.com'/><category term='rationalistic movement in Tamilnadu'/><category term='Musical'/><category term='JK and K'/><category term='singularity'/><category term='சினிமா'/><category term='Barack Obama'/><category term='violin'/><category term='cinema 50s'/><category term='broadcast your thoughts'/><category term='media'/><category term='chios'/><category term='image heritage'/><category term='women in olympics'/><category term='tiruvaimozi'/><category term='Erich Fromm'/><category term='Hare Krishna Introduction Film'/><category term='tamil perspective'/><category term='twinkle twinkle little star in carnatic tune'/><category term='neutral cinema'/><category term='Digital Cinema'/><category term='Ramalingam Pillai'/><category term='USA'/><category term='puram'/><category term='religious chant'/><category term='Akam'/><category term='abhiyum naanum'/><category term='திருஞான முத்திரக்கோவை'/><category term='South Indian Art'/><category term='Never too young to marry?'/><category term='Madurai'/><category term='thevaram'/><category term='Malavika'/><category term='cultural'/><category term='super singers'/><category term='insane'/><category term='aravind eye hospital'/><category term='intellectual arrogance'/><category term='Beijjing Olympic 2008 ends'/><category term='singapore'/><category term='impact of christianity'/><category term='agama'/><category term='tamil department'/><category term='parent&apos;s contribution'/><category term='Indian National Anthem'/><category term='srirangam mohanarangan'/><category term='A touch of Hope'/><category term='J.Krishnamurthi on Sex and Pleasure'/><category term='science'/><category term='THF 8th anniversary'/><category term='top 5 celebration'/><category term='Korean Wave in India'/><category term='Story Telling'/><category term='author'/><category term='Gol Mal'/><category term='Adi Sankara'/><category term='performing art'/><category term='heritage videos'/><category term='tamil heritage foundation'/><category term='Marine Debris'/><category term='voip'/><category term='nandhu'/><category term='Tirupathi'/><category term='Kamal'/><category term='religion and evolution'/><category term='commentary'/><category term='mind reading machines'/><category term='listening'/><category term='Global advisory group'/><category term='Kanchivaram'/><category term='sangam'/><category term='Abridged Cinema'/><category term='multilingual'/><category term='cinema'/><category term='abishekam'/><category term='history'/><category term='religion'/><category term='poetry'/><category term='periya tirumozhi'/><category term='Indian Tradition'/><category term='women writers'/><category term='poet'/><category term='love in office'/><category term='&apos;To Have or To Be'/><category term='medicine'/><category term='Thodakashtakam by Ananda Giri'/><title type='text'>கவினுலகம் - K's world</title><subtitle type='html'>நெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>761</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-3001162662481252836</id><published>2011-09-25T17:44:00.002+09:00</published><updated>2011-09-25T17:44:53.636+09:00</updated><title type='text'>சூப்பர் சிங்கர் இரைச்சல்கள் ஓய்ந்த பொழுதில்</title><content type='html'>சூப்பர் சிங்கர் எனும் பட்டம் சாய் சரணுக்கு கொடுத்திருக்கிறார்கள் என்றவுடன் எனக்கு இயேசுநாதர்தான் நினைவிற்கு வந்தார். அவர் மலைப்பிரசங்கம் செய்து கொண்டு இருக்கிறார். முடிந்த பின் எல்லோருக்கும் ரொட்டிகள் வழங்கினார். உழைத்தவருக்கு மட்டுமின்றி மற்றோருக்கும் வழங்கினார். ஒரு உழைப்பாளி கேட்டானாம், ‘ஐயா! நாங்கள் உழைத்தோம் எங்களுக்குக் கூலியாக ரொட்டி வழங்குவது சரி! ஆனால் வேலை செய்யாத மற்றோருக்கும் ஏன் வழங்குகிறீர்கள்?’ என்று. அதற்கு இயேசு பதில் சொன்னாராம், ‘அப்பா! அவர்களுக்கும் பசியென்ற ஒன்று உள்ளதே!’ என்று. அதுபோல் தான் நடந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவர்கள் ஓராண்டு பாடும் திறமையைப் பார்த்து தேர்ந்தெடுத்தது இருவரைத்தான். அதில் சாய் சரண் கிடையாது. இசை கேட்டு, ரசித்து அனுபவப்பட்ட காதுகளுக்கு சத்ய பிரகாஷின் இசை ஒரு விருந்து. ஆனால் ‘மூன்று ஆண்டு தவம்’ என்று சாய்சரண் போட்டியின் விதிகளை மீறி, ‘உந்து அட்டை’ (வைல்ட் கார்ட்) வழியாக உள்ளே நுழைகிறார். சந்தோஷும் அப்படித்தான். ஆனால் முதல் பரிசு சாய் சரணுக்கு அடுத்த பரிசு சந்தோசுக்கு. கடைசி இரண்டு கொசுறுப் பரிசுகள் சத்யாவிற்கும், பூஜாவிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயேசுவின் பார்வையில் யாரோ இப்படித்தீர்மானித்து உள்ளனர்! ஒரு விதவைத்தாய். தன் மகனே கதியென்று, அவன் முன்னேற்றமே தன் வாழ்வின் நோக்கு என்று பெரிய தியாகங்களைச் செய்த தாய்! அதை அழகாகச் சொல்லத்தெரிந்த தாய் என்றும் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷுக்கு ஏன் பரிசு? அங்கும் ‘தாய் செண்டிமெண்ட்’தான். நடக்க முடியாத தாய். தாய்க்கேற்ற தனயன் எனும் படி சந்தோஷ்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் யார் இறுதிப் போட்டியில் அத்தனை பாடகர்களும் நிற்க வைத்து கரகோஷம் வாங்கியது? யார் அந்த எதிர்பார்த்த இசை இரசவாதம் செய்தது?யாருடைய இசை இந்த நால்வரில் அன்று தனித்து நின்றது? இவ்விழியமே சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/OnNEzhGEdyA" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை போட்டி என்று சொல்வது அந்த வார்த்தைக்கு அவமரியாதை செய்வது. போட்டி என்றால் விதிமுறைகளுண்டு. அதை ஒழுங்காக செயல்படுத்த வேண்டும். விதி மீறல்களைக் கவனிப்போம்:&lt;br /&gt;&lt;br /&gt;1. ஓராண்டாக ஒரு நடுவர் குழு மாறி, மாறி இவர்கள் திறமைய சோதித்து இருவரை இறுதிச் சுற்றுக்கு அனுப்புகிறது. ஆனால், ‘தாய் செண்டிமெண்ட்’ ஒர்கவுட் ஆகுமென்ற தெரிந்த சில சக்திகள் ‘உந்து அட்டை’யை திடீரென அறிமுகப்படுத்தி பின் கேட் வழியாக இருவரைச் சொருகுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. செமி பைனல்ஸ் முடிந்து பைனல்ஸ் வந்த பின் மீண்டும் ஒரு செமி பைனல்ஸ் என்று எந்த ஆட்டத்திலும் கிடையாது. வேண்டுமானால் செமிபைனல்ஸ் என்பதையே ‘உந்து அட்டை’ முறையில் நடத்தியிருக்கலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;3. ’ஏதோ குரல் வளம்’ மட்டும் இருந்த பாடகர்களை தயார்ப்படுத்தி, பயிற்சி கொடுத்து மிகத்திறமையான பாடகர்களாக மாற்றித்தந்துள்ளனர். இந்த ‘உந்து அட்டை’ முறையை முதலிலேயே அறிமுகப்படுத்தியிருந்தால் அதிலும் பயிற்சி பெற்று எப்படி ஓட்டு கேட்பது என்று அறிந்திருப்பர். பாவம்! பூஜா! எதற்கெடுத்தாலும் நாங்கள் எல்லோரும் கடினமாக உழைத்திருக்கிறோம். எனக்குத்திறமை இருப்பதாக நீங்கள் நம்பினால் ஓட்டு போடுங்கள் என்கிறார். ‘தன்னை’ முன்னிருத்த வேண்டும் என்பது கூடத் தெரியாத அப்பாவி அவர். அவருடைய அம்மா அதற்கும் மேல் (அவரும் விதவைதான்). நம்ம சத்யா, ஓட்டுக்கேட்கும் போது தனது அடையான எண்ணையே மாற்றி, ‘SS 05' க்கு ஓட்டுக் கேட்கிறார்!! இவர்தான் இப்படியென்றால் இவர் அப்பா உணர்ச்சி வசப்பட்டு நெகிழ்கிறாரே தவிர, பேசவே தெரியவில்லை. உருப்படியாக இப்போட்டியில் ஓட்டுக் கேட்டவர்கள் இருவரே, ஒன்று சாய், மற்றது பிரவீன். எனவே ‘உந்து அட்டை’ப் பயிற்சி என்று கொடுத்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. மக்கள் ஓட்டுப்போட்டு ஒருவர் தேர்வாகிறார் என்றால் எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் பரிசுகள் வழங்கப்படுகின்றன எனப் பொது மக்களுக்குச் சொல்ல வேண்டியது ‘சட்ட பூர்வமான’ கடமை. இதற்காக இவர்கள் மீது வழக்குத் தொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;5. எல்லோரும் ஏராளமாக ஓட்டுப் போடுங்கள் என்பதும், ‘கள்ள ஓட்டு’க்கூட போடலாம் (ஆங்கர் சிவா சொன்னது) என்பதும் அபத்தம். இணைய முகவரி எதற்குக் கொடுத்து எம்மைப் போல வெளிநாட்டில் இருப்பவரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறார்கள்? இணையதில் ‘எத்தனை ஓட்டு வேண்டுமானாலும் போட வசதி செய்யவில்லை விஜய் டிவி’ மூன்று ஓட்டுக்களே உச்சம்! இப்படி பொது மக்களுக்கு தவறான சேதி சொல்லி திசை திருப்பியதற்கும் வழக்குப் போடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் போன பதிவில் சொன்ன படி. இதுவொரு சொதப்பல் ஷோ! மேலை நாட்டு ஷோக்களை பார்த்துவிட்டு ஏதோ நாங்களும் செய்கிறோமென்று போட்டுக்கொள்ளும் சூடு போன்றது இது. எந்த விதிமுறையும் இல்லாமல், இஷ்டத்திற்கு நடத்தப்பட்ட சொதப்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவொரு விதவைகள் போராட்டம். பூஜா, சாய், கௌசிக் இவர்களின் தாய்மார்கள் போராடினர். முதலில் அவுட் கௌசிக். கடைசியில் அவுட் பூஜா. சாய் சரணின் தாய் வென்றிருக்கிறார். சாய் சரண் திறமைசாலி. கடின உழைப்பாளி. அவனின் தாய் தியாகங்கள் செய்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இத்தேர்வை ஏற்றுக் கொள்கிறேன். திறமையின் அடிப்படையில் என்பதை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை சத்யாவின் பாடலை ’அப்படி’ அனுபவிக்கும் சாய் சரணின் தாயே ஒத்துக்கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவர்களுக்கும், அனந்த் வைத்யநாதனுக்கும் சிறப்புப் பாராட்டுகள். முதல் 10, 5 எனும் கூட்டத்தில் வந்த அனைவருமே திறமையான பாடகர்கள். சூப்பர் சிங்கர் என்பது சத்யப்பிரகாஷ்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-3001162662481252836?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/3001162662481252836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=3001162662481252836' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/3001162662481252836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/3001162662481252836'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2011/09/blog-post_25.html' title='சூப்பர் சிங்கர் இரைச்சல்கள் ஓய்ந்த பொழுதில்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/OnNEzhGEdyA/default.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-5792542103729397806</id><published>2011-09-23T08:06:00.001+09:00</published><updated>2011-09-23T08:07:01.207+09:00</updated><title type='text'>இந்தியத்தனமான இசைநிகழ்ச்சி</title><content type='html'>ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3 ஒரு காட்டாறு போல் ஒழுங்கற்று நடக்கிறது. ஒரு போட்டி என்றால் குவாட்டர் பைனல்ஸ், செமி பைனல்ஸ், பைனல்ஸ் என்று அமைவதுதான் ஒழுங்கு. செமி பைனல்ஸ் நடத்திவிட்டு, இருவரை பைனல்ஸ்ஸுக்கு தெரிவு செய்த பின் மீண்டும், ‘உந்து அட்டை’ (வைல்ட் கார்டு) மூலம் மீண்டும் இருவரைத் தேர்ந்தெடுத்து இருப்பது போட்டியை ஒரு படி கீழே இறக்கி மீண்டும் செமி பைனல்ஸ் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இதற்குப் பதில் செமிபைனல்ஸ் நிலையிலேயே நால்வரைத் தேர்ந்தெடுத்து இறுதிச்சுற்றுக்கு அனுப்பி இருக்கலாமே? எதற்கு இறக்க வேண்டும்? மீண்டும் ‘மக்கள் வாக்குகளால்’ தேர்ந்தெடுத்திருப்பது போன்று போலித்தோற்றம் தர வேண்டும். மக்கள் வாக்கு என்றால் யார், யாருக்கு எத்தனை ஓட்டு கிடைத்தது? யாருக்கும் சொல்லக்கூடாத ரகசியம் என்றால்? பொது ஓட்டு என்று ஏன் சொல்ல வேண்டும்? மக்களவைக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் அவர் எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் வென்றார் என்ற விவரம் ஒரு ஜனநாயக நாட்டில் அறிவிக்கப்பட வேண்டும். அதைச் செய்யவில்லை விஜய் டிவி! இணையம் மூலம் போட்டால் மூன்றே மூன்று ஓட்டு. ஏர்டெல் மூலம் போட்டால், ‘போட்டுக்கொண்டே’ இருக்கலாம். அடடா!!&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் போக்கிற்கு நடுவர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்!! மக்கள் ஓட்டு என்கிறார்கள். பிறகு நடுவர்களை ஏன் உட்கார வைத்திருக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் அனந்த் வைத்யநாதன் ‘நிறைய, நிறைய ஓட்டுப்போட்டு’ எல்லோரையும் தேர்ந்தெடுங்கள் என்கிறார்கள். ஆனால் திவ்யாவோ இந்த நால்வரில் ஒரே ஒருவருக்குத்தான் டைட்டில் என்று கிளிப்பிள்ளை போல சொல்லிக்கொண்டு இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘அந்த பிரம்மாண்ட மேடை’யில் பைனல்ஸ் என்று பயங்கர விளம்பரம். அதற்கு ரிகர்சல் என்று ஏதோவொரு மாலில் மாடியில் நிற்க வைத்து பாட வைப்பது கேவலமாக இருக்கிறது. மாலுக்கு சாமான் வாங்க வருபவர்கள் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க இதன் நடுவே ஒரு போட்டி. சவுண்ட் சிஸ்டம் படு கோளாறு. இதில் பாடினால் உள்ள குரலும் போய்விடும். அதுதான் சத்யாவிற்கு நடந்தது. அவரால் பாடிய பின் பேசவே முடியவில்லை. பிரம்மாண்ட சபை நிகழ்ச்சி இப்படித்தான் இருக்குமென்றால், நிகழ்ச்சியை பார்க்காமலே/கேட்காமலே இருக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவொருத்திட்டமுமின்றி இஷ்டத்திற்கு வெறி கொண்டு ஓடும் காட்டாறு போல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கேவலமாக உள்ளது. இதுதான் இந்திய நிகழ்ச்சிகளின் தரமா?&lt;br /&gt;&lt;br /&gt;யார், யார் வரப்போகிறார்கள் என்பது முன்கூட்டியே தெரிவான ஒன்று போல் படுகிறது. எது எப்படி நடந்தாலும் இதுதான் உண்மையான வரிசை: சத்யா/பூஜா (சமநேர்), சாய் சரண், சந்தோஷ். இதே போல்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். பார்த்துக்கொண்டே இருங்கள். அது எப்படி என்று கேட்கக்கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஏர்டெல் கம்பெனிக்கு நல்ல வியாபாரமாக வேண்டும். அவர்கள் இதை வைத்து எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதைத் தொழில் ரகசியமாக வைத்திருக்க விரும்புவதால் மொத்தம் எத்தனை ஓட்டு விழுந்தது என்பது கடைசிவரைத்தெரியாது. மக்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம்! அது எப்படி? இது என்ன போட்டி? எவ்வகை விதிகளும் பொதுமைக்கு, நேர் பார்வைக்கு வராமல்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ் 3. படு சொதப்பல்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-5792542103729397806?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/5792542103729397806/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=5792542103729397806' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/5792542103729397806'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/5792542103729397806'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2011/09/blog-post_23.html' title='இந்தியத்தனமான இசைநிகழ்ச்சி'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-1470651610892301746</id><published>2011-09-08T07:47:00.001+09:00</published><updated>2011-09-08T08:54:10.998+09:00</updated><title type='text'>ஜவ்வாக இழுபடும் சூசி 3</title><content type='html'>சூசி 3 அல்லது சூப்பர் சிங்கர் 3 எனப்படும் தமிழகத்தின் சிறந்தகர் பாடகர் தேர்வுப் போட்டியின் 3ம் பருவம் பல சமயம் வேண்டுமென்றே இழுக்கப்படுகிறது எனும் உணர்வைத்தருகிறது. உவப்புச் சீட்டு சுற்றில் (Wild card round) ஒரு வாரம் இவர்கள் தம் திறமையைக் காட்டினால் போதாதா? இரண்டாவது வாரம் எதற்கு? முதல் வாரத்திலேயே தெரிந்து விட்டதே அத்தனையும் தங்கமென்று. இவர்களை அடுத்த வாரமும் துன்பப்படுத்தி, அவர்கள் பட்ட கஷ்டத்தை பிலிம் போட்டுக் காட்டி...ஏதோ தெருவோர பிச்சைக்காரி ஒரு பிள்ளையை (அது அவள் பிள்ளையாகக் கூட இல்லாமல் இருக்கலாம்) இடுப்பில் தூக்கிக்கொண்டு பிச்சை எடுப்பது போல் உள்ளது. அதற்கென்று அந்த ஷாட் எல்லாம் கருப்பு, வெள்ளையில் எடுத்திருக்கிறார்கள் :-)&lt;br /&gt;&lt;br /&gt;வேறு எந்த நாட்டிலும் நடக்காது! நீதிபதிகளே போட்டியாளர்களுக்கு ஓட்டுக் கேட்பது! முன்பு தோற்றுப்போன போட்டியாளர்கள் வந்து ஓட்டுக் கேட்பது. அது மட்டுமல்ல, ஒரு போட்டியாளருக்கு என்றில்லாமல் பல போட்டியாளர்களுக்கு ஒருவரே ஓட்டுப்போடச் சொல்வது. இவையெல்லாம் திட்டம் ஏதுமில்லாமல் ஏதோ நிகழ்ச்சியை இழுக்க வேண்டுமென்று செய்வது &amp;nbsp;வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. மேலும் நீதிபதிகளை இஷ்டத்திற்கு மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். தன்யா ஒருமுறை சொல்லியவாறு, ஸ்ரீநிவாஸ், உன்னி, சுஜாதா என்று எண்ணி பாடலை தயாரித்து வந்தால் அங்கு வேறொரு செட் உட்கார்ந்து இருக்கிறது! எதிலுமே ஒரு தரக்கட்டுப்பாடு இல்லை (no standardized protocol). மக்களிடம் ஓட்டுக்கேட்கிறார்கள், பின் நீதிகளின் மார்க்கு எதற்கு? அநேகமாக இறுதிச் சுற்று என்று சொல்லிவிட்டு, மீண்டுமொரு அரையிறுதிச் சுற்று போல் நான்கு பேரைப் பாடவிடப்போகிறார்கள் என்று தெரிகிறது. மக்கள் தீர்ப்பாக ஒருவர், நீதிபதிகள் தேர்வாக ஒருவர். இது எப்படியும் சாய் சரணை இறுதிச் சுற்றில் நிற்க வைக்கும் முயற்சியாக இருக்கலாம். பூஜா, சத்யா இருவரும் அரையிறுதி வென்று விட்டோம் என்று மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் நடக்கப்போவது இறுதிப்போட்டி அல்ல. மீண்டுமொரு அரையிறுதிப் போட்டியே. இல்லையெனில் இறுதிப்போட்டியில் நான்கு பேர் போட்டி போடுவார்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;Shame on you Vijay!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரத்தில் நடந்திருக்கும் சில நன்மைகள். ஹரிஹரசுதன், ‘வெறிஹரசுதனாக’ மாறி வெளுத்துக்கட்டுவது! அவனது பெரியம்மா முதன்முறையாக அரங்கில் கலந்து கொண்டு பிள்ளைக்கு ஓட்டுக்கேட்பதுடன் அவனைக் கலாய்வது! மாளவிக்காவின் அம்மா பச்சைப்புடவை கட்டாமல் வருவதுடன், மாளவிக்காவைக் கலாய்வது! சாய்சரணைப் பார்த்தால்தான் பாவமாய் உள்ளது!&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்..எல்லோருமே ஒருவகையில் பாவம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="345" src="http://www.youtube.com/embed/L8TEOVHDYwE" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-1470651610892301746?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/1470651610892301746/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=1470651610892301746' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/1470651610892301746'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/1470651610892301746'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2011/09/3_08.html' title='ஜவ்வாக இழுபடும் சூசி 3'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/L8TEOVHDYwE/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-7029038996766580427</id><published>2011-09-03T15:37:00.000+09:00</published><updated>2011-09-03T15:37:27.586+09:00</updated><title type='text'>பிரம்மிக்க வைக்கும் பாடல்கள்! (சூப்பர் சிங்கர் 3)</title><content type='html'>சூப்பர் சிங்கர் பற்றிப்பேசியது போதும் என நினைக்கும் தருணத்தில் ஒரு அற்புதமான தயாரிப்பு நேற்று (செப்டம்பர் 2 வெள்ளி).&lt;br /&gt;&lt;br /&gt;இப்போட்டியாளர்களைக் கண்டால் வேடிக்கையாக உள்ளது. இத்தனை காலமும் கிண்டலும், வேடிக்கையும் என்று கழித்துவிட்டு இப்போது உசிரைக் கொடுத்துப் பாடி நம்ம உசிரை ஏன் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை! :-)&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளியன்று நடந்திருக்கும் அற்புதம் சூப்பர் சிங்கர் மேடையில் இன்னொருமுறை நடக்குமா? என்று தெரியவில்லை. உண்மையிலேயே போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தன் முழுத்திறமையையும் காட்டியுள்ளனர் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக சாய்சரண் தன் குரலையே பணயம் வைத்துப்பாடியிருக்கும் பாடல் இதோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="345" src="http://www.youtube.com/embed/JxeiuznYCeg" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சாய்சரண் நிறையப் பாராடும் புகழும் பெற்றுவிட்டார். அவர் இனிமேல் சூப்பர் சிங்கர் என்ற பட்டம் இவர்கள் கொடுத்துத்தான் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. அவர் சூப்பர் சிங்கர்தான். இந்த ஒரு நிகழ்வே போதும் சான்று சொல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று கட்டை ஸ்ருதியில் மேல் நிஷாதம் பாடுவது வேடிக்கை விஷயமில்லை என்று திரு.மகாராஜன், நித்யஸ்ரீ போன்ற பாடகர்களையே நிற்க வைத்து கைத்தட்டுப்பெற்ற ஸ்ரீநிவாசின் நிகழ்வு அற்புதத்திலும், அற்புதம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="345" src="http://www.youtube.com/embed/azyF6ER2m60" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அவர் இப்போட்டிக்காக எப்படி தன் திருமண நிகழ்வில் கூடக் கலந்து கொள்ளவில்லை என அவரது இளம் மனைவி சொல்லும் போது அப்படியே பிரம்மித்துப் போகிறோம். இவர்களை இசை ஆட்கொண்டு நிற்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வெறும் ஒரு அல்ப சினிமாப்பாடகன் என்ற நோக்கிற்காகவா இத்தவம்? கேள்வி எழுகிறது. அவர்களை ஆட்கொண்டிருக்கும் இசைத்தேவியே இவர்களை &amp;nbsp;நல்வழிப்படுத்தட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் அக்ஷரங்களை வைத்தே ஒரு பாடல்! நான் முன்பு கேட்டதே இல்லை. என்னென்ன வித்தையெல்லாம் செய்கிறார்கள் இசையில்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="345" src="http://www.youtube.com/embed/K4ZLWVdJQeA" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கோபி கடைசியில் கேட்பது போல் நானும் எங்காவது இரண்டு சேர்ந்த வரிகள், ‘ராகம், தானம், பல்லவி’ யில் வருவது போல் வருமென்று எதிர்பார்த்தேன். ஊகூம்! வெறும் அக்ஷரங்கள் அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராகங்கள் தன்னை எவ்வவ்வகைகளில் காட்டிக்கொள்கிறது என்பது பிரம்மிப்பூட்டுகிறது! நாம் ராக ஆலாபனை செய்து ராகப்பரிட்சயம் செய்து கொள்கிறோம். துருபத் எனும் ஹிந்துஸ்தாணி இசையில் ராகங்களுக்கு இடைப்பட்ட வெளியில் சஞ்சாரிக்கிறார்கள். பாரதி, ‘காற்றுவெளியிடை’ என்று சொல்வது போல். அது ராகவெளியிடை!!&lt;br /&gt;&lt;br /&gt;இசை என்பது ஓர் அற்புத உலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-7029038996766580427?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/7029038996766580427/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=7029038996766580427' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/7029038996766580427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/7029038996766580427'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2011/09/3_03.html' title='பிரம்மிக்க வைக்கும் பாடல்கள்! (சூப்பர் சிங்கர் 3)'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/JxeiuznYCeg/default.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-3632838888022279821</id><published>2011-09-03T12:12:00.000+09:00</published><updated>2011-09-03T12:12:41.912+09:00</updated><title type='text'>உனக்கும் பெப்பே! உங்கப்பனுக்கும் பெப்பே!</title><content type='html'>தமிழகத்தின் சிறந்த பாடகர் மூன்றாம் பருவம் சில உன்னதங்களைக்காட்டி இருக்கிறது.&lt;p&gt;அது என்னவெனில், யார் சிறந்த பாடகர் என்பதல்ல. யார் சிறந்த மனிதர் என்பதே! இந்த ஒரு அம்சத்தில் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி உலகில் எங்குமே காணாத அதிசயத்தை நிகழ்த்திக்காட்டியிருக்கிறது. ஆனால் இந்தப் பெருமை அவர்களை முழுக்கச் சாராது. அதுவொரு தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான். அங்கு வந்து சேர்ந்த போட்டியாளர்கள் இதை மிக நன்றாகப்பயன்படுத்திக்கொண்டு தன்னை நல்ல பாடகனாக உருவாக்கிக்கொண்டு, இவர்கள் பேசும் போட்டி என்பதை ஓரங்கட்டிவிட்டு ஒரு தோழமைப் பூங்காவை அங்கு உருவாக்கிவிட்டனர். பாவம் நிருவாகம் எவ்வளவோ முயன்று ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்க முயல்கிறது. ஆனால் போட்டியாளர்கள் எல்லோருக்கும் பெப்பே சொல்லிவிட்டு படு ஜாலியாக இருக்கிறார்கள். விஜய் தொலைக்காட்சியின் பெயரில் பெரிய பார்ட்டி அங்கே நடந்து கொண்டு இருப்பதுதான் உண்மை. இது நட்புணர்விற்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு.&lt;p&gt;இதற்குப்பின்னால் ஸ்ரீநிவாஸ், சக்தி இவர்கள் உருவாக்கிய அறுவர் குழு முன்னுதாரணம். பக்கபலம், சௌந்தர்யா. பின்னால் பூஜாவும், மாளவிகாவும் கூட்டு சேருகின்றனர். பூஜா சில நேரங்களில் நட்பிற்காக தனது போட்டி ஸ்தானத்தை விட்டுக்கொடுக்கிறார். இவர்களின் குட்டி செல்லம் தன்யஸ்ரீ.&lt;p&gt;இல்லையெனில், உலகில் வேரெங்கும் இம்மாதிரிப்போட்டிகளில் பங்கு கொள்வோர் மற்றொரு போட்டியாளருக்கு மிக ஆதரவாக நடந்து கொள்ளவே மாட்டார்கள். பாருங்களேன், தன்யஸ்ரீ ஊக்கச் சீட்டு (வைல்ட் கார்டு) சுற்றில் மிக அற்புதமாகப் பாடியவுடன் தனது உயர்ந்த பீடத்திலிருந்து ஓடி கீழே வந்து தன்யாவைக் கட்டிக்கொள்வது நடந்திருக்காது. இவர் கீழேயிருந்து ஐ லவ் யூ சொல்ல அவர் மேலேயிருந்து ஐ லவ் யூ சொல்ல!! &lt;p&gt;இப்படிச் செய்வதற்குக் காரணம் போட்டியாளர்கள் அனைவருக்கும் இசையின் நுணுக்கங்கள் பிடிபட்டுப்போனதுதான். இசை அற்புதமாக அமையும் போது தன்னிலை மறந்து பாராட்டுகிறார்கள். பாருங்களேன், போட்டியாளர்களின் மிகச்சிறந்த ரசிகர்கள் மற்ற போட்டியாளர்கள்தான். ஒவ்வொரு நுணுக்கமான சங்கதிகளை மற்றவர் பாடும் போதும் சந்தோஷ் அனுபவிக்கும் மகிழ்ச்சியை என்னவென்று சொல்வது? அப்படி அனுபவிக்கிறார்கள் எல்லோரும்! அதுதான் வேண்டுவது. அதுதான் சாஸ்திரீய சங்கீதம் நமக்குத்தரும் பாடம். இசை நம் அன்னை போன்றவள். அவளின் அழகை வெவ்வேறு வகையில் ஒவ்வொருவரும் பாடும் போது ஒரு உண்மையான கலாரசிகன் ரசித்து மகிழ வேண்டும். அதை மிகச்சரியாகப் போட்டியாளர்கள் உணர்ந்து மகிழ்கிறார்கள்..&lt;p&gt;ஹரிஹரசுதனின் அண்ணன் சொல்கிறார். என் தம்பி போட்டிக்காகப்பாடவில்லை. உங்களை மகிழ்விக்கப்பாடுகிறான் என்று. அதுதான் இசையின் அடிப்படையே! அங்கு போட்டி என்பதைவிட மனிதாபிமானm வெல்வதைக் காண்கிறேன் நான். &lt;p&gt;தன்யஸ்ரீயின் மாமா சொல்கிறார், தன்யா தனது பள்ளிப்படிப்பைகூட இந்நிகழ்ச்சிக்காக அர்ப்பணம் செய்துவிட்டு வந்து பாடுவதாக. எனவே அவள் உங்கள் வீட்டுப்பிள்ளை என்று!&lt;p&gt;என்னைப் பொறுத்தவரை இவர்கள் என்னதான் போட்டி, போட்டி என்று கூவினாலும் போட்டியாளர்கள் மிகத்தெளிந்த மதியுடன் ஒருவருக்கொருவர் மிக்க நட்புடன் கூடி வாழ்கிறார்கள் என்பதே உண்மை!. நேற்றுக்கூடப் பாருங்கள், அந்த சிங்கப்பூர் அம்மா தன்யஸ்ரீக்கு அட்டை காட்டுகிறார்கள். மேல்தளத்தில் இருந்து கொண்டு பூஜாவும், சத்யபிரகாஷும் தன்யாவிற்கு அட்டை காட்டுகின்றனர். ஒருவகையில் இந்தப் போட்டி சமாச்சாரத்தை இவர்கள் வலுவாக நக்கலடிக்கின்றனர். சந்தோஷ் முன்னமே சொல்லிவிடுகிறாரே நான் அடுத்த ரவுண்டில் அவுட்டு என்று. நீதிபதி ஸ்ரீநிவாஸ் சப்பைக்கட்டு கட்டப்பார்க்கிறார். என்ன சொல்லி என்ன பயன்? &lt;p&gt;இந்த நிகழ்ச்சியின் பலம், நீதிபதிகளோ, அமைப்பாளர்களோ அல்ல, மாறாக போட்டியாளர்கள்!!  இதை நன்கறிந்து போட்டியாளர்கள் நிகழ்ச்சியைக் கடத்திக்கொண்டு போனதுதான் நடந்திருக்கிறது. உனக்கும் பெப்பே! உங்கப்பனுக்கும் பெப்பே!! என்று இளித்துக்காட்டுவது போல் படுகிறது. இல்லையெனில் ஊக்கச்சீட்டு என்று ஒன்றைக் கொண்டு வந்து அத்தனை சிறந்த பாடகர்களையும் ஏன் மீண்டும் முன்னிருத்த வேண்டும்?&lt;p&gt;என்னப்பொறுத்தவரை சத்யாவையோ, பூஜாவையோ தமிழகத்தின் ஒரு சிறந்த பாடகர் என்று முடிவெடுப்பது படுபோலித்தனம். இதைப் போட்டியாளர்களும் ஒத்துக்கொள்வார்கள். மிகத்தெளிவாக ஐந்து ஆறுபேர் தென்படுகின்றனர்.&lt;p&gt;பூஜா - பி.சுசீலா போன்ற குரல்.  எவ்வகையான பாடல் என்றாலும் சோபிக்கிறார்.&lt;p&gt;சத்யா - தேன் போன்ற குரல். எவ்வகையிலும் சோபிக்கும் பாடகர். ஆயினும் இவரை குத்து, வெட்டு என்று போட்டு அவஸ்தைப்படுத்தக்கூடாது! &lt;p&gt;கௌசிக் - அன்னையின் உந்துதலில் நல்ல பயிற்சி பெற்றுத் தேறிய மிக நல்ல பாடகர். எல்லாவகைப்பாடலையும் பாடக்கூடியவர். &lt;p&gt;சந்தோஷ் - அற்புதமான, தோழமை உள்ளம் கொண்ட மிகச்சிறந்த பாடகர்.  &lt;p&gt;பிரவீன் - ஒரு ஷோமேன். இவருக்கு நல்ல exposure சிங்கப்பூரில் கிடைப்பதால் இத்திறமையை நன்கு வளர்த்துக் கொண்டுள்ளார். இவரைக் காப்பியடித்து நம்மவர்களும் கொஞ்சம் ஷோ காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.பிரவீனின் பலவீனம் உச்சரிப்பு. அவர் வீட்டில் தமிழ் பேசினால்தானே தமிழ் உச்சரிப்பு வரும். அவர் அம்மாவிற்கே தமிழ் தடுமாறுகிறது. பிறகு தமிழ், “தாய் மொழி” என்று எப்படிச் சொல்லமுடியும்?&lt;p&gt;ஸ்ரீநிவாஸ் - நல்ல பாடகர். எல்லாவகைப்பாடலும் கைவருவதில்லை. அதுவொரு குறை இல்லை. &lt;p&gt;மாளவிகா - இவரது குரல்தான் இவரின் எதிரி. இவருக்கு மட்டும் பூஜா, சௌந்தர்யா, மதுமிதா, மாதங்கி இவர்களின் குரல் வாய்க்கப்பட்டிருந்தால் இவரை அடித்துக் கொள்ள ஆளே இருந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு கடின உழைப்பாளி.&lt;p&gt;இவர்கள்  அனைவருமே நிச்சயம் மிகச்சிறந்த பாடகர்கள். எந்த அளவுகோளின் படியும். &lt;p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-3632838888022279821?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/3632838888022279821/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=3632838888022279821' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/3632838888022279821'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/3632838888022279821'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2011/09/blog-post.html' title='உனக்கும் பெப்பே! உங்கப்பனுக்கும் பெப்பே!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-5582813052287396596</id><published>2011-09-02T12:51:00.001+09:00</published><updated>2011-09-03T09:02:24.847+09:00</updated><title type='text'>சூப்பர் சிங்கர் 3 - அன்னையர் அணி மீண்டும்!</title><content type='html'>சூப்பர் சிங்கர் எனும் தமிழகத்தின் சிறந்த பாடகர் தேர்வின் மூன்றாம் பருவம் அரையிறுதியை எட்டிய தருணத்தில் போட்டியை மீண்டும் சுவாரசியமாக்க முதல் பல சுற்றில் தோற்றுப்போன ஆகச்சிறந்த பாடகர்களை மீண்டும் உலவவிட்டு இருக்கிறார்கள். இது விஜய் டிவியின் நேயர்களுக்கு கூடுதல் கேளிக்கையை அளிக்க உருவான திட்டம் என்று சொன்னாலும் இதன் பின்னாலொரு அழகான குடும்ப உணர்வு இருப்பதை அவதானிக்காமல் இருக்க முடியவில்லை. இந்த உணர்வு கலந்து கொண்டுள்ள பங்களிப்பாளர்களிடமிருந்து உருவானதா? இல்லை ஒவ்வொரு போட்டியாளரும் போகும் போது அழும் திவ்யாவின் பாசத்த்தால் உருவானதா? இல்லை, பங்களிப்போருக்காக உரிமையோடு பேசும் ஷைலஜா போன்ற அன்பான நீதிபதிகளிடமிருந்து உருவானதா? இல்லை விஜய் தொலைக்காட்சி இத்திட்டத்தை உருவாக்கிய போதே இதை எதிர்பார்த்தா? என்றால், என்னளவில் போட்டியாளர்களுக்குள் இருக்கும் தோழமை உணர்வை வேறு எந்த தேசத்திலும் இம்மாதிரியான போட்டிகளில் காண முடியாது என்றே சொல்வேன். தமிழ் மக்களிடம் இன்றும், இந்த 21ம் நூற்றாண்டிலும் நட்பு, அன்பு, அடக்கம், குரு மரியாதை என்பவை அப்படியே அழியாமல் இருக்கின்றன என்பதை சிறந்த பாடகர் 3 இன்று நமக்குக் காட்டுகிறது! பாருங்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவு தேடும் தாய்மார்களும் நண்பர்களும் மிகவும் நடு நிலையோடு, ‘உங்களுக்குப் பிடித்திருந்தால், என் பிள்ளைக்கு வாக்களியுங்க:” என்று சொல்வது இந்தியாவில் மட்டுமே நிகழக்கூடியது.&lt;p&gt;இதைவிட வேடிக்கை! இறுதிப்போட்டிக்கு தேர்வாகி பீடத்தில் இருக்கும் பூஜா கீழே ஓடி வந்து தன்யஸ்ரீயின் பாடலை அணைத்து ரசிப்பது. பூஜாவும், சத்யாவும் சேர்ந்து சந்தோஷுக்கு ஆதரவான அட்டையைத்தாங்கி விளம்பரம் கொடுப்பது? இது போட்டி என்பதை விட எல்லோரும் சேர்ந்து குடும்பமாக அனுபவிக்கும் ஓர் இசை நிகழ்ச்சி என்றே நிறுவுகிறது. இந்த அன்பைக் காணும் போது நம்மையறியாமல் நாமும் பங்கு கொள்கிறோம்.&lt;p&gt;ஆயிரக்கணக்கான போட்டியாளர்களிலிருந்து இன்று விரல் விட்டு எண்ணக்கூடிய போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர். நீதிபதிகள் மீது என்னதான் ஓரவஞ்சனைக் குற்றச்சாட்டுகள் வைத்தாலும், அவர்களின் தேர்வு மிகச்சிறந்ததாகவே வந்துள்ளதைக்காணமுடிகிறது. ஒருமுறை ஸ்ரீநிவாஸ் சொன்னது போல் இம்மாதிரி டிரில் வேறு எந்தப்போட்டியிலும் இருக்குமா? என்பது சந்தேகமே. தங்கத்தின் அழகு புடம் போட்ட பின்தான் தெரியும். அதை உறுதி செய்கிறது இந்த Wild Card சுற்று. Wild Card என்பதை நாம் ‘ஊக்கச்சீட்டு’ என்றழைப்போம். போட்டியாளர்களுக்கு ஊக்கம் தருவதற்காக விதிகளை கொஞ்சம் தளர்த்தி உருவான குறுக்குச் சாலை இது. மேலும் நேயர்களான நமக்கு ஒருவரைத் தேர்வு செய்யும் வாய்ப்பை அளிக்கும் ‘ஊக்கப்பரிசு’ என்றும் சொல்லலாம். &lt;p&gt;இந்த ஊக்கச்சீட்டின் மூலம் ஊக்கமிழந்து வாடிப்போன அன்னைகளுக்கு மீண்டுமொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. &lt;br&gt;ஜனரஞ்சகமான பாடல் தேர்வுகளுடன் தன் பிள்ளையான கௌசிக்கை தயார் செய்யும் அன்னை! &lt;br&gt;&lt;br&gt;பச்சைப்புடவை ராசியுடன் மாளவிகாவை உற்சாகப்படுத்தும் அன்னை! &lt;br&gt;&lt;br&gt;தந்தையின் அன்பிற்கு ஏங்கும் சாய் சரணைப் பெற்று, போற்றும் அன்னை! &lt;br&gt;&lt;br&gt;மிக அமைதியாக ஆனால் உறுதியாக தன்யஸ்ரீக்குப் பின்னால் நிற்கும் கூச்சமான அன்னை! &lt;br&gt;&lt;br&gt;தமிழராகப் பிறந்துவிட்டு, தமிழ் மரபைப் பேணும் ஆனால் ஆங்கிலத்திலேயே உரையாடும் பிரவீனின் சிங்கப்பூர் அம்மா! &lt;br&gt;&lt;br&gt;இவர்களுடன் இப்போது ஸ்ரீநிவாஸின் தாயும், மனைவியும் சேர்ந்து விட்டனர்!&lt;br&gt;&lt;br&gt;ஒரு பெரிய அன்னையர் அணி திரண்டு இருக்கிறது.&lt;br&gt;&lt;br&gt;இந்த ஊக்கச்சீட்டு சுற்றில் உண்மையிலேயே எல்லோரும் உயிரைக் கொடுத்துப் பாடுகிறார்கள்.&lt;p&gt;சாய்சரண், கௌசிக், மாளவிகா, தன்யா, பிரவீன்? இவர்களுள் ஒன்று தேறும். யார் என்பதுதான் கேள்வி!&lt;p&gt;பொதுமக்கள் எத்தனை ஓட்டு வேண்டுமானாலும் போடலாம் என்று கோபி சொல்கிறார். ஆனால் இணையத்தின் மூலம் மூன்று ஓட்டுகளுக்கு மேல் போட முடியவில்லை. உள்ளூரில் செல்போன் வியாபாரத்தைக் கூட்ட அப்படிச் சொல்கிறார்களோ என்னவோ? அதுவொரு அசட்டுத்தனமான முறை. யார் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் போடலாம் என்றால் எப்படி? அவர்களுக்கும் வேறு வழியில்லை. கள்ள ஓட்டையும் கணக்கில் எடுக்கும் உத்தி இது. ஊழலை கௌரவமாக வாழ்வியலாக மாற்றிவிட்ட தமிழனால் வேறு எப்படி சிந்திக்க முடியும்?&lt;p&gt;சிறந்த பாடகர் மூன்று தேர்வில் இணைய நண்பர்கள் கட்டாயம் பங்கு கொள்ள வேண்டும். இதுவரை பார்க்கவில்லை என்றாலும் இந்த ஒரு வாரம் மட்டுமாவது பார்த்து ஓட்டுப்போடுங்கள். இவ்வார நிகழ்ச்சியைக் காண &lt;a href="tarvijay-ssj.blogspot.com"&gt;இங்கே செல்க!&lt;/a&gt;&lt;p&gt;நிகழ்ச்சி பார்த்த பிறகு உங்கள் தெரிவைச் செய்ய &lt;a href="http://vijay.indya.com/supersinger-season3/vote.asp#myframe1"&gt;இங்கே செல்க!&lt;/a&gt;. இங்கு நீங்கள் முன் பதிவு செய்த பின்னரே ஓட்டளிக்க முடியும்!&lt;p&gt;ஒருமுறை ஸ்ரீநிவாஸ் சொன்னார். தேர்வைக் கடினமாக்குங்கள்! என்று. அவர்கள் இப்போது இல்லை. ஆனால் இந்தக் கடினமான தேர்வை நம்மிடம் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-5582813052287396596?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/5582813052287396596/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=5582813052287396596' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/5582813052287396596'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/5582813052287396596'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2011/09/3.html' title='சூப்பர் சிங்கர் 3 - அன்னையர் அணி மீண்டும்!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-8361061497547195892</id><published>2011-08-25T17:39:00.002+09:00</published><updated>2011-08-26T07:57:46.505+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Super Singer 3'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='semi-finals'/><title type='text'>சூப்பர் சிங்கர் 3 - அன்னையர் அணி</title><content type='html'>சிறப்புப்பாடகர் 3வது பருவத்தின் அரையிறுதிப் போட்டியின் முடிவுகள் வெளி வந்து விட்டன. எதிர்பார்த்தது போல் சத்யப்பிரகாஷும், பூஜாவும் தேர்வாகியுள்ளனர். ஒரு பெண் இறுதிவரை தாக்குப்பிடித்து நிற்பது இசை போன்ற கலைகளை இந்தியாவில் தக்க வைத்துக் காப்பவள் பெண் என்பதை ஊர்ஜிதம் செய்வதாக உள்ளது. மேலும் பூஜா தவறுகள் அதிகம் செய்யாத நிதானமான பெண். எப்பவும் முதல் மார்க்கை விட்டுக் கீழே இறங்காத மாணவியின் கவனத்தைச் சினிமாப்பாடல் பாடுவதிலும் காட்டுவது சிறப்பு. இப்போட்டியில் மிக அதிக தூரம் பயணப்படுபவர் பூஜா. ஹைதராபாத் எங்கிருக்கிறது, சென்னை எங்கிருக்கிறது? எப்படித்தான் இவர்களால் இதையெல்லாம் சாதிக்க முடிகிறதோ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போட்டி, எவ்வளவுதூரம் பெண், பிள்ளை களுக்கான போட்டியோ அந்த அளவிற்கு அவர்கள் பெற்றோருக்கான போட்டி என்பதும் தெரிகிறது. பெற்றோர் என்றாலும் அங்கு தந்தையின் பங்களிப்பு மிகக்குறைவாக உள்ளது. சத்யப்பிரகாஷின் தந்தை அரையிறுதிப்போட்டி முடிவு கண்டு நெகிழ்ந்து கண்ணீர் சிந்துவது ஒன்றுதான், தந்தையின் சீரிய பங்களிப்பாகப் பதிவாகிறது. அதில் கூட ஒரு அத்தையின் ஊக்கப்படுத்தல் தேவைப்படுகிறது. மேலும் சத்யாவின் வெற்றிக்குப்பின் அவன் நண்பர்கள் இருப்பதாக அவன் தந்தை கூறுகிறார். ஆக இது ஒன்றைத் தவிர மற்ற முதல் மூன்று போட்டியளர்களுக்குப் பின்னும், கௌசிக்கிற்குப் பின்னும் தாய்மார்களே நிற்கின்றனர். அதுவும் தந்தையின் ஆதரவு இல்லாத நிலையில் இப்பெண்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி பெறும் கனவுடன் உலவ விடுவது ஒரு காவியம் போல உள்ளது. (சக்திக்குப் பின் யாருமே இல்லாததும் வருத்தமளிக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="345" src="http://www.youtube.com/embed/7RVMW2lIji4" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சத்யா, சாய் வெற்றி கழுத்திற்குகழுத்துப் போட்டியாக அமைந்துவிட்டது. உண்மையில் சாய்சரணை விட சத்யாவிற்கு இயற்கையான பாடும் திறனும், குரலும் அமைந்திருந்தாலும் இப்போட்டி கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர் த்ன்னையே இறக்கிக் கொண்டுவிட்டார். போட்டி உச்சத்தை நெருங்க நெருங்க சொதப்பல்கள் அதிகமாவதை அவதானிக்க முடிகிறது. எந்தப் போட்டியாளரும் தன் சுபாவத்தில், இயற்கையாகப் பாடவில்லை! ஏதோ போட்டிக்குப் பாடுகிற மனோநிலையே நிற்கிறது. ஒரு பாட்டில் சாய் ஒரு வரியை மறந்துவிடுகிறார். முன்பு போல இருந்தால் நீதிபதிகள் ‘சலம்பி’ இருப்பர். ஆனால் அவர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. எரிகின்ற கொள்ளியில் எண்ணை வார்ப்பது போல் கோபியும், திவ்யாவும் அவ்வப்போது போட்டியாளர்களை பயமுறுத்துகின்றனர். அந்த 40 லட்ச முதல் பரிசிற்குப் பின் இத்தனை கஷ்டம் இருக்கிறது! &lt;br /&gt;&lt;br /&gt;இசை என்பது இயல்பாக வெளிவரும் ஆத்மாவனுபவம். அதைப் போட்டுக் கசக்கிப் பிழிந்து இவர்கள் படுத்தும் பாடு பாவமாக உள்ளது. அதுதான் கர்நாடக இசைக்கும், சினிமாவிற்கும் இடையே உள்ள வித்தியாசம். கர்நாடக இசை தனக்காக, தன் ரசிகர்களுக்காகப் பாடுவது. சினிமா இசை காசுக்காக, புகழுக்காகப் பாடுவது! இப்போது கர்நாடக இசையும் இந்த இழுப்பில் அவதிப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. எல்லோருக்கும் ஒரு ஐரோப்பா டூர், அமெரிக்கா டூர் போய் சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது. முன்பு போல், ஒரு ஜி. என். பி யோ, மணக்கால் ரங்கராஜனோ சமகால இசை உலகில் இல்லாததற்குக் காரணம் இசைக்குள் மூழ்கி முத்தெடுக்க வேண்டுமென்ற ஆசை தற்போது இல்லை. ஏதோ நாலு கீர்த்தனைகளைத் தெரிந்துவைத்துக் கொண்டு அதையே எல்லா இடங்களிலும் பாடிக்கொண்டு அலைகின்றனர். ரசிகர்களுக்கும் ரசிப்புத்தன்மை குறைந்து விட்டது. கேட்டால்தானே கிடைக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;சாய்சரணை விட இப்போட்டியில் தோல்வியுற்றதில் அவன் அன்னைக்கே இழப்பு அதிகமென்று தெரிகிறது. சாய்க்கு குரல் வளமில்லையென்றாலும் கடுமையான உழைப்பாளி. இருப்பதிலேயே நீதிபதிகள் சொல்வதை ஊன்றிக்கவனித்து பாடம் கற்றுக்கொள்வதில் சாய்க்கு நிகர் சாய்தான். வெறும் பாடகர் எனும் நிலைதாண்டி, இசை நிகழ்த்துபவர் எனும் நிலைக்குக் கற்றுக்கொண்டு உயர்ந்திருக்கிறார். எல்லோராலும் இது முடியவில்லை. குத்துப் பாட்டில் சாய் - பூஜா போட்டி போடும் போது இது தெளிவாகத் தெரிந்தது. பூஜா படித்து ஒப்பிப்பது போல் குத்துப்பாட்டைப் பாடினார். சாய் அனுபவித்துப் பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவகையில் இது அன்னையர் அணி. பூஜாவின் வெற்றிக்குப் பின் தந்தையின் ஆசீர்வாதம் இருப்பதாக அவர் தாய் சொல்கிறார். சாய்யின் வெற்றிக்குப் பின் அவர் தாயின் கடின உழைப்பு இருக்கிறது. கௌசிக் முழுக்க, முழுக்க அம்மா பிள்ளை. பச்சைப்புடவை இராசி நேற்று கைகொடுத்து மாளவிகா காட்டட்டை (wild card என்பதை எப்படிச் சொல்வது :-)யில் தேர்வாகியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக சூப்பர் சிங்கர் 3 என்பது இரண்டு நிலைகளில் கடும் போட்டியாக உள்ளது. முன்னணியில் போட்டியாளர்களும், பின்னணியில் அவர்கள் தாய்மார்களும் கலந்து கொள்கின்றனர். எனவே வெற்றி தோல்வியின் முடிவில் அன்னையர் வருந்துவது நமக்கு வருத்தமாக உள்ளது. சாய் சரண் அம்மா, இப்போட்டி அவனுக்கு இல்லாத `தந்தையை` அனந்த வைத்யநாதன், ஸ்ரீநிவாஸ் மூலம் அளித்தது என்று சொன்னது முள்ளாய் குத்தியது. எவ்வளவு வேதனையான சொற்கள் அவை. அன்னையர் எவ்வளவு தூரம் அவதிப்படுகின்றனர்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-8361061497547195892?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/8361061497547195892/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=8361061497547195892' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/8361061497547195892'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/8361061497547195892'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2011/08/3.html' title='சூப்பர் சிங்கர் 3 - அன்னையர் அணி'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/7RVMW2lIji4/default.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-6309320692996843956</id><published>2011-08-14T08:31:00.002+09:00</published><updated>2011-08-14T09:25:54.863+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Airtel Super Singer 3'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Malavika'/><title type='text'>ஏர்டெல் சிறந்த பாடகர்கள் நால்வர்</title><content type='html'>ஏர்டெல் சிறந்த பாடர்கள் 3ம் பருவத்தின் இறுதி வாரங்கள்! ஆயிரக்கணக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கடைசி 20 ஆகி, கடைசிப் பத்து ஆகி, அதுவும் குறைந்து கடைசி 5 ஆகி அதுவும் சுருங்கும் காலமிது. &lt;a href="http://starvijay-ssj.blogspot.com/"&gt;இவ்வாரச்சுற்றி&lt;/a&gt;ல் மாளவிகா வெளியேறுகிறார். வருத்தமாகத்தான் இருக்கிறது! மாளவிகா இறுதி 5 வரை வந்ததே பெரிய காரியம். மிகக்கடின உழைப்பாளி. முற்றும் முழுக்க கர்நாடக இசை என்று இருந்த பெண் இப்போது குத்து, பேட்டை ராப் என்றாகிவிட்டது. மடிசாரும் அதுவுமாக இருந்த தமிழ்ப்பெண் இப்போது ஸ்கர்ட், Prairie, Western Yoke Dress என்று மாறிவிட்டது. இசை மாறுவது போல்தானே மனிதர்களும். தொலைக்காட்சி தரும் கவன ஈர்ப்பு இப்போது உலகமெங்கும் மாளவிகா என்றால் யார் என்று தெரிகிறது! திரை இசை வாய்ப்பு வர வாய்ப்புள்ளது. கர்நாடக இசைக் கச்சேரிகளில் கூட இரண்டு சினிமாப்பாட்டு பாடியிருந்தால்தான் மதிப்பு என்றாகிவிட்டது. கடைசிச் சுற்றில் பாடிய ’ஆடாத மனமும் உண்டோ!’ அருமையான பாடல். அக்ஷரசுத்தமாக, தாள லயத்துடன் பாடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/Pmh_o3a-Tho" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாளவிகா ஏன் இறுதிவரை வர முடியவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;1. அவர் குரல் சினிமாக்குரல் இல்லை. மெல்லிசை பாடும் குரல் இல்லை. கொஞ்சம் கோவை சரளா போன்ற குரல். அது, ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே ஓர் கனவு கண்டேன் தோழி!’ போன்ற பாடலுக்கு ஒத்துவராது. ‘நாக்க, முக்கா’ வகை குத்துப் பாடல்களுக்கு சரிப்பட்டு வரும். ஆனால் அதைப்பாடுவதற்கு இத்தனை அருமையான கர்நாடக இசைப்பயிற்சி தேவை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. இவரது தோழியும், சக போட்டியாளருமான பூஜாவுடன் ஒப்பிடும் போது இவரது குரலில் அழகில்லை. அவரைப் போல் இவர் தொடர்ந்து ஒரே தரமாகப் பாட முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3. இசை என்பதே மனிதனைப் போட்டா போட்டிகளிருந்து தளர்த்தி மெய் ஞானத்துள் செலுத்த வேண்டிய கருவி. அதையே போட்டா போட்டிக்குப் பயன் படுத்தும் போது சிலரால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிகிறது. திரும்பத்திரும்பச் சொன்னாலும், 40 லட்சம் வீடுதான் இவர்களை ஓட்டிக்கொண்டு போகிறது என்று சொல்ல முடியாது. போட்டியில் கிடைக்கும் புதிய உறவுகள், தோழமை, அவ்வப்போது கிடைக்கும் பரிசுகள், பாராட்டுகள், பெரிய இடத்து அறிமுகங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக தொலைக்காட்சி தரும் ‘உலகக் கவனம்’ இவையே போட்டியாளர்களை தொடர்ந்து ஓடவைத்துக் கொண்டிருக்கும் காரணிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் 5 வரையாவது வந்துவிட்டால் போதும் என்பதே அவர் அன்னையின் கனவாக இருந்திருக்கிறது. அதை மாளவிகா நிறைவேற்றி விட்டார். நீதிபதிகளுக்குள்ளும் ஒரு குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மையுண்டு. அது அவர்கள் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லையெனும் ஆதங்கம். இது உன்னி, நித்யஸ்ரீக்கு இருக்க நியாயமில்லை. ஆனால் ஸ்ரீநிவாசுக்கும், சுஜாதாவிற்கும் இருக்க வாய்ப்புள்ளது. ஆரம்ப கட்டங்களில் மாளவிகா தேர்வாக அது நிச்சயம் உதவி இருக்கிறது. அதே நேரத்தில், சினிமாப்பாடகர்களுக்கே உரிய ஓர் உயர்வு நவிற்சிப் போக்கு இறுதியில் கர்நாடக சங்கீதத்தைக் கீழே வைத்துவிடும். அதுதான் நடக்கிறது. நல்ல மாட்டுப்பெண் மாமியாரிடம் மாட்டிக்கொள்வது போன்ற நிலை. எப்போது பார்த்தாலும் ஏதாவது குற்றம் காணும் மாமியார் போலவே நீதிபதிகள் தொடர்ந்து அவளது கர்நாடக இசைப்பின்னணியை வம்பிற்கு இழுத்துக்கொண்டே இருந்தது பதிவாகி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;200 சொச்சம் மார்க்கில் தீர்வுகள் நடந்திருக்கின்றன. அது என்னவென்று புரியவில்லை. நாள் 1 என்பதிலிருந்து கணக்கில்லை. அவ்வளவுதூரம் கவனமாக உருவான நிகழ்ச்சியல்ல இது. அவ்வப்போது நீதிபதிகள் மாறிய வண்ணம் இருந்தனர். யாரும் கணக்கு வைத்ததாகத் தெரியவில்லை. சென்ற வருடத்தில் 45 முழு வாரங்கள். வாரத்திற்கு 10 என்றாலும் 450 மார்க்குகள் கணக்கில் வர வேண்டும் (ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடிக்கொண்டு இருக்கிறது). முதல் 20 லிருந்து கணக்கு என்றால் இன்னும் குறையும். இவர்கள் கொடுக்கும் கணக்கு ரெண்டு கெட்டானாக உள்ளது! ஏதோவொரு கணக்கு. தமிழகத்தில் எதற்கும்கணக்குக் கேட்டால் வம்பு :-)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு போக்கு தெரிகிறது. 5ல் முதலில் வெளியேறுபவர் மாளவிகா. அடுத்து சந்தோஷ். அடுத்து சத்யா. இறுதியாக சாய் சரணும், பூஜாவும் மோதுவர். அப்படி அமைந்தால் பூஜா வெல்வதற்கு வாய்ப்பு அதிகம். அதற்குப் பதில் பூஜாவும் சத்யப் பிரகாஷுமென்றால் சத்யா வெல்வதற்கு வாய்ப்புகள் அதிக. கர்நாடக சங்கீதக் காழ்ப்பு என்பது பின்னால் வேலை செய்தால் பூஜாவை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. ஏனெனில் சத்யாவும், சாய் சரணும் கர்நாடக இசை பயில்பவர்கள். சரி பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் அதிகமிருந்த போது ஜாலியாகக் கூத்தடிக்க முடிந்தது. நாலைந்து பேரை வைத்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்தும் போது கேளிக்கை காட்ட வலிந்து பல வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. அது விஜய் தொலைக்காட்சியின் ஆக்கசக்திக்கு சவால். எப்படியோ இதுவரை சமாளித்து இருக்கிறார்கள். இனிமேலும் சமாளிப்பார்கள். ஆங்கிலமும், தமிழும் கலந்தடிக்கும் திவ்யா கூட இப்போதெல்லாம் முதலில் இறை வணக்கம் சொல்லும் பௌயத்துடன் நாலு நல்ல தமிழ் பேசுவது காதிற்கு குளிர்ச்சியாக உள்ளது. தமிழைத் தெய்வம் போல் இனிக் கோயிலில்தான் காண வேண்டும் போல! நல்லவேளையாக கோயில் குருக்கள் இன்னும் ஆங்கிலத்தில் பூஜை செய்யவில்லை. அதுவும் ஒருநாள் வரலாம்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-6309320692996843956?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/6309320692996843956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=6309320692996843956' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/6309320692996843956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/6309320692996843956'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2011/08/blog-post_14.html' title='ஏர்டெல் சிறந்த பாடகர்கள் நால்வர்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/Pmh_o3a-Tho/default.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-8668856212706483265</id><published>2011-08-09T12:29:00.002+09:00</published><updated>2011-08-09T12:39:26.587+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Super Singer 3'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='parent&apos;s contribution'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='top 5 celebration'/><title type='text'>ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்</title><content type='html'>ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்&lt;br /&gt;சான்றோன் எனக்கேட்ட தாய்&lt;br /&gt;&lt;br /&gt;எனும் குறள் மிகவும் பொருளுள்ள குறள். தமது குழந்தைகள் பேரும் புகழும் பெற்று நிற்கும் போது அடையும் பெருமைக்கு ஈடு, இணை கிடையாது. என் பெண் வளரும் ஒவ்வொரு பருவத்திலும் இதை நான் உணர்ந்திருந்த போதிலும் இம்முறை அவள் வேல்ஸ் பல்கலைக்கழகமொன்றில் மிகச்சிறப்புடன் பட்டப்படிப்பு முடித்ததும், அந்த ஆண்டின் மிகச்சிறந்த ஆய்விற்கான பரிசைப் பெற்றதும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், சக மாணவர்களும் அவளை மகளாகப் பெற்ற காரணத்திற்காக எங்களை வாழ்த்திய போதும் உணர்ந்தேன். அதே உணர்வை இங்குள்ள தாய்மார்கள் தங்கள் பெண், பிள்ளைகள் தமிழகத்தின் ஆகச்சிறந்த 5 பாடகர்கள் தகுதியை அடைந்த போது பெற்றதை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டபோது கண் கலங்காமல் இருக்க முடியவில்லை. இங்குள்ளோரின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னும் சலிப்படையாத தாயுள்ளம் இருப்பது, ‘இறைவன் நம்முடன் இருக்கிறான் என்பதை நிரூபணப்படுத்தும் நிகழ்வு. கௌசிக்கின் அன்னை இல்லாத குறைதான்! இந்தப் பொழுதிற்காக மிகவும் பாடுபட்டவர். எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="640" height="390" src="http://www.youtube.com/embed/dWXR5VSVquA" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-8668856212706483265?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/8668856212706483265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=8668856212706483265' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/8668856212706483265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/8668856212706483265'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2011/08/blog-post_09.html' title='ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/dWXR5VSVquA/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-1915049793324279122</id><published>2011-08-07T21:28:00.004+09:00</published><updated>2011-08-07T21:41:15.641+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='A touch of Hope'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='film review'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='TV Drama'/><title type='text'>நம்பிக்கையின் ஸ்பரிசம்</title><content type='html'>&lt;embed id=VideoPlayback src=http://video.google.com/googleplayer.swf?docid=-4887568806159519741&amp;hl=en&amp;fs=true style=width:400px;height:326px allowFullScreen=true allowScriptAccess=always type=application/x-shockwave-flash&gt; &lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இக்கதை ஒரு புத்தகமாக வந்தது!அப்புதகம் பற்றிய ஆங்கில முன்னுரை இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;This true story of an ordinary man with the extraordinary power to heal is "a must read" (Jack Canfield, coauthor of Chicken Soup for the Soul)-and includes illustrated exercises to help readers share the power. In 1972, a young man named Dean Kraft discovered his ability to heal with his hands. He was mystified by his own power-but he knew that, whatever its origin, it had to be used to help others. Since that time, he has practiced what is known as "laying on of hands"-first on family and friends, and later on an expanding client list including artists, medical professionals, and celebrities. His abilities have been tested by scientific experiments at the Lawrence Livermore Laboratory and the Science Unlimited Research Foundation-and in one fascinating study, in 1975, he was repeatedly able to kill deadly cancer cells, sealed in glass flasks...simply by holding the flasks in his hands. Now, with explicit instructions and line drawings, he reveals how others can practice hands-on healing-in the hope that suffering will be eased and lives will be renewed, in that remarkable place where science and miracles meet. &lt;br /&gt;&lt;br /&gt;"Tales of celebrity treatments...add sparkle to Kraft's story, but more compelling are the stories of ordinary folk pulled back from the brink of death." -Publishers Weekly&lt;br /&gt;&lt;br /&gt;இப்புத்தகம் பற்றிய நல்லதொரு விமர்சனம் இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;Curing paralysis, healing those with Lou Gherig's Disease (ALS), destroying cancer cells, even bringing people out of comas are among the accomplishments of this unique healer named Dean Kraft. Kraft, who is not a religion-based faith healer, has been simply laying his hands on people's bodies for over 25 years and healing them of medical ailments. No one, including the author himself, is certain as to why or how the curing exactly happens, but he believes it may have to do with the mind-body connection, noting that many of his patients present symptoms after drastic, emotionally-charged life changes. Kraft tells story after story of people with debilitating diseases as well as previously incurable chronic medical conditions that have mysteriously receded at the "laying-on-of-hands" technique that Kraft uses, which incorporates detailed and vivid visualization.&lt;br /&gt;Much of Kraft's work has been indirectly documented through patient medical tests. The most notable direct scientific study of his work appears in a study conducted by the Lawrence Livermore Laboratory, and later by the Science Unlimited Research Foundation. In this experiment Kraft killed HeLa cancer cells (known for their tenacity) by using his healing technique on the sealed glass flasks holding the cancerous cells. Whether you are a believer or a skeptic, the fascinating accounts of healing in A Touch of Hope are sure to make you ponder the mysteries of our minds and our bodies. --Karen Karleski --This text refers to the Hardcover edition.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நான் ஆக்ஸ்போர்டு போயிருந்த போது திருமதி.ரீட்டா பாத்திமாஹரன் என்னிடம் ஒரு கதை சொன்னார். அவரது ஒன்றுவிட்ட சகோதரி ஒரு கார் விபத்தில் மாட்டிக்கொண்டு நினைவிழந்து கோமா நிலையில் ஆக்ஸ்போர்ட் மருத்துவ மனையில் இருந்த போது அங்குள்ள தாதிகள் இவரிடம் தமிழ் கற்று தினமும் அவருடன் தமிழில் பேசினராம். இவரது வீட்டில் தொடர்ந்து எல்லா சமயத்தைச் சேர்ந்தோரும் பிரார்த்தனை செய்த பின், ஒரு நாள் இலங்கையில் அவரது பிறந்த ஊர் மாதா கோயிலிருந்து பிரசாதத்துடன் ஒருவர் வர, இந்து ஆலயமொன்றில் பிரார்த்தனை செய்த மலர்களுடன் இன்னொருவர் வர, தாதிகள் அப்பெண்ணின் மகனிடம் தாங்கள் உரத்த குரலில் தாய் மொழியில் பேசுங்கள் என்றனராம். அவரும் உறக்க அம்மாவைக் கூப்பிட, ரீட்டா ‘அக்கா, அக்கா’ என்று கூப்பிட சட்டென அவருக்கு நினைவு வந்து எழுந்துவிட்டாராம்! அவருக்கு தாம் 18 நாட்கள் கோமாவில் இருந்தது துளியும் நினைவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் தெரிந்து கொள்ளாத பல பழுப்புப் பரப்புகள் (grey area) உள்ளன. இப்படத்தை பார்த்து முடித்த கையோடு எழுதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imdb.com/title/tt0207798/"&gt;A Touch of Hope (TV 1999)&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-1915049793324279122?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/1915049793324279122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=1915049793324279122' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/1915049793324279122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/1915049793324279122'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2011/08/blog-post.html' title='நம்பிக்கையின் ஸ்பரிசம்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-9026075959336729304</id><published>2011-08-06T20:16:00.003+09:00</published><updated>2011-08-06T20:54:13.524+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Super Singer 3'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='top 5 round.'/><title type='text'>ஏர்டெல் சிறந்த பாடகர் மேல்தேர்வு 5</title><content type='html'>ஏர்டெல் சிறந்த பாடகருக்கான தேர்வு கடை ஆறிலிருந்து ஐந்திற்கு நழுவும் காட்சி! 6 பேரும் மாற்றி, மாற்றி ஒவ்வொருவருடன் மோதி இறுதியாக கௌசிக் அல்லது மாளவிக்கா என்ற கேள்வியுடன் இந்த வாரம் முடிந்துள்ளது. இந்த அறுவரில் நிச்சயம் மாளவிகா வெளியேறிவிடுவார் என்று எண்ணியிருந்தது பொய்த்துப் போனது. அதற்கான காரணங்கள் தெரிந்த போது பெரிய மனித நாடகவே கட்டவிழ்ந்தது. நட்பு, திறமை, பயிற்சி, தாய்ப்பாசம், நடுவர் தேர்வு என்ற பல அங்கங்கள் கொண்ட ஒரு நாடகம் மேடையிருக்கிறது. இந்த வாரம் முழுமையும் காணப் போக வேண்டிய சுட்டி &lt;a href="http://starvijay-ssj.blogspot.com/2011/08/airtel-super-singer-3-05-08-2011.html"&gt;இங்கே!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிச் சுற்றில் கௌசிக்கும் மாளவிக்காவும் மோதும் காட்சி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/UXdxTetfw6k" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலைவாணி மீது நெஞ்சுருக ஒரு பாட்டுப்பாடி பூஜாவைத் தோற்கடித்துவிட்டார் மாளவிக்கா! இது எப்படி நடந்தது என்பதைத்தொடர்ந்து பார்த்து வந்தால்தான் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்! பூஜாவும், மாளவிகாவும் இணை பிரியாத் தோழிகள். பூஜாவின் நிலையோ முதல் நிலை! எனவே இச்சுற்றில் தோற்றாலும் பாதகமில்லை. இதை நான் எதிர்பார்த்தேன். நடுவர் ஸ்ரீநிவாஸ்ஸும் இதையே சொன்னார். பூஜாவின் நிலையிலிருந்து பார்த்தால் இதுவொரு அழகான புரிதல் சார்ந்த விட்டுக்கொடுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குத்தோதாக கௌசிக் தனது கடைசி இரண்டு பாடல் தேர்வில் கோட்டை விட்டுவிட்டார். முதல்முறையாக நடுவர் ஸ்ரீநிவாஸ் சுட்டிக்காட்டினார். மிகவும் இராகம் சார்ந்த ஒரு பாடலை எடுத்துக் கொண்டு புரியாமல் தவிப்பதாக. கௌசிக் விழித்துக் கொள்ளாமல் அடுத்த பாடலையும் இது போன்ற இராகம் சார்ந்த பாடலாக எடுத்துக் கொண்டுவிட்டார். நடுவர்கள் சொல்லாவிடினும் பாடல் முழுவதும் உச்சரிப்புப் பிழைகள். அது முழுக்க, முழுக்க சமிஸ்கிருத மந்திரம் சார்ந்த பாடல் (ஓம்! சிவவோகம், ருத்ர நாமம் பஜே). இப்பாடலை இதே போட்டியில் முன்பு சாய் சரண், ஹரிஹரசுதன், ஸ்ரீநிவாஸ் மூவரும் தங்கள் கணீனென்ற குரலிலும் சுத்தமான உச்சரிப்பிலும் நடுவர்களுக்குக் காட்டி அசத்தியுள்ளனர். கௌசிக் அற்புதமான பாடகர். மாளவிகா சமமே இல்லை. ஆயினும் தோல்வியைத் தழுவிவிட்டார். எத்தனையோ எளிதான பழைய காலத்துப் பாடல்கள் உள்ளன. இவரது பாடல் தேர்வில் இவரது அன்னை பெரும் பங்கு வகிக்கிறார் என்பது உண்மை என்றாலும் ஒருமுறை அல்ல, இருமுறை அவரும் பிழை செய்து இருக்கிறார் என்றே தோன்றுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிக் காட்சி. இதுவும் சுவாரசியமானது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/nhbdUZwMdMY" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது பாடகர்களின் போட்டி மட்டுமல்ல. அம்மாக்களின் கனவுகளின் போட்டியும் கூட!எல்லோருமே, ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ தாய்மார்கள். ஈழத்துத் தாய்மார்கள் வந்த போது நடுவர்களுடன் சண்டையே போட்டிருக்கின்றனர். என் பெண் நோர்வே வந்த போது எஸ்.பி.பியோடேயே பாடியிருக்கிறாள் அவளை எப்படி வெளியேற்றப் போயிற்று என்று. இன்னொரு அம்மா, ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் தீர்ப்பளியுங்கள்@ என் கருத்தில் சிறந்த பாடகி என் பெண் மட்டுமே! என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். வேடிக்கையாக இவ்விழியத்தில் தன் மகனின் தேர்வில் இரண்டறக்கலந்து அனுபவிக்கும் ஒரு தாய்க்கும், இராசியான கலர் என்பதால் பச்சைப் புடவையோடும், மனது நிறை பிரார்த்தனைகளோடும் ஒவ்வொருமுறையும் வரும் ஒரு எளிய தாய்க்கும் போட்டி. இறுதியில் எளிய தாயின் பிரார்த்தனை வென்று விட்டது. வாணி உன்னைச் சரண் அடைந்தேன்! என்று கலைவாணி காலை கடைசியாகப் பிடித்த மாளவிக்கா வென்று விட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-9026075959336729304?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/9026075959336729304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=9026075959336729304' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/9026075959336729304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/9026075959336729304'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2011/08/5.html' title='ஏர்டெல் சிறந்த பாடகர் மேல்தேர்வு 5'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/UXdxTetfw6k/default.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-3446036875441608765</id><published>2011-05-07T12:18:00.001+09:00</published><updated>2011-05-07T12:20:20.547+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='super singers'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='multilingual'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Vijay TV'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='diaspora tamil'/><title type='text'>பன்மொழி பேசும் தமிழரும் பண்பட வேண்டிய தருணங்களும்!</title><content type='html'>நான் அதிகமாக தமிழகத்தின் தொ(ல்)லைக்காட்சிகளைக் கண்ணுறுவதில்லை. ஆக்கம் என்பது சுத்தமும் இல்லாத கழுத்தறுப்பு நிகழ்ச்சிகளே அதிகம் அங்கு என்பதால்! ஆயினும் அவ்வப்போது நெஞ்சுக்கு நீதி போல் சில நிகழ்ச்சிகள் அமைவதுண்டு. அப்படி அமையும் ஒரு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி நடத்தும் `சீர்மிகு பாடகர்கள்` (சூப்பர் சிங்கர்ஸ்) எனும் நிகழ்ச்சி. ஆங்கிலம் இனியும் அந்நியமொழி அல்ல, தமிழ் ஜீரணித்துவிட்ட மொழி என்பதை சூப்பர் சிங்கர்ஸ் எனும் தலைப்பே சொல்கிறது. அதைத் தனியாகத் தமிழ் பட்டுத்த வேண்டாம் எனும் மனநிலை. அதாவது சூப்பர் என்பது தமிழ்! சிங்கர்ஸ் என்பது தமிழ்! இதை நான் விமர்சிக்கவில்லை. தமிழ் வளர்ச்சியின் ஒரு கட்டமாகக் காண்கிறேன். மணிப்பிரவாளம் என்பது தமிழுக்குப் புதிதல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியின் மிக சுவாரசியமான விஷயம் என்னவெனில் உலகத்தமிழர்கள் முதன்முறையாகக் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. தமிழனின் உலகப்பரவல் என்பது ஈழத்தமிழர் இடப்பெயர்விற்குப் பிறகுதான் தமிழகத்தமிழர்களின் கவனத்தைப் பெறுகிறது. இராமேஸ்வரத்திலிருந்து தடிக்கி விழுந்தால் இலங்கை. ஆனாலும் ஈழத்து இலக்கியம் தமிழகத்தில் கவனம் பெற்றது அவர்கள் அயலகம் போன பின்னரே! அதே போல்தான் இப்போது நடக்கிறது. தமிழர்களின் திறமை எங்கெங்கலாமோ மின்னுகிறது என்ற உணர்வு இப்போதுதான் இங்கு (தமிழகத்தில்) தலை தூக்கி இருக்கிறது. முதன்முறையாக தமிழகம் ஈழத்தமிழர் பற்றிப் பெருமைப்படுகிறது. அவர்களும் சம அளவில் பங்கேற்கும் நிகழ்ச்சியாக சீர்மிகு பாடகர்கள் நிகழ்ச்சி அமைகிறது. ஆயினும் இது உண்மையான சமநிலையில் அமையும் நிகழ்வல்ல. ஈழத்தமிழர்கள் வெளிநாடு போன பின்னரும் தமிழ் பேசி, தமிழைத் தக்க வைத்து, தமிழ்ப் பண்பாட்டைப் பேணி, கோயில் கட்டி வழிபாடு செய்து, எளிதாக தமிழை மறந்துவிடக்கூடிய சூழலில் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவித்து இன்னும் தமிழராய் நிற்பது எவ்வளவு கடினமான செயல். ஆனால் தமிழகத்தில் சௌகர்யமான சூழலில் தமிழ் கற்று, பேசி, தமிழ்ப் பாடல் பாடி வருகின்ற குழந்தைகளுடன் வெளிநாட்டு ஈழத்தமிழர் போட்டி போட வேண்டுமெனில் அது சமனில்லாத போட்டி. ஆயினும் தமிழக ஊடகங்களின் ஏகபோக ரசிகர்களாக இன்று உலா வருவது வெளிநாட்டு ஈழத்தமிழர்களே. எனவே அவர்களும் தாங்கள் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசைப்படுவதில் ஆச்சர்யமில்லை. அதற்கொரு தளம் அமைத்துக்கொடுக்கும் விஜய் தொலைக்காட்சியைப் பாராட்ட வேண்டும். இதில் இன்னொரு சமனற்ற நிலையையும் காணலாம். வண்ணாரப்பேட்டையிலிருந்து ஸ்டூடியோவிற்கு வருவதற்கும் உலகின் வடகோடியில் இருக்கும் நார்வேயிலிருந்து வருவதற்கும் ஆகும் செலவு வித்தியாசம் கணக்கிடமுடியாதது. ஆயினும் ஈழத்துத்தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து போட்டியில் கலந்து கொள்வதை எப்படிப் பாராட்டினாலும் தகும்!&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை ஈழத்தமிழர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் ஒரு சர்வதேசச் சூழலை உருவாக்க பிறமொழிப்பாடல்கள் என்றொரு பிரிவை உருவாக்கி சோதித்து வருகிறார்கள். தமிழ்நாட்டவர்க்கு பிறமொழி என்றால் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி அவ்வளவுதான். ஆனால் தமிழின் reach இப்போது எங்கோ உள்ளது. அவனால் சரளமாக பிரென்ச், ஜெர்மன், டேனிஷ், நார்வீஜியன் பேசமுடிகிறது. அப்பாடலைப் பாடமுடிகிறது. ஆயினும் நீதிபதிகள் தமிழ்நாட்டுக்காரர்கள். அவர்களுக்கு இதே reach கிடையாது. எனவே கட்டாயம் இந்திய மொழிப்பாடல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆயினும், டைட்டானிக் படப்பாடலை ஆங்கிலத்தில் பாட அனுமதித்துள்ளனர். ஏனெனில் நான் முன்பு எழுதியமாதிரி ஆங்கிலம் அந்நியமொழி அல்ல. அது இந்திய மொழி அல்லது ஜீரணிக்கப்பட்ட கலப்பு மொழி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/VubdJcAtsv4" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும், இப்பாடலைப்பாடும் இலங்கைப்பெண் பிரான்சில் பிறந்து பிரென்ச் மொழியை முதன்மொழியாகக் கொண்டு வளர்ந்த பெண் என்பதால், இப்பாடலை பிரென்ச் மொழியிலும் பாடுகிறாள். நம்மவர்க்கு ஆங்கிலத்திற்குப் பிறகு கொஞ்சம் பிரென்ச் தெரியுமே! அதனால் பாராட்ட முடிகிறது. சூட்டிகையாயுள்ள ஐரோப்பிய குழந்தைகளுக்கேயுரிய திறமையுடன் இப்பெண் பல ஐரோப்பிய மொழிகள் பேசுகிறாள். இப்பெண்ணிற்கு ஸ்பானிஷ் மொழியும் வருகிறது. இதைப் பெருமையாகச் சொல்லும் அதே வேளையில் க்ஷீணித்துப்போன தமிழக நிலைமையும் எண்ணாமால் இருக்கமுடியவில்லை. ஒரு காலத்தில் வைணவக்குடும்பங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சகஜமாகப் புழங்கும். ஆழ்வார்களின் பாடல்களும் ஆச்சார்ய உரைகளும் தமிழிலிருந்து தெலுங்கு மொழிக்கு போயிருக்கின்றன. தமிழ் மொழித்தூய்மை எனும் ஒரு போக்கு வந்த பின் மொழி வெறுப்பு என்பது தமிழனின் குணமாகிப் போய்விட்டது நம் வறட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/r-KuGrO6X3E" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பன்மொழி பேசும் தமிழ்க் குமுகாயத்தின் பன்முகப் பரிமாணமாக இந்நிகழ்ச்சி நடப்பதற்கு இன்னொரு உதாரணம், ஹிந்தியில் பாடி நீதிபதிகளிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொண்டு (பாவம் இந்தப் பெண்ணிற்கு ஹிந்தி தெரிய வாய்ப்பே இல்லை!) பின் நார்வீஜியன் மொழியில் பாடும் போது அங்குள்ள எல்லோரும் ஆடிப்போய் விடுகிறார்கள். ஏனெனில் ஆங்கிலக் காலனித்து மனநிலை கொண்ட தமிழனுக்கு நார்வீஜீயன் பழக்கமில்லாத மொழி! ஒருங்கமைப்பாளர் ஒரே போடாக நார்வீஜீயன், ஸ்பானிஷ், பிரென்ச் எல்லாமே ஒரே மாதிரி ஒலிப்பதாகச் சொல்லிவிடுகிறார். ஆனால், இதில் ஆங்கிலத்தைச் சேர்த்துக்கொள்வதில்லை. ஏனெனில் ஆங்கிலம் நமக்கு அந்நியமில்லை!! (ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் எல்லாம் ஒரே மாதிரி ஒலிப்பதாக அக்குழந்தைகள் சொன்னால் நாம் ஒப்புக்கொள்வோமா? என்றும் யோசிக்க வேண்டும்!)&lt;br /&gt;&lt;br /&gt;நாம் விரும்பியோ, விரும்பாமலோ தமிழன் வாயில் இன்று உலக மொழிகள் எல்லாம் வருகின்றன. அவைகளைச் சரளமாகப் பேசுகிறான். அவன் நார்வீஜீயன் பேசிவிடுவதால், அதே வாயால் தமிழ் பேசும் போது தமிழின் தூய்மை கெடுவதாக நாம் நம்புவதில்லை. மாறாக வெளிநாட்டுக்குழந்தைகள் தமிழ் பேசினால் கேட்டு மகிழ்கிறோம், ஊக்குவிக்கிறோம். ஆனால், முரண்நகை போல் தமிழ் எழுதும் போது ஐந்தே, ஐந்து கிரந்த எழுத்துச் சேரும் போது குய்யோ, முறையோ என்று கதறுகிறோம். தமிழ் மொழியின் புனிதம்கெட்டுவிட்டது என்கிறோம். இது எவ்வகையில் நியாயம் என்று புரியவே இல்லை. இவ்வளவிற்கும் கிரந்தம் எனும் எழுத்துக் குறியீட்டை உருவாக்கியவர்கள் தமிழர்கள். அதனாலேயே கிரந்தம் ‘திராவிட லிபி’ (dravidian script) என்றும் அழைக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் இன்று `airport hoppers' எனும் சொலவிடைக்கு ஏற்ப நாடு விட்டு இயல்பாகத் தாண்டி ஓடும் நிலையில் உள்ளான். ஆனால் இதன் முழுப்பரிமாணமும் அறிய முடியாமல் பலர் இன்னும் கிணற்றுத் தவளைகளாகவே வாழ்கிறார்கள். இந்த இடைவெளி என்று சமனுறும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-3446036875441608765?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/3446036875441608765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=3446036875441608765' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/3446036875441608765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/3446036875441608765'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2011/05/blog-post.html' title='பன்மொழி பேசும் தமிழரும் பண்பட வேண்டிய தருணங்களும்!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/VubdJcAtsv4/default.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-7693329524588278340</id><published>2010-10-31T16:14:00.000+09:00</published><updated>2010-10-31T16:15:17.147+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='JK and K'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='on ego'/><title type='text'>ஆலவட்டம் 11</title><content type='html'>&lt;strong&gt;Questioner&lt;/strong&gt;: Is the ego always harmful? Is selfishness ever beneficial?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Krishnamurti&lt;/strong&gt;: Self-centered attention and activity, positively or negatively, is the cause of strife and pain. How seriously is each one considering this problem? How earnest are we about discovering the truth of the nature and activity of the ego, the self? Our meditation and spiritual discipline have no meaning if first we are not clear upon this point. True meditation is not self-expansion in any form. So until we can have a common understanding of our purpose, there will be confusion, and right relationship between us will not be possible.&lt;br /&gt;&lt;br /&gt;Reflections on the Self&lt;br /&gt;&lt;a href="http://www.jkrishnamurti.org/krishnamurti-teachings/view-text.php?tid=192&amp;chid=4545&amp;w=ego"&gt;First Talk in The Oak Grove&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாற்கடல் கடைந்ததாக வரும் தொன்மம் பல்வேறு வகையில் பொருள் கொள்ளத்தக்கது. நேரடிப்பொருளாகப் பார்ப்போமெனில், பிரபஞ்சத் தோற்றத்தைச் சுட்டுவது போல் படும். இதை உருவகம் என்று கொண்டால் ஆக்கம் நிகழ முன்னேற்பாடு என்பது போல் படும். பாற்கடல் கடைந்த போது மிக அரிய பொருட்கள் வெளிப்பட்டன. காமதேனு எனும் எண்ணியதைக் கொடுக்கும் பசு, கற்பக தரு, தன்வந்திரி, மகாலக்ஷ்மி இப்படி. 2ம் உலகப்போரில் உலகம் சீரழிவுற்றுக் கிடந்த போது இவ்வகையான தோற்றங்கள் நிகழ்ந்தன. இத்தோற்றங்கள் இந்திய மண்ணில் நடைபெறும் என்று பிரம்மஞான சபையோர் நம்பினர். எனவே ஐரோப்பாவிலிருந்து ஒரு கோஷ்டி, கலக்கமுற்றுக் கிடக்கும் உலகில் தோன்றும் மாணிக்கங்களைக் கண்டறிய இந்தியா வந்தது. அவை கண்டது கொஞ்சமே. ஆனால் இந்தியாவில் தோன்றியதோ எண்ணற்ற மாணிக்கங்கள். அந்த மாணிக்கங்களுள் ஒன்றுதான் மதனபள்ளியில் தோன்றிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. மண்ணின் வாசனை என்று ஒன்று உள்ளது. ஜே.கே எல்லா நிருவனப்பட்ட மதங்களையும், சிந்தனாமுறைகளையும் புறம் தள்ளினாலும் அவரது core teaching என்பது இந்திய மண்ணின் வாசனையோடுதான் இருந்தது. அதுவே ‘அகப்படு உள்மையம்’ எனும் ஈகோ களைதல் என்பதாகும். இதை செமத்திய மதங்கள் இந்தியா எடுத்துச் சென்றுள்ள உச்சத்திற்கு எடுத்துச் செல்லவில்லை என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், உள்மையம் இல்லாமல் சமூக ஜீவியாக செயல்படல் என்பது குதிரைக் கொம்பு ஆகும். அங்குதான் பிரச்சனையே கிளம்புவதாக நந்து நம்பினான்! உண்மையை சொல்லப்போனால் நந்து வளர்ந்த சூழலில் ஒருவரின் அகப்பாட்டை குளிர வைப்பது மிக முக்கியம் என்று கற்றிருந்தான். இதைக் கல்லூரி மொழியில் ‘குழையடித்தல்’ என்று சொல்லுவர். மிகச்சாதரணமான காரியமாக இருந்தாலும் கொழையடிக்க வேண்டும். நந்து அப்போது பள்ளிச் சிறுவன். கொய்யா மரத்தாத்தில் ஒரு பாட்டி இருந்தாள். இவள் சகோதரியுடன் உடன் வேலை செய்யும் ஒரு ஆசிரியையின் தாய். அந்தப்பாட்டி ஒரு மொட்டைப் பாட்டி. பாவம்! அவள் முடி இறக்கப்பட்டிருந்தாலும் அவள் அகப்பாடு இறங்கியதில்லை. அவளுக்கு மொட்டையாக இருப்பது பழகிவிட்டது. அவள் அடுப்புக்கரி வாங்கி வந்து பயன் படுத்திவிட்டு, சமையல் முடிந்தவுடன் அடுப்பை நீர் விட்டு அணைத்துவிட்டு மீண்டும் அக்கரியினைப் பயன்படுத்தும் நோக்கில் நல்ல வெய்யிலில் காயப்போட்டுக்கொண்டு இருந்தாள். இந்த வம்புக்கார ராமு சும்மாப் போகாமல், ‘பாட்டி! பாட்டி! இந்த கரி எங்கே வாங்கியது! இவ்வளவு பெரியதாக, நன்றாக உள்ளதே!’ என்றான். அவ்வளவுதான் சும்மாக்கிடந்த பாட்டியின் அகப்பாடு மெய்சிலிர்த்து விழித்துக் கொண்டது. அல்பமான அடுப்புக்கரி பற்றிய சமாச்சாரம்தானென்றாலும், பசங்க ஒரு விஷயம் பற்றிக் கேட்கிறார்கள் எனில் அதில் ஏதோ விசேஷம் இருக்கிறது, எதற்கு தகவலைச் சும்மாத் தர வேண்டுமென நினைத்துவிட்டாள். தகவல் பரிமாற்றம் என்பது கிராமப்புறங்களில் மிக சிக்கலானது. யாரும், யாரையும் நம்பி ஒரு விஷயத்தைச் சொல்லிவிடமாட்டார்கள். கலெக்டர் எப்போது தாலுகா ஆபீஸ் வருவார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமெனில் ஆபீஸ் கிளர்க்குக்கு காசு கொடுக்க வேண்டும். கிளர்க்கைப்பார்க்குமுன் பியூனுக்கு காசு கொடுக்க வேண்டும். சரி, கலெக்டர் வரும் போது மனுக்கொடுக்க வேண்டுமெனில், மனு பாரம் எங்கே வாங்க வேண்டுமென்று அறிந்து கொள்ள காசு கொடுக்க வேண்டும். பார்ம் வாங்கியபின் அதை எப்படி நிரப்புவது என்று அறிந்து கொள்ள காசு கொடுக்க வேண்டும். ஆக, தகவல் என்பது விலை மதிப்புடையது. யாரும், யாருக்கும் தகவலைச் சுலபமாகத் தந்துவிடமாட்டார்கள். அப்படியான ஊரில் பாட்டி மட்டும் தான் அடுப்புக்கரி எங்கே வாங்கினேன் என்னும் தகவலை அவ்வளவு எளிதாகத் தந்துவிடுவாளா? என்ன? எனவே, அவள் ராமுவைப் பார்த்து, ‘அதெல்லாம் சொல்லமுடியாது. ஒரு ஆள் மூள்ய்யமாக வாங்கியது!’ என்று ஒரு போடு போட்டாள். அல்பக்கரித் தகவல் தராத அந்தப்பாட்டி அன்றிலிருந்து ‘கரிப்பாட்டி’ என்று நந்துவால் அழைக்கப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஈகோ என்பதே அல்பம் என்று அறிந்து கொள்! என்று ஜேகே சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? வாழ்வே அல்பமான விஷயங்களைச் சுற்றி அல்பமான முறையில் சுழன்று கொண்டிருக்கும் போது, அல்பமான விஷயத்திற்கெல்லாம் ஈகோ வீறுகொண்டு எழுகிறது! மிக அல்பமாக அது பல்லிளித்துக் காட்டுகிறது. இந்த அல்பமான சிரிப்பிற்கு நந்து பழகியிருந்தான். அப்படிப்பலர் சிரிக்கும் போது இவனும் பல்லிளித்தான். சாதாரண பியூனிலிருந்து, துணை வேந்தர்வரை எல்லோரும் இப்படியானதொரு பல்லிளிப்பதை எதிர்பார்த்தனர். அல்பத்தனமாக அவர்களது அகப்பாட்டைக் குளிர்விக்க வேண்டியிருந்தது. அது கண்டு மாணவர் ஈகோ சிலிர்ப்பதுண்டு. ஆனால் சிலிர்ப்பதால் எந்தக்காரியமும் ஆவதில்லை. ‘இவன் போனால் காரியமாகாது! என்னத்தையாவது சொல்லி காரியத்தைக் கெடுத்துவிடுவான். நைச்சியமாகப் பேசி காரியத்தை சாதிக்கத் தெரிய வேண்டும்’ என்பது மிகச்சாதாரணமாக குடும்பங்களில் பேசப்படும் வசனம். நந்து நைச்சியமாகப் பேசுவதில் வல்லவனாக இருந்தான். முதல் சொல்லிலேயே பேசுபவரின் ஈகோ குளிரும் வண்ணம் பேசக்கற்றிருந்தான். மற்றவரின் ஈகோ குளிர்வதைக் கண்டு தன் ஈகோவும் சமனப்படுவதை அவன் அறியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேகேயைத் தீவிரமாக அறிந்த போது கிடைத்த முதலடி, அகப்பாடு அல்பமானது என்ற பாடம். அவனுக்கு சமூகம் கற்றுக் கொடுத்த முதல் பாடமே அகப்பாட்டை எப்படி ஊட்டி வளர்ப்பது என்பதுதானே?! முழுச்சமூகமும் அகப்பாட்டின் வலையில் கட்டுப்பட்டு நடந்து கொண்டு இருக்கும் போது அகப்பாட்டை உணர்வதே தன்னை அறிதல் என்பதாக அமைந்தது சிக்கலாக இருந்தது. மாயாவியாகச் செயல்படும் அகப்பாட்டு தன்னை இனம் காட்டிக்கொள்ளுமா? என்ன? அது மட்டுமா? வள்ளுவர் சொல்கிறார், ‘கற்பவை கற்ற பின் நிற்க’ என்று. கற்றது எல்லாமே கசடாக இருந்துவிட்டால் அதிலேயே நின்று கொண்டு இருக்க வேண்டியது. கற்றதைக் கழட்டிவிடுவது அவ்வளவு சுலமானது என்று நந்து நம்பவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;பெர்னார்டு என்றழைக்கப்படும் பார்ணி நந்துவை முதன்முறை பார்த்த போதே கேட்ட முதல் கேள்வி, ஜேகே பற்றி நீ எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாய்? என்பதே! நந்து அப்போது இந்தியப் பல்கலைக்கழக சூழ்ச்சி வலையிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்றிருந்தான். ஜப்பானிய கல்வித்துறை வழங்கும் ஒரு சிறப்பு மானியம் பெற்று எஹிமே பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தான். கீழைத்தேசங்களில் ஆங்கிலக்கல்வி சொல்லிக்கொடுக்க ஆயிரக்கணக்காக வரும் அமெரிக்க, ஆங்கில, ஆஸ்திரேலிய, கனேடிய ஆசிரியர்களில் பார்ணியும் ஒருவன். உண்மையில் இவர்களை ஆசிரியர்கள் என்று சொல்ல முடியாது. ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்டவர்கள் எனும் தகுதியே அவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தந்தது. மேலும் அவர்கள் வெள்ளையர்களாக இருந்தால் கூடுதல் மதிப்பு. விளம்பரத்தில் தெளிவாகவே இன வேறுபாட்டைக் காட்டுவதில் ஜப்பானியரும், கொரியர்களும் தயங்குவதில்லை. ‘வெள்ளையின ஆசிரியர், ஆங்கிலம் தாய் மொழி. இவையே தகுதிகள்’ என்று விளம்பரங்கள் பேசும். பார்ணி போன்ற அமெரிக்கர்கள் இதையொரு சாக்காக வைத்துக் கொண்டு ஆசிய கலாச்சாரம், தத்துவமறிய கீழைத்தேசங்களுக்கு வருகின்றனர். பார்ணி 12 வயதிலிருந்து ஜேகேயின் நூல்களை வாசித்து வருபவன். ஏறக்குறைய ஜேகேயைக் கரைத்துக் குடித்து இருந்தான். எனவே நந்துவிற்கு விருப்பம் உண்டோ இல்லையோ, ஜேகே இறக்குமதி தொடர்ந்து நடந்து வந்தது. வேறு வழியில்லாமல் அறிவியல் போக மீதமிருந்த பொழுதுகளை ஜேகேயை அறிய செலவிட்டான். ஜப்பானில் வாரம் ஐந்து நாள் வேலை செய்து, உபரியாக சனியும் வேலை செய்து, மீதமிருக்கும் ஞாயிறு தினத்தில் பாதி நாள் வேலை செய்யும் நந்துவின் மீதி அரைநாளும் குடும்ப உறவிற்கு என்று போகாமல் ஜேகே எனும் ஞானியை அறிந்து கொள்வதில் போனது. நந்து ஜேகேயை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்க முற்பட்டான் நந்து!&lt;br /&gt;&lt;br /&gt;01.J. Krishnamurti in United Nations,1985 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Q_jK59wpikc?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Q_jK59wpikc?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-7693329524588278340?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/7693329524588278340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=7693329524588278340' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/7693329524588278340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/7693329524588278340'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/10/11.html' title='ஆலவட்டம் 11'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-7697972111885472620</id><published>2010-10-03T13:01:00.001+09:00</published><updated>2010-10-03T13:04:15.414+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='JK and K'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='J.Krishnamurti'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='biography'/><title type='text'>ஆலவட்டம் 10</title><content type='html'>முன்கதைச் சுருக்கம்:&lt;br /&gt;&lt;br /&gt;நந்து ஒரு கிராமத்துச் சிறுவன். அவனது வாழ்வு மெல்ல, மெல்ல, கிராமம் தாண்டி நகரம் வந்து, பின் நாடு தாண்டி, கண்டங்கள் தாண்டி பயணப்பட்டபோது ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எனும்  சிந்தனையாளரை அறிந்து கொள்கிறான். அந்த அறிதல் அவன் வாழ்விற்கு பொருள் சொல்லியது. அவனது தேடலை உச்சப்படுத்தியது. இத்தொடர்பு தற்செயலாக நடந்ததா? இல்லை பல்வேறு  நிகழ்ச்சிகளுக்குப் பின் ஒரு மறை தொடர்பு உள்ளதா? எனக்காண விழையும் தொடர் இது. 60 களில் ஆரம்பித்து 2010 வரை நீளும் கதை. அக்காலக்கட்டத்தின் பதிவாக மலர்கிறது. அக, புறப்  போராட்டங்கள் பதிவாகின்றன. துணை போகும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் விழியங்கள், நேர்காணல்கள், புத்தக மேற்கோள்கள் இம்முயற்சியில், இத்தேடுதலில் ஈடுபடும் வாசகனை நந்து  அடைந்த புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. நமக்குத்துணை நாமே. ஏனெனில் இங்கு ஆராயப்படும் பொருளும், ஆராய்பவனும் ஒன்றே. இத்தொகுப்பு ‘கவினுலகம்’ வலைப்பதிவில் தொடர்ந்து  வலையேறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆலவட்டம் 10&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Most of us are frightened of dying because we don't know what it means to live. We don't know how to live, therefore we don't know how to die. As long as we are  frightened of life we shall be frightened of death. The man who is not frightened of life is not frightened of being completely insecure for he understands that inwardly,  psychologically, there is no security. When there is no security there is an endless movement and then life and death are the same. The man who lives without conflict, who  lives with beauty and love, is not frightened of death because to love is to die. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;From: p. 75-77, Jiddu Krishnamurti, &lt;a href="http://www.katinkahesselink.net/kr/death.html"&gt;Freedom from the known&lt;/a&gt;, 1969 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்து போன்ற ஆய்வாளர்களின் கனவு அக்காலத்தில் அமெரிக்காவாக இருந்தது. நந்து படித்த கல்லூரி அமெரிக்கப் பாதிரிகள் ஆரம்பித்து வைத்த கல்லூரி. இவனது ஆங்கில விரிவுரையாளர்  ஒரு அமெரிக்கர். இளைஞர். தனது மனைவியுடன் இவன் வாழ்ந்த கோசாகுளம் புதூரில் குடியிருந்தார். இருந்த காலங்களில் அவர் தமிழ் கற்று தினத்தந்தி வாசிக்கும் அளவிற்கு  முன்னேறியிருந்தார். அறிவியல் புலத்தின் மேலாண்மையும் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவரிடமே இருந்தது. எனவே அமெரிக்கக்கனவு என்பது நந்துவிற்குப் புதிதல்ல. இந்திய சமுதாயம்  மிகவும் கட்டுபெட்டித்தனமாக இருந்ததாக இவனும், இவனது சகாக்களும் கருதினர். அமெரிக்கா இவர்கள் எதிர்பார்க்கும் சுதந்திரத்தை வழங்குமென்று நம்பினர். சுவாமிநாதன் அவ்வாழ்வின்  இன்னோரு கோணத்தை இப்படிக் காண்பான். ‘நந்து, சும்மா அமெரிக்காவில் போஸ்ட்டாக்காக இரண்டு வருடம் இருந்து ஒரு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதித்துவிட்டு, இந்தியா திரும்பிவிட  வேண்டும்’ என்பான். ஆனால், அமெரிக்கா போன இவன் சகாக்கள் யாரும் அப்படித் திரும்பவில்லை. காரணம் அமெரிக்காவின் வளமும், சௌகர்யமும் நம்மை இந்தியாவிற்கு மீட்டுவிடாது.  சுஜாதா சொன்னது போன்று அமெரிக்கா எளிதாக ஒருவனைக் கடனாளியாக்கிவிடும். அங்கு கடன் வாங்குவது எளிது. வாங்கிய கடனைக் கட்ட ஒரு வாழ்நாள் போதாது. இப்படி அங்கு போய்  கடன் வலையில் சிக்கிக்கொண்ட இந்தியர்கள்தான் அதிகம். ஆயினும் மோகம் என்பது குருடு. நந்துவின் கனவும் அமெரிக்கா செல்வதிலேயே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் அமெரிக்கா செல்வதற்கு குறைந்த பட்ச தகுதியாக முனைவர் பட்டம் அக்காலத்தில் இருந்தது. இங்குள்ள முதுகலைப் பட்டம் அங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே அங்கு  போய் மீண்டும் முதுகலை வகுப்பில் உட்கார நந்துவின் செட்டில் யாருக்கும் விருப்பமில்லை. எனவே கஷ்டமோ, நஷ்டமோ இந்தியாவில் எப்படியாவது ஒரு டிகிரியை வாங்கிவிட்டுப்  பறந்துவிட வேண்டும் என்பதே எல்லோரின் கனவாக இருந்தது. இது முதல் பெரும் தடை. ஏனெனில் முனைவர் பட்டம் வாங்குவது சில துறைகளில் எளிதாக இருந்தது. பேராசிரியரின்  பல்துறை செல்வாக்கு அதற்கு வெகுவாக உதவியது. செல்வாக்கில்லாத பேராசிரியர்களிடம் மாட்டிக்கொண்டவர்கள் படித்துப் படித்து தலை வழுக்கையாகி முதுமையுற்றதுதான் மிச்சம்.  எனவே, அநேக குடும்பங்கள் இப்படி முனைவர் பட்டம் வாங்கப் போகும் பிள்ளைகளுக்கு மணமுடிக்க முடியாத பெரிய சிக்கலில் இருந்தன. நந்துவின் குடும்பத்திலும் இப்பேச்சு தலை  தூக்கினாலும், அதற்கு முன் நந்து தாண்ட வேண்டிய பெரிய தடங்களாக அவனது சகோதரிகள் திருமணம் இருந்தது. பெற்றோர் அற்ற, பிராமண குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு வரன் பார்த்து  மணம் முடிப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. நந்துவோ வீட்டின் இளைய பிள்ளை. படிப்பு தவிர வேறு அறிவு அற்றவன். ஆனால் அதற்காகப் பொறுப்பைத் தட்டவும் முடியாது.  எனவே நந்து அமெரிக்கக் கனவை ஒத்தி போட வேண்டியிருந்தது. நூறு பேருக்கு எழுதினால் இரண்டு பேரிடமிருந்து பதில் வரும். அதில் பெரும் நம்பிக்கை வைத்து அடுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும். இக்கடிதங்கள் பேராசிரியர்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு உழைக்கும் ஒரு கை குறைந்துவிடும் என்ற அச்சமுண்டு. எனவே போர்க்கால ரகசிய  நடவடிக்கை போல் எல்லாம் கச்சிதமாக முடிய வேண்டும். ஆனாலும் காட்டிக் கொடுத்துவிடும் ஒரு அபாயம் அமெரிக்க கான்சுலேட்டிடம் இருந்து வரும். நேர்காணலுக்குச் சென்னை செல்ல  வேண்டும். சில நேரங்களில் பட்டமேற்படிப்பு செய்யும் பேராசிரியரின் சான்றிதழ் கேட்கும் வழக்கமும் உண்டு! அமெரிக்கன் கான்சுலேட்டில் போய் மனுப்படிவம் வாங்குவதே பெரிய வேலை.  காலை 5 மணிக்கெல்லாம் வாசலில் வரிசையிருக்கும். அலுவலகம் திறப்பதோ 10 மணி. இவ்வளவு கஷ்டப்பட்டு மனுவெல்லாம் கொடுத்தாலும் விசாக் கிடைக்குமென்பதற்கு எந்தவித  உத்திரவாதமும் கிடையாது. இந்தியர்களை அமெரிக்காவின் சுமை என்றே அவ்வரசாங்கம் கருதியது. இங்கிருந்து வருபவன் எவனும் திரும்ப இந்தியா போகமாட்டான் என்பது அவர்களுக்குத்  தெரியும். எனவே விசா தட்டிக் கழிக்கப்படுவதே அக்காலக்கட்ட வழக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;நாட்சி வதை முகாமில் கஷ்டங்களுடன் வாழ்ந்த எல்லோருக்குள்ளும் ஒரு பரஸ்பர நட்புறவு இருந்தது. அது எல்லோரும் சாகப்போகிறோம் எனும் உணர்வால் வந்ததல்ல. விடிவு நிச்சயம்  ஒரு நாள் வரும் எனும் நம்பிக்கையால் வந்தது. வதை முகாம்களில் திருமணங்கள் கூட நடந்து முடிந்தன. நந்துவின் சகாக்களுக்குள் இப்படியான ஒரு பரஸ்பர நட்பு இருந்ததற்கு  அடிப்படைக் காரணம், இத்தனை கஷ்டங்களுக்கும் விடிவாக அமெரிக்க விசா ஒரு நாள் கிடைத்துவிடும் எனும் நம்பிக்கைதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கொத்தடிமை வாழ்வு இவர்களைச் சுண்டக் காய்ச்சியது. நந்து எவ்வளவு ரகசியமாக நடந்து கொண்டாலும், பேராசிரியர்களுக்குத் தெரியாமல் அங்கு ஒரு காரியமும் நடப்பதில்லை.  எனவே, பட்டம் இன்னும் பெறாத நிலையில், கிடைத்துவிடும் எனும் நம்பிக்கையில் நந்து தொடர்பு கொண்ட அமெரிக்கப் பல்கலைக் கழகமொன்றின் முகவரியை இவன் பேராசிரியர்  பெற்றுவிட்டார். அந்த வெளிநாட்டுப் பேராசிரியர் இவரிடம் நந்து பற்றி நற்சான்றிதழ் கேட்டிருந்தார். இவர் சான்றிதழ் வழங்காமல், அவனுக்கு பட்டம் கிடைக்க நாளாகும், ஆனால் தன்னால்  அங்கு ஒரு வருடம் வரமுடியும் என்று எழுதிப் போட்டு, இவன் வாயில் மண்ணைப் போட்டுவிட்டு அவர் அமெரிக்கா பறந்துவிட்டார். நந்து மிகப்பின்னால்தான் காரியரதரிசி ராதா மூலம்  அறிந்து கொண்டான். அவன் பட்ட மனக்கஷ்டத்தை சொல்லி மாளாது. ஆனால், பல்கலைக்கழகம் என்பது ஆப்பிரிக்க சிரங்கட்டி வனவிலங்கு சரணாலயம் போல் இருந்தது. வல்லமை  உடையதும், ரகசியமாக தாக்காக்கூடியதும், நயவஞ்சகம் நிரம்பியதும் எப்போதும் வென்று கொண்டே இருந்தன. நந்து போன்ற வெள்ளந்திகள் மாடு போல் உழைத்துக் கொண்டு இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலக்கட்டத்தை நந்து வேறொரு வகையில் பயனுள்ளதாக மாற்றினான். தனது சகோதரிகளுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்தான். கிராமப்புறத்தில், ‘முன்னப்பின்ன செத்து  இருந்தாத்தானே சுடுகாடு தெரியும்!’ என்பார்கள். அது போல் முன்னப் பின்ன கல்யாணம் செய்வித்திருந்தால் அல்லவோ இவனுக்கு முன் அனுபவம் இருக்கும். இவனோ வாயில்  வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவன். பெற்றோராலும், சகோதரிகளாலும் சீராட்டப் பெற்றவன். இவன் அறிந்த கல்யாணம் இவனது இரண்டாவது பெரிய சகோதரியின் கல்யாணம். அப்போது தாய்,  தந்தையர் இருந்தனர். கவலையற்ற வயது. செட்டியார் விடுதியில்தான் நடந்தது. மூன்று நாள் கல்யாணம். வெளியூரிலிருந்து உறவுகளெல்லாம் வந்திருந்தனர். ஊரார் வீட்டுக் கல்யாணம் போல்  தயங்கித் தயங்கி கேட்க வேண்டியதில்லை. நேரடியாக அடுப்பறைக்குள் போய் வேண்டிய பக்ஷணங்கள் தயாராகும் போதே சாம்பிள் பார்க்க முடிந்தது. கூம்பு, கூம்பாக வைத்து அதன் சுவை  எப்படியிருக்கும் என்றறியாத பக்ஷணவகையின் சுவையெல்லாம் அறிய முடிந்த கல்யாணம். அதிலும் கொஞ்சம் டென்ஷன் இருந்தது. லஞ்ச ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு யாரோ வேண்டாத  தகவல்கள் தந்துவிட கல்யாணச் செலவுகள் பற்றிய தகவல்களை தந்தையார் காண்பிக்க வேண்டிய நிர்பந்தம். அக்காலத்தில் நேர்மை இன்னும் கொஞ்சம் இருந்தது. அரசு லஞ்ச ஊழல் பற்றி  கவலைப்பட்டது. ஆயினும் அவையெல்லாம் பெரியோர் விஷயங்கள். அவை நந்துவை பாதிக்கவில்லை. நந்து முதன் முறையாக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் வேடிக்கை பார்த்து,  மாப்பிள்ளை ஊர்வலக் காரின் பின்னால் ஓடும் சிறுவனாக இல்லாமல், அந்தக் காரில் மாப்பிள்ளைக்கு அருகில் பயணிக்கும் ஒருவனாக அமர்ந்திருந்து அனுபவித்த காலம். &lt;br /&gt;&lt;br /&gt;அவையெல்லாம் வெறும் கனவாய் பழம் கதையாய் போனது இப்போது! யார் கண்கள் பட்டதோ! சீரும், சிறப்புமாக இருந்த குடும்பம் குலைந்து போனது! மகளைக்கண்டுவரச் சென்ற தந்தை  மீண்டும் உயிருடன் திரும்பவில்லை! ஆஸ்பத்திரியிலிருந்து அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து சேர்ந்த இரவை நந்துவால் எப்படி மறக்க முடியும்? இரவெல்லாம் தூங்காமல், அண்ணா  முழித்துவிடுவார் என்று அவர் கண்களையே பார்த்துக் கொண்டிருந்த மணித்துளிகள் மறக்குமா? அடிக்கொருதரம் கக்கத்துள் கை வைத்து ‘இன்னும் சூடு இருக்கு! தூங்கறது போலத்தானே  இருக்கார், முழித்துவிடுவார்!’ என்று சகோதரிகள் சொல்லச் சொல்லச் குடும்பமே காத்திருந்தது, அண்ணா முழித்துக் கொள்வார் என்று. அவரது பயணம் மீண்டும் விழித்துக் கொள்ளாத  பயணமென்று அவர்கள் அறியவில்லை. அந்த வீட்டில் விழுந்த முதல் சாவு அது. யாருக்கும் அனுபவமே இல்லை. இதை எப்படி எதிர் கொள்வது என்று! வனவிலங்குகளிலிருந்து மனிதன்  வரை, சாவு என்பதை எப்படி எதிர்கொள்வது என்று எவையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இறந்து போன குரங்குக்குட்டி தோல் அழிந்து எலும்பாகிப் போகும்வரை தூக்கி அலைந்த குரங்கின்  கதையை பின்னால் நந்து அறியப்போகிறான். ஆனால் அன்று அறியவில்லை. அன்று இரவுதான் அழுதான் என்றில்லை. நாட்கணக்காக அழுதான். வருடக்கணக்காக அழுதான். கண்ணீர்  வற்றும்வரை அழுதான். ஒரே ஆறுதல் இவன் மட்டும் அழவில்லை. இவன் குடும்பமே கூட அழுதது. ஒரு சில நாட்கள் ஊர் கூட அழுதது! அவ்வளவு நல்ல மனிதர். இப்படி திடீரென்று  போய்விட்டாரே! என்று. ‘இன்னும் நிலைத்து மூன்று இலை விடவில்லை. அதற்குள் இந்தக் குடும்பத்திற்கு இப்படி ஆகிவிட்டதே!’ என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் மரணம் என்பது நந்துவிற்குப் பழகிப்போனது. இவனது தாத்தாவை எல்லோரும் கரிச்சுக்கொட்டியே அனுப்பி வைத்தனர். பின் சகோர பக்ஷி போல், சகாவின் பிரிவு தாங்காமல் தாய்,  பின் சிறிய தந்தை என்று ஒவ்வொருவராக போய்ச்சேர, மங்களம் நிரம்பி வழிந்த வீடு, அமங்கலமாகிப்போனது! அந்த வீட்டில் வாழ யாருக்கும் பிடிக்கவில்லை. மெல்ல, மெல்ல பெரிய  அக்காவுடன் மதுரைக்கு குடி பெயர்ந்தனர். கிராமத்து நந்துவின் நகர நந்துவாக மாறிய காலக்கட்டம். அதுவரை ஆங்கிலம் பேசாத நந்து, முதன்முறை ஆங்கிலம் பேசப்பழகிய காலம். நான்கு  தெருவிற்கு மேல் அறிந்திராத நந்து பெரிய நகரத்திற்குள் உலா வந்து, பெரிய கனவுகள் காணத் தொடங்கிய காலம். ஒரு தந்தையின் பொறுப்பில் இரு சகோதரிகளுக்கு திருமணம் செய்வித்தான். அப்போதுதான் தெரிந்தது, ‘வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணம் நடத்திப்பார்!’ எனும் பழமொழியின் பொருள். கல்யாணம் என்பது எளிதான செயல் அல்ல. அது மனித ஊடகத்தின் புரியாத பல பரிமாணங்களுள் புகுந்து புறப்படும் சிக்கலான பயணம். நந்து முதன் முறையாக ஊர், ஊராக அலைந்தான். விசித்திர மனிதர்களைக் கண்டான். விசித்திரமான பேரங்களைப் பேசினான். கல்யாணம் என்பது சற்றேறக்குறைய ஒரு வியாபாரம் போல் நடைபெறும் தமிழக முறைமை கண்டு விசித்து நின்றான். இப்படிக் கூட மனிதர்கள் இருப்பார்களா? என்று முதன்முறையாக அறிந்து கொண்ட அனுபவங்கள். இரண்டு கல்யாணமும் முடிந்த போது நந்துவுள் வாழ்ந்து வந்த சிறுவன் காணாமல் போயிருந்தான். கண்ணாடி முன் பார்த்த போது தலையெல்லாம் நரைத்து அறுபது வயது கிழவன் போல் தோன்றினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவையெல்லாம் கிருஷ்ணமூர்த்தி அவனுடன் இல்லாத காலங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed id=VideoPlayback src=http://video.google.com/googleplayer.swf?docid=6765607872406834873&amp;hl=en&amp;fs=true style=width:400px;height:326px  allowFullScreen=true allowScriptAccess=always type=application/x-shockwave-flash&gt; &lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-7697972111885472620?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/7697972111885472620/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=7697972111885472620' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/7697972111885472620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/7697972111885472620'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/10/10.html' title='ஆலவட்டம் 10'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-2852291646333265009</id><published>2010-10-03T09:18:00.000+09:00</published><updated>2010-10-03T09:20:32.496+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='JK and K'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='J.Krishnamurti'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='biography'/><title type='text'>ஆலவட்டம் 9</title><content type='html'>ஆலவட்டம் 9&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;”One wonders why in a place like this we are being educated - for what? What is the relationship between this institution and the world? What place has knowledge, whether it is scientific, biological, or physics and so on - what relationship has that knowledge towards the world? And throughout the world we are all being educated along various lines and with their disciplines; and we human beings have very little place in this world. So one must, I feel, ask why these elaborate years of study, acquiring great deal of knowledge, great effort, and where is it all ending up? What place your scientific, and other disciplines, have relationship, actual, with the existing world? The existing world - the world in which we live our daily life, whether in America, Russia, Europe, or in India or Japan, that very life is being threatened by war....”&lt;br /&gt; &lt;br /&gt;J. Krishnamurti&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href="http://www.jkrishnamurti.com/krishnamurti-teachings/view-text.php?tid=1583&amp;chid=1280&amp;w=knowledge"&gt;Talk at the Indian Institute Of Technology&lt;/a&gt;, Bombay &lt;br /&gt;February 1984&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பல்கலைக்கழக நூலகத்தில் அறிமுகமான ஜே.கிருஷ்ணமூர்த்தியை நந்து மறந்து போயிருந்த காலத்தில் அவரை மீண்டும் நினைவு படுத்தியவன் சுவாமிநாதன். சக ஆய்வாளர். ‘நந்து! நான் காலாற நடக்கும் போது சிந்தனையின் ஒரு கீற்றுக் கூட என்னுள் துளிர்க்காத வண்ணம், நடக்கப் பயில்கிறேன்’ என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டான். அது எப்படி முடியும்? &lt;br /&gt; &lt;br /&gt;கல்லூரி நாட்களில் நந்துவின் மிக நெருங்கிய நண்பர்கள் என்று இருவர் உண்டு. ரகு எனப்படும் ரகுநாதன் இயற்பியல் மாணவர். ஒரு வருடம் சீனியர். அவனது தந்தை தீவிர சோவியத் பக்தர். எனவே சோவியத் வெளியீடாக வரும் அனைத்து அறிவியல் நூல்களையும் ரகு படித்திருப்பார். சோமு இவனது நேரடி சீனியர். உயிரியல் மாணவர். சோமுவின் கையில் கலை குடி கொண்டிருந்தது. டார்வின் நூற்றாண்டுவிழா அமெரிக்கன் கல்லூரியில் ஏற்பாடாகியிருந்த போது சோமு மிகப்பெரிய டார்வின் வாழ்க்கைச் சரிதப் படங்களை வரைந்து கொடுத்து கல்லூரியின் பெருமையைக் கூட்டியிருக்கிறார். வெறும் சோப்பு, சோமு கையில் கிடைத்துவிட்டால் அதுவொரு வள்ளுவனாக, மானாக, மீனாக மாறும். சோமு நெல் மணியில் கூட சிற்பம் செதுக்கியுள்ளான். இந்த மூவரும் தினமும் மாலையில் காலாற நடந்து கோ.புதூரிலிருந்து மூன்றுமாவடிவரை நடந்து வருவர். வழியில் ஏதாவது பொய்கை தென்பட்டால் இளைப்பாறுவர். எப்போதும் அறிவியல் விந்தைகள் பற்றிய சிந்தனைகள். பிரபஞ்ச விசாரம்.&lt;br /&gt; &lt;br /&gt;இப்படி இருக்கும் போது சுவாமிநாதன் சிந்தனையே இல்லாது நடக்க வேண்டும் என்கிறானே? ஏனென்று நந்துவிற்குக் குழப்பம். பின்னால் ஜே.கேயின் நூல்களை வாசித்த போதுதான் காரணம் புரிந்தது. ஜே.கே தினமும் நடை பயிலும் போது, ‘இற்றைத் தியான முறையாக’ (’now’ consciousness) சிந்தனைகள் இல்லாமல் முழுக்கவனமும் அந்த நொடியில் நடக்கும் நிகழ்வுகளுக்கு என்று இருப்பாராம். அதைப்படித்த பின் சுவாமியும் இப்படி முயன்று இருக்கிறான். அவன் எல்லாவற்றையும் லிட்டிரலாக எடுத்துக் கொள்வான். மதுரை அண்ணா நகரிலிருந்து தினமும் நாகமலை புதுக்கோட்டைவரை (30 கிமீ தூரம்) வரும் வழியில் வாக்மேன் இசையில் ஜேசுதாசின் பாடல்களைக் கேட்டு கொண்டு வருவான். காது பூரா இசை இருக்கும் போது வாய் சும்மா இருக்குமா? பாடத்தானே செய்யும்! ஆனால், இசையின் லயம் நெஞ்சை நிரப்பியிருக்கும் வேளையில் சுவாமி பாடுவது ஜேசுதாஸ் பாடுவது போலவே படுவதில் ஆச்சர்யமில்லைதான்! வந்தவுடன் சொல்லுவான், ‘நந்து, நான் ஜேசுதாஸ் போலவே பாடுவேன் தெரியுமோ?’ என்பான். எங்கே பாடிக்காட்டேன் என்றால்! அவன் குரலுக்கும், ஜேசுதாஸ் குரலுக்கும் ஏணி வைத்தும் எட்டாத தூரம்! பின்? சுவாமி படிக்கும், கேட்கும் நிகழ்வுடன் தன்வயப்படுகிறான். அது போது, அவன் வாசிக்கும், கேட்கும் பொருளாகவே மாறிவிடுகிறான். அதனால்தான், அவன் நந்துவிடம் ‘சிந்தனை ஒன்றின்றியே நடமாடும் கலை’ பற்றி விரிவாகப் பேசியிருக்கிறான். &lt;br /&gt; &lt;br /&gt;ஜேகேயைப் பின்பற்ற முடியாத இன்னொரு கூற்றுமுண்டு. ஜே.கே கனவு காண்பதில்லை எனும் கூற்று அது. இதை எப்படி நிரூபிக்க முடியும்? ஒரு வருடத்தில் 60,000 கனவுகள் நாம் காண்கிறோம் என்பதொரு கணக்கு. தினமும் 10 கனவாவது வந்து போகுமாம். நமக்கு நினைவில் இருப்பதில்லை. ஆனால் ஜே.கே தன் வாழ்க்கை சரிதத்தில் தான் கனவு காண்பதில்லை என்று சொல்லியிருக்கிறார். அதாவது, திருமாலின் அரிதுயில் போன்ற ஒன்று எனும் பொருளில். அதாவது தூக்கமென்றில்லை. அப்போதும் விழிப்பு நிலைதான். ‘இற்றைத்தியானம்’தான். இதை எப்படி பின்பற்ற முடியும்? நந்துவோ ஓர் கனவுத் தொழிற்சாலை!&lt;br /&gt; &lt;br /&gt;சுவாமியின் ஒன்றுவிட்ட சகோதரனும் அதே பல்கலைக் கழகத்தில் கலைத்துறை ஆய்வாளனாக இருந்தான். அவன் ஜே.கே நூல்கள் எல்லாம் கற்றுத் தேர்ந்திருந்தான். அவர்கள் குடும்பம் நகரில் மிகவும் அறியப்பட்ட குடும்பம். தாய் தந்தை இருவருமே பேராசிரியர்கள். நல்ல செல்வாக்கான குடும்பம். ஜே.கே இப்படி செல்வாக்கான பேர்களிடம் மிகவும் பிரபலமாகியிருந்தார். அவரை அன்னிபெசண்ட் எடுத்து வளர்த்து ஆளாக்கியதால் ஜே.கேயின் வட்டமென்பது இந்திய உயர் குடும்ப வட்டமாக் அமைந்துவிட்டது. அவரது போதனைகள் செல்லச் சீமாட்டிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் என்றாகிவிட்டது. தேவர்களுக்கு பிரகஸ்பதி அமைந்தது போல் இந்திய மேட்டுக்குடியினருக்கு ஜே.கே அமைந்துவிட்டார். இதற்கொரு முக்கிய காரணம் மேட்டுக்குடியின் ஆதர்ச மொழியாக ஆங்கிலம் இருந்தது. ஜே.கேயின் கல்வி முழுவதும் ஆங்கிலத்திலேயே அமைந்துவிட்டது!&lt;br /&gt; &lt;br /&gt;சுவாமி ஒரு நாள், மதுரை சுந்தரம் ஹாலில் மகராஜபுரம் விஸ்வநாதன் கச்சேரி இருக்கிறது வருகிறாயா? என்றழைத்தான். நந்துவின் குடும்பத்தில் இசை எப்போதும் இருந்தது. அவனது தாய் கோகிலம் போல் பாடுவாள் என்று அவனது தாத்தா அப்படியே பெயர் வைத்துவிட்டார். அவனது சித்தியும் பாடுவாள். சகோதரிகள் பாடுவர். நந்துதான் அதில் விதிவிலக்கு. சினிமாப்பாட்டு கேட்கும் ஆசாமி. அவனது அத்தான் திட்டுவார். ‘ஏண்டா சினிமாப்பாட்டு கேட்டு கெட்டுப் போகிறீர்கள்! நல்ல சம்பிரதாய சங்கீர்த்தனம் கேளுங்களடா!’ என்று. &lt;br /&gt; &lt;br /&gt;கதை இப்படி இருக்கும் போது சுவாமி அவனது ஒன்றுவிட்ட சகோதரனான தினேஷை அறிமுகப்படுத்திய போது அவன் ஆச்சர்யத்துடன், ‘அறிவியல் மாணவர்களுக்கு சங்கீத ஞானம் கூட வருமோ?’ என்றான். நந்துவிற்கு மகா கடுப்பு. அது என்ன அப்படியொரு இளக்காரம்? அறிவியல் மாணவன் கவிதை செய்யும் போது பாட்டறிவு ஏன் இருக்காது? தான் கவிதை செய்வதாக நந்து சொன்னான். எந்த மொழியில் என்று கேட்டான் தினேஷ். நந்துவிற்கு இக்கேள்வியே விநோதமாக இருந்தது. கவிதை என்றாலே தமிழ் என்பதுதான் அவன் வாழ்வு. ஆனால் தினேஷ் அதைக் கேள்விக் குறியாக்கினான்.  ஆங்கிலத்தில் எழுதுவதில்தான் திறமை உள்ளது என்பது போல் தினேஷ் பேசினான். தான் ஆங்கிலத்தில்தான் கட்டுரைகளும், கவிதைகளும் செய்வதாகச் சொல்லி, ஜே.கே பற்றி எழுதிய சில கட்டுரைகளை சுவாமி மூலம் கொடுத்தனுப்புவதாகச் சொன்னான். கிட்ட வந்த ஜே.கே மீண்டும் எட்டப் போய்விட்டார்! தினேஷின் கட்டுரைகள் நந்துவிற்கு ஜே.கேயை அறிமுகப்படுத்தாமல் அந்நியப்படுத்தின.&lt;br /&gt; &lt;br /&gt;ஜே.கே இந்திய அறிவுஜீவிகளின் குரு என்பது அப்போதுதான் புரிந்தது! நந்து தமிழில் அறிவுஜீவி. ஆயினும் அது ஒரு குந்துமணி அளவு குறைவுதான் என்று தமிழக அறிவுலகம் அவனுக்கு சுட்டிக்காட்டியது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="640" height="390"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/YOxLtObGimo&amp;hl=en_US&amp;feature=player_embedded&amp;version=3"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/YOxLtObGimo&amp;hl=en_US&amp;feature=player_embedded&amp;version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-2852291646333265009?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/2852291646333265009/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=2852291646333265009' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/2852291646333265009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/2852291646333265009'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/10/9.html' title='ஆலவட்டம் 9'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-3458827780663471516</id><published>2010-09-26T11:49:00.003+09:00</published><updated>2010-09-26T11:57:02.843+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='JK and K'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='listening'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='intellectual arrogance'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='J.Krishnamurti'/><title type='text'>ஆலவட்டம் 8</title><content type='html'>You see to go into this one must have great humility; not humbleness, not sycophantism, not touching somebody's robes and  saying 'I am very humble'. That quality of humility that has had no vanity, that has never known vanity. You understand?  Otherwise it is not humility. Go into this carefully. Those who are vain, arrogant, full of their own importance and their own  knowledge, their own realisation, and all that business, in that there is a sense of self-importance. And that state of mind then  cultivates humility. Haven't you known all this? So a mind that has known vanity in any direction - scientifically, religiously,  politically, the sense of achievement which gives one a great self-importance and arrogance - such a mind can never comprehend  a quality which is totally free of vanity. We are meeting all this?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.jkrishnamurti.com/krishnamurti-teachings/view-text.php?tid=1336&amp;chid=1035"&gt;Intelligence, Love and Compassion&lt;/a&gt;&lt;br /&gt;J. Krishnamurti&lt;br /&gt;Sixth Public Talk in Saanen&lt;br /&gt;July 1979&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பென்குயின் வெளியிட்டிருந்த ‘வாசகர் கிருஷ்ணமூர்த்தி’ என்ற நூலை முதன்முறையாக நூலகத்தில் பார்த்த போது நந்துவினால் உடனே  ஈர்க்கப்பட்டு உள்ளே நுழைய முடியவில்லை. அப்புத்தகம் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருந்தது. நந்து அதிகமாக நான்பிக்‌ஷன் என்று  சொல்லக்கூடிய புதினமல்லாத எழுத்துக்களை ஆங்கிலத்தில் வாசித்ததில்லை. சிந்தனையைத் தொடர்ச்சியாக ஆங்கில மொழி மூலம் நிறுத்துவது  கடினமாக இருந்தது. ஆங்கிலம் அவன் வாழ்வில் மெல்லப் புகுந்து ஆளுமை செலுத்தத் தொடங்கியிருந்தும் அறிவியல் அல்லாத பிற  துறைகளில் ஆங்கிலம் கொண்டு காலூன்றப்பழகவில்லை இன்னும். மேலும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ஆங்கில நடை, நாவல்களில் படிக்கும்  எளிய நடையல்ல. அது வேறொரு அறிவியல் நடையாக இருந்தது. புதிய உளவியல் கலைச் சொற்கள், குழூமக்குறியீடுகள். ஆங்கில அறிவியல்  ஜார்கனே (கலைச்சொல்) இன்னும் கற்றுக் கொள்ள நிறைய இருந்த போது வேறொரு துறைக்குள் புகுந்து புதிய கலைச் சொற்களையும், அதன்  ஆழ்பொருளையும் நோக்கும் காலவசதி நந்துவிடம் அப்போது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக, அவன் வளர்ந்த சூழலில் வேதாந்த விசாரமோ, தத்துவ விசாரங்களோ சுத்தமாக இல்லை. கிராமத்தின் வாழ்வு சில  கட்டங்களுக்குள் மீறாமல் சுற்றிக்கொண்டு இருந்தது. பக்மினிஸ்டர் ஃபூலர் எனும் அமெரிக்க விஞ்ஞானி, தத்துவப் பேராசிரியர், கவிஞர்,  பொறிஞர் சொல்லுவார், ‘எப்போது நான் ஒரு சுழற்சியின் நடுவில் இருக்கிறேன் என்று உணர்கிறேனோ அப்போதே அதிலிருந்து வெளியே  குதித்துவிடுவேன்’ என்று சொல்லுவார். கிராமத்தில் அப்படி எந்த முயற்சியும் இருந்த மாதிரித் தெரியவில்லை. இருக்கின்ற வட்டத்தைவிட்டு  வெளியே குதி என்று உரத்துச் சொல்லிக் கொண்டிருந்தவர் ஈ.வே.ரா பெரியார் ஒருவர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதாக, தத்துவ விசாரத்திற்குள் மூழ்க மனப்பக்குவம் வேண்டும். சங்கரர், ஞான சம்பந்தர் போன்றோருக்கெல்லாம் இளமையிலேயே  இறையருளால் பிரம்மஞானம் வந்துவிட்டது. ஆங்கிலப்பாட டிக்டேஷன் செய்து கொண்டிருந்த இரமணருக்கு ‘தான்’ செத்துவிட்ட உணர்வு  திடீரெனத் தோன்றியது. அதன் பின் அவன் எளிமையான பள்ளி மாணவனாக வாழ முடியவில்லை. முப்புரி நூலை எறிந்துவிட்டு,  கோவணாண்டியாகிப் போனான். ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கும் இளமையிலேயே சுடர்விடும் அறிவு கிட்டியிருந்தது. பிரம்மஞானத்தைவிட  வாழ்வதற்கு வேறேதும் துணை இல்லை என்று ஆகிப்போனவர்கள் இவர்கள். ஆனால், ஒரு சாதாரண மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த  நந்துவிற்கு சுவைத்து வாழ்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தன. இளமையின் உச்சத்திலிருந்த நந்துவிற்கு தான் வசீகரமாக இருப்பதை  உணரும் போக்குடன் உலகம் வசீகரமானது என்பதும் புரிந்தது. பல்கலைக் கழக வாழ்வு அவனுக்குப் புதியதோர் சுதந்திரத்தை அளித்திருந்தது.  வீட்டின் நான்கு சுவரிலிருந்தும், கண்காணிக்கும் கண்களிலிருந்தும் விடுதலை கிடைத்திருந்தது. அதுவரை அவன் முதல் வகுப்பில் தேறிப்பெற்ற  கல்வியின் இறுமாப்பு நெஞ்சு பூரா இருந்தது. தமிழும், கவிதையும் அவனுக்குப் புதியதோர் அவதாரத்தை அளித்தன. தோளில் ஒரு  ஜோல்னாப்பை, மூக்குக் கண்ணாடி, முகத்தில் குறுந்தாடி, தலையில் தொப்பி, கண்களில், ‘உலகம் தூசு’ எனும் பார்வை. கையில் புதுக்கவிதை,  இவையே அப்புதிய அவதார லட்சணங்கள். நான் எல்லோரிலும் மாறுபட்டவன் எனும் எண்ணம் வலுவாக இருந்தது. உன்னிலிருந்து உலகம்  என்பது மாறுபட்டதல்ல. நீயே உலகம் என்று சொல்லும் ஜே.கே எப்படி ‘இந்த’ நந்துவிடம் நெருங்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிசங்கர பகவத்பாதாள் ‘பஜகோவிந்தம்’ பாடும் போது ‘யௌவன கர்வம்’ என்றொரு பயன்பாடு செய்வார். அகப்பாடு (ஈகோ) என்பதற்கும் உடல்  வலுவிற்கும் நிறையத் தொடர்புண்டு. இளமையில் கர்வம் நிறைய இருக்கும். இது மனிதர்களுக்கு என்று மட்டுமில்லை, விலங்கிற்கும்  பொருந்தும். இளமை தரும் பூரிப்பு ஒருவகையான கனவுலக மிதப்பைக் கொண்டுவர கால் தரையில் பாவினால் ஆச்சர்யம். அப்போது பெரியோர்  பேச்சு காதில் படாது. கோயில் என்பது இளம் பெண்களைக் காணும் இடமாகத்தோன்றும். கல்லூரி என்பது பொழுது போக்கும் இடமாகப்  பரிமளிக்கும். உலகமே உண்டு களிக்கத் தோன்றிய பீடமாகத் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ‘நெஞ்சுக்கு நீதி’ வேண்டும் என்று ஆரம்பிப்பார். அது என்ன நெஞ்சுக்கு நீதி? சமூக விலங்காக மனிதன் தாக்குப்பிடிக்க  வேண்டுமெனில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று பழகிக்கொள்ள வேண்டும். எல்லோருடைய ஈகோவும் இறுகிக்கட்டிப் போயிருப்பதால்  அதனுடன் மோதாமல், அதற்கு இதமாகத் தடவிக் கொடுக்கப் பழக வேண்டும். அப்போதுதான் தனது ஈகோ குத்துப்படாமல் இருக்கும். இப்படி  சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாத ஒரு போக்கை சமூகம் நம்மிடம் வளர்த்துவிடுகிறது. அங்கு நெஞ்சுக்கு நீதி இல்லை. சமூகத்தில்  பாசாங்குத்தனத்திற்கு ஒரு மதிப்புண்டு. அதுவொரு பிழைக்கும் உத்தி கூட. பாசாங்குத்தனம் இல்லாத மனிதர் என்று எவரேனும் உண்டோ?  ஆனால், ஆன்மீகப் பயணத்தில் இதற்கு இடமில்லை. மற்றோருக்குப் போக்குக்காட்டலாம். தனக்கே போக்குக்காட்ட முடியுமோ? ஆனால்,  அதுதான் நடக்கிறது. பாசாங்கு செய்து பழகிய மனது தனக்கும் பாசாங்கு செய்துவிடுகிறது. அப்போது நெஞ்சுக்கு நீதி கிடைப்பதில்லை.  ஜே.கேயின் பாதையில் காலடி வைப்பதற்கு முன் நெஞ்சுக்கு நீதியும், நாணயமும் வேண்டும். போக்கற்ற, புகலற்ற, வெளிப்படையான நேர்காணல்  நிகழ வேண்டும். அப்போதுதான் சுயதரிசனம் கிட்டும். ஜேகே நெறியில் உட்புகும் போது கிடைக்கும் முதல் பரிசு, ஒரு பேயறை!! ஆம், அவர்  ஒரு தூய, தெளிவான கண்ணாடி போல் நம்மிடம் உள்ளதை உள்ளபடி காட்டிவிடுவார். நமது பொய்மையும், பாசாங்குப்போக்கும், வஞ்சகமும்,  நேர்மையற்ற நெஞ்சும், குறுக்கு புத்தியும் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும். நாணிக்குறுகிச் சாக வேண்டிவரும். தன்னுள் சாதல் என்பது  ஆன்றோர்களால் பாராட்டப்படும் ஒரு செயல்.  ஒன்று செத்தால்தான் புதியதொன்று பிறக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நந்து இதற்கெல்லாம் தயாராக அப்போது இல்லை. தானொரு அறிவுஜீவி எனும் இறுமாப்பு மண்டிக்கிடந்தது. இது பெரும்பாலும்  அவனது போட்டிகள் நிரம்பிய கல்வி வாழ்வு கொடுத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜே.கேயைத் தொட்ட அந்த நந்துவிற்குள் ஒரு  தாமரை மலர் மணம் வீசக்காத்திருந்தாலும், வாழ்வு அவனுக்கு இளமையிலே மிகக்கஷ்டமான பாடங்களைக் கற்றுக் கொடுத்திருந்தாலும்,  அதையும் மீறி சாட்டையடி வாங்கி மரத்துப் போகும் தோல் போல் போட்டிகள் நிரம்பிய வாழ்வு அவனை முரடனாக்கியிருந்தது. முரடன்  என்றால் உடல் வலுவில் அல்ல. நாவினால் சுடும் வல்லமை அவனிடம் இருந்தது. கனியிருக்க காயையே உண்ணச்சொல்லி சமூகம் அவனைப்  பதப்படுத்தி வைத்திருந்தது. எனவே, அவன் பக்குவப்படவில்லை. ஜேகே கிட்ட வந்தும் அவனிலிருந்து எட்ட நின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe class="youtube-player" type="text/html" width="480" height="385" src="http://www.youtube.com/embed/JKvz3BdB2EE" frameborder="0"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-3458827780663471516?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/3458827780663471516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=3458827780663471516' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/3458827780663471516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/3458827780663471516'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/09/8.html' title='ஆலவட்டம் 8'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/JKvz3BdB2EE/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-7686947099952922501</id><published>2010-09-25T14:02:00.001+09:00</published><updated>2010-09-25T14:04:28.185+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='JK and K'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Spiritual travelogue'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='J.Krishnamurti'/><title type='text'>ஆலவட்டம் 7</title><content type='html'>*Question*: why is your teaching so purely psychological? There is no cosmology, no theology, no ethics, no aesthetics, no sociology, no political science, not even hygiene. Why do you concentrate only on the mind and its workings? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*Krishnamurti*: For a very simple reason, Sir. If the thinker can understand himself, then the whole problem is solved. Then he is creation, he is reality; and then what he does will not be antisocial. Virtue is not an end in itself; virtue brings freedom, and there can be freedom only when the thinker, which is the mind, ceases. That is why one has to understand the process of the mind, the ‘I’, the bundle of desires that create the ‘I’, my property, my wife, my ideas, my God. Surely it is because the thinker is so confused that his actions are confused; it is because the thinker is confused that he seeks reality, order, peace. Because the thinker is confused, ignorant, he wants knowledge; and because the thinker is in contradiction, in conflict, he pursues ethics to control, to guide, to support him. So, if I can understand myself, the thinker, then the whole problem is solved, is it not? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Collected Works of J. Krishnamurti, Vol IV. 1948 6th Public Talk, Bombay &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்து வாழ்ந்த சூழல் சமயம் தொடர்பான தீவிரக் கேள்விகளைக் கேட்க அனுமதிக்கவில்லை. கிராமச் சூழலில் படிநிலை மிக முக்கியமாக இருந்தது. கேள்விக்கு அப்பாற்பட்டவராக கடவுள் இருந்தார். இவனைச் சுற்றி ஏதேதோ கதைகள், கோயில் முழுதும் புராணங்கள். வயற்காட்டில் வேறுவிதமான கதைகள், நடுகல், மூதாதையர் வழிபாடு, ஆவி பேசுதல், பேய் ஓட்டுதல், இரவில் நடமாடும் கருப்பு என்று. இவையெல்லாம் ஒருவகையில் பயம் கலந்த மனோநிலையைத் தந்தாலும், நந்துவின் கற்பனைக்கு இத்தனையும் உரம் போட்டன. நந்து ‘பத்ம நிலையம்’ எனும் அவன் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கதை சொல்லத் தொடங்கினான்! ஆரம்பிக்கும் போதே கேட்பான், ‘எந்தக் கதை வேண்டும்? மர்மக்கதையா? மகாராஜா கதையா? என்று. கேட்போரின் தேர்விற்கு ஏற்றவாறு உடனே கதை எழும், நடமாடும், துள்ளிக் குதிக்கும். சகச் சிறார்கள் அப்படியே மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பர். பக்கத்து வீட்டுப் பாட்டியும், தப்பைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு கேட்பாள். அது நந்துவிற்கும் தெரியும். இக்கதைகளில் பேய், பிசாசு, தேவர்கள், அசுரர்கள், அரசர்கள் என்று எல்லோரும் வந்து போவர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பனையூரம்மன் என்று ஒரு கிராமத்துக்காரர் வருவார். நிண்ட நெடிய உருவம். கால்களில் கணையாழி. கைகளிலும் அதுவே. மரப்பாதுகை. கையில் சாட்டை. எடுத்து ஒரு வீச்சு வீசுவார். காற்றைக் கிழித்து விசிலடித்து வந்து ஓயும்! கையில் திருநீறு தட்டு வைத்திருப்பார். எல்லோரும் அவருக்கு அரிசி, பருப்பு, காசு கொடுப்பார்கள். அவர் யாரிடமும் பிச்சை கேட்க மாட்டார். தெருவில் நடந்து கொண்டே இருப்பார். மக்கள் நிறுத்தி விபூதிப் பிரசாதம் வாங்கிக்கொண்டு பிட்சை போடுவர். அக்கிரஹாரத்துச் சிறுமிகள் நடுங்கிக்கொண்டே வந்து போட்டுவிட்டு ஓடிவிடும். வீட்டுக்குள்ளிலிருந்து நடுங்கிக் கொண்டே மாமி பார்த்துக் கொண்டிருப்பாள். கிராம தேவதைகள் முரட்டுத்தனமானவை. புதூர் மாரியம்மன் கோயில் உற்சவம் பங்குனியில் வரும். சும்மாவே சூடு பறக்கும் சூழலில் வெறும் கையில் அக்கினிச் சட்டியை வைத்துக்கொண்டு வரும் இராசுச் சேர்வையைக் கண்டால் அக்கிரஹாரம் மிரளும். அக்னிக்கு உணவு என்ன? எண்ணெய்தானே! எல்லோரும் அக்கினிச்சட்டியில் நெய் விடுவர். அது இன்னும் பீரிட்டு எழும். பார்க்கவே பயங்கரமாக இருக்கும். கோரக்கன் கோயில் சாமி ஆடு பலி கேட்கும். ‘ஏதாவது தப்புப் பண்ணினால்சாமி கண்ணைக் குத்தும்’ என்று வீட்டுப் பெரியவர்கள் சொன்னால் குழந்தைகள் நம்பினர். கையில் வேல் வைத்துக் கொண்டு பால் காவடி எடுப்பவர்கள், உடலில் வேல்களைக் குத்திக்கொண்டு பாலஷண்முகர் கோயிலுக்குள் போவதைப் பார்த்தால் சாமி கண்ணைக்குத்தும், காதைக்குத்தும், நாக்கைக்குத்தும் என்று சொன்னாலும் குழந்தைகள் நம்பும் என்று தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்துவின் வாழ்வில் எப்போதும் மரணபயம் சூழ்ந்திருந்தது. கிராமத்தில் மிகவும் அச்சம் தரக்கூடிய சொல் மரணம். யாரும் இச்சொல் கேட்கப்பயந்தனர். அதுவொரு அமங்கலச் சொல்லாக இருந்தது. ஆயினும், அவர்கள் வாழ்வை மரணம் சூழ்ந்தே இருந்தது. பாடை கட்டி, ‘கோவிந்தா! கோவிந்தா!!’ என்று நெருப்புச் சட்டியுடன் போகும் பயணங்களை நந்து பள்ளி செல்லும் போது பார்த்துக் கொண்டுதானிருந்தான். ஆயினும், அது பிறர் மரணம். அது நம் வீட்டிற்கு வந்துவிடக்கூடாது என்று எல்லோரும் பயந்தனர். கோயில் என்ற ஒன்று அங்கு இருப்பதே இந்தப் பயம் விளைவித்த கெடுபிடியோ என்று கூட நம்பும்படி அவ்வாழ்வு இருந்தது. சிவன் கோயிலில் சாம்பல் தருகிறார்கள். அது வாழ்வின் நிலையாமைக் குறிக்கிறது என்று யாரும் சொல்லித்தரவில்லை. சாம்பல் எனும் அமங்கலச் சொல்லை நீக்கி, விபூதி எனும் மங்கலச் சொல்லை உட்புகுத்தினர். கோயில் பட்டர் கொடுக்கும் விபூதிப் பிரசாதத்தில் மரணத்தின் எந்த வாடையும் உட்புகா வண்ணம் நல்ல செண்ட் போட்டுக் கொடுத்தார். சந்தனம், ஜவ்வாது போல் விபூதியும் மணக்கும்படி வைத்தனர். இவ்வளவு கவசங்களை உருவாக்கி வைத்திருந்தாலும் உண்மையைப் போட்டு உடைக்க குடுகுடுப்பாண்டிகள் அவ்வப்போது வந்து போயினர். அதுவும் அவன் நடு இரவில் வந்து குறி சொல்லும் போது எல்லோருக்கும் குலை நடுங்கும். ஏதாவது அமங்கலமாகச் சொல்லிவிடுவானோ என்று. ஆனாலும், என்ன சொல்கிறான் என்பதை அறியும் ஆவலும் இருப்பதால் எல்லோரும் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டு அவன் சொல்லும் குறியை அவ்வூரில் கேட்டனர்! யார் கண்டது, வீட்டின் கொல்லையில் ஏதாவது புதையல் இருக்கிறது என்று சொல்லிவிட்டால்? இப்படிக் குறி கேட்டு வீட்டுக் கொல்லையில் தோண்டத் தோண்ட புதையல் வராமல் நீர் வந்த வீடுகள் அதிகம். அதுவும் ஆற்றுப்படுகைக்கு அருகிலுள்ள வீடுகளில் பத்தடி தோண்டினால் நீர் வந்துவிடும். மழைக்காலங்களில் கிணறு நிரம்பி வழிவதைக் காண நந்துவிற்கு மிகவும் பிடிக்கும். ஆக, அந்த ஊரில் யாருக்கும் பிடிக்காத ஓரிடம் உண்டு என்றால் அது மயானம்தான். எல்லோரும் ஒரு நாள் அங்கு போய்த்தான் ஆக வேண்டும் என்பதை நந்து பின்னால் தெரிந்து கொண்ட போது நந்து உடைந்து போனான். வாழ்வின் அடிப்படையான கேள்விகள் புறம் தள்ளப்பட்டு, போலிச் சம்பிரதாயங்களும்,மூடநம்பிக்கைகளும் அங்கு வளர்த்து எடுக்கப்பட்டன! ஏதாவது ஞான பூர்வமாகக் கேட்டால், ‘ஏண்டா வெட்டி வேதாந்தம் பேசிக்கொண்டு இருக்கிறாய்?’ என்று ஊர் சொல்லிவிடும். நந்துவிற்கு வேதாந்தம் என்றால் என்னவென்று தெரிந்திருக்க நியாயமில்லை. இந்திய மெய்யியல் பாடப்பயிற்சி என்பது துளியும் இல்லை. நசிகேதனுக்கு இருந்த வாய்ப்பு நந்துவிற்கு இல்லை. எனவே அங்கு அத்மபோதம் நிகழவில்லை. சடங்குகள் மண்டிக்கிடந்தன. கூடவே மூடநம்பிக்கைகளும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பின்புலத்தில்தான் நந்துவின் ஆன்மீக வித்து பெரியார் ஈவேராவால் விதைக்கப்பட்டது. காலையில் எழுந்தவுடனேயே கோயில் சுவரில் நந்து காண்பது, ‘கடவுள் இல்லை! இல்லவே இல்லை! கடவுளை நம்புகிறவன் முட்டாள்!’ என்று அழிக்கமுடியாத கரிப்பட்டையாக எழுதப்பட்டிருக்கும். இதன் முரண்நகை அவனை இன்று கூட இம்சிக்கிறது. இல்லாத ஒன்றை இல்லை என்று சொல்வது பகுத்தறிவாகாது. இருப்பதைத்தான் இல்லையென்று சொல்ல முடியும். இப்பிரசாரத்திற்கு ஆதாரமாக நிற்பது பெரிய கோயில் சுவர். சிந்தனையின் முரண் தெள்ளத்தெளிவாக இப்பிரசாரத்தால் வெளிப்பட்டது. எங்கெல்லாம் சிந்தனை முரண் உள்ளதோ அங்கு குழப்பமும், தெளிவின்மையும் தாண்டவமாடும், பகுத்தறிவு மழுங்கிவிடும், மூடநம்பிக்கை வளரும் என்று ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்வதை நந்து பின்னால் கேட்கப்போகிறான். அந்தக் கிராமத்தில் இருந்த பெரிய மூடநம்பிக்கைகளில் ஒன்றாகப் பெரியார் பிரசாரமும் அமைந்துவிட்டது தமிழக முரண்நகை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="640" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/fB1_1J6Jqvk?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/fB1_1J6Jqvk?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="640" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[ அருமையான விழியம். பதப்படுத்துதல் (social conditioning) என்பதைக் கணினிச் செயலி (சாஃப்ட்வேர்)யுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். எப்படி நமது வாழ்வு சிந்தனை முரண்களால் ஆளப்படுகிறது என்பதையும் விளக்குகிறார். பின்னால் ஓடும் இசை உதவி என்பதைவிட உபத்திரவமாக் அமைந்துவிட்டது சோகம்]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-7686947099952922501?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/7686947099952922501/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=7686947099952922501' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/7686947099952922501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/7686947099952922501'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/09/7.html' title='ஆலவட்டம் 7'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-1842853871772660198</id><published>2010-09-25T13:48:00.004+09:00</published><updated>2010-09-25T13:57:30.949+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='JK and K'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Spiritual travelogue'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='J.Krishnamurti'/><title type='text'>ஆலவட்டம் 6</title><content type='html'>நந்துவின் சிந்தனாமொழி தமிழாக இருந்ததால் ஜே.கிருஷ்ணமூர்த்தி முதல் பார்வையில் உவப்பளிக்கவில்லை. ஜேகேயும் நம்ம வீட்டுப் பிள்ளைதான். ஆனால் பசுவிடமிருந்து கன்றைப் பிரிப்பது போல் வெள்ளையர் ஆதிக்கம் அடையாறு கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கள்ளமற்ற சிறுவனை அவன் தாயிடமிருந்து, உறவுகளிடமிருந்து, தாய் மண்ணிடமிருந்து பிரித்துத் தனித்து கொடுமை செய்துவிட்டது. கிருஷ்ணமூர்த்தி சுந்தரத்தெலுங்கில் பேசிக்கொண்டு இருந்திருக்க வேண்டியவர். அவர் கடைசிவரை சொன்ன ஒரே தெலுங்குச் சொல், ‘அம்மா’ என்பது. அதுவும் தன் தாயைக் குறித்து அல்ல. அன்னிபெசண்ட் அம்மையாரை நோக்கி!! இந்தப் பிரிவினை, இத்தனிமை அவர் வேண்டிப் பெற்றதன்று. அவர் மேல் திணிக்கப்பட்டது. தங்கத்தைப் புடம் போடுவது போல் அவர் புடம் போடப்பட்டார். அவர் இந்திய மண்ணில் இயற்கையாக மலர்ந்திருக்க வேண்டிய மலர். இந்திய ஆன்மீக மரபின் ஒரு வித்து அவர். செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழம் அவர். வெள்ளையர் உலகம் கண்ட கோயில் யானை அவர்!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர் கிடைத்ததால் இந்திய ஞான மரபு என்பது எவ்வளவு தீவிரமானது என்பதை முதன்முறை மேற்குலகம் கண்டது. இவரிடம் சமரசமே கிடையாது. ‘என்னை நீ தனிமைப் படுத்தினாயா! உலகே! நீயும் படு அந்த அவதியை!! என்று பழி தீர்த்துக் கொண்ட மார்க்கம் ஜே.கே மார்க்கம்! கொஞ்சம் மூர்க்கமானதும் கூட. பயித்தியமான சில கேசுகளுண்டு. ஆனால், அவர் கடைசிவரை சமரசம் செய்து கொள்ளவில்லை. இவரை ‘கிழக்கின் நட்சத்திரம்’ என்றனர். இவரை அவதார புருஷராக்கி கோயில் கட்டினர் (தேவாலயம்-சர்ச்). இவர் அது தோற்றுவிக்கப்பட்ட கணத்திலேயே அழித்துவிட்டார். இவரை உருவாக்கி காத்து வந்தஅன்னிபெசண்டின் நெஞ்சம் உடையும் வண்ணம் இவர் தியசோபிகல் சொசைடியை விட்டு விலகினார். Truth is a pathless land என்று நடக்க ஆரம்பித்துவிட்டார். அப்போது இவர் பதின்ம வயதினர். எங்கிருந்து வந்தது அந்த திடம்? அது வெறும் கோபம் தரும் பலமா? இல்லை, ‘அத்தைத்தின்று அங்கே கிடக்கும்’ இவ்வுலகை வெறுத்த மெய்மை தந்த திடமா (வைராக்கியம்)? குஜராத்தில் சுவாமி நாராயண் எனும் குழந்தை! இறைவனை நம்பி உலகைத் துறந்து வெளியே வந்துவிட்டது. இமயமலையெல்லாம் தனியே அலைந்தது. கல்லுக்கும் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் காவலன் யார்? ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியிடம் அறக்கட்டளை நிர்வாகிகள், ‘தாங்கள் இறந்துவிடும் பக்ஷத்தில் தங்கள் உடலை என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டனர். நம்மவூர் குருமார்களாக இருந்தால் ஒரு நீண்ட பட்டியல் தந்திருப்பர். தலையில் தேங்காய் உடை என்பதிலிருந்து ஆரம்பித்து சமாதி கட்டும்வரை. ஜேகே சொன்னார், ‘கடலில் எறிந்துவிடுங்கள்!’ என்று! கடைசிவரை அவர் எதிலும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரை சமூகப் புரட்சியாளர் என்று காண்போருமுண்டு. இவ்வளவும் அவர் சாதித்ததற்கு அவர் மொழியிலிருந்து பெற்ற விடுதலை ஒரு காரணம். சமூகப் பதப்படுத்தல்கள் அதிகமற்ற தனிமை ஒரு காரணம். மொழியின் உண்மை வடிவைக் கண்டு மெய்சிலிர்த்தவர் ஜே.கே. ஆனால், அதை அடைவதற்கு முன் மொழியைச் சமூகம் பயன்படுத்தி வைத்திருக்கும் பதப்படுத்தலிலிருந்து விடுதலை பெற வேண்டும். ஜே.கேயின் பேச்சுக்களில் பெரும்பாலும் ஆங்கில மொழியின் வேர்ச்சொல் பற்றிய ஆய்வு இருக்கும். வேர்ச்சொல் மிக அர்த்த புஷ்டியாக இருக்கும். ஆனால் சமூகம் அதைப் பொருளற்ற இயந்திர கதியில் பயன்படுத்திவரும். ஜேகே அடிக்கடி சொல்வார் உலகில் மிகவும் கொஞ்சைப் படுத்தப்பட்ட சொல், ‘காதல்/அன்பு (Love)' என்பது என்று!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பாவம் நந்து அப்போதுதான் தமிழை சுவைக்கத் தொடங்கியிருந்தான். இவன் படிப்பில் தமிழ் இலக்கியம் என்பதற்கே இடமில்லாமல் போன போது, இவனுக்கு ஆறுதலாக வந்து சேர்ந்தான் தாமரைச் செல்வன். ஒரு வருடம் சீனியர். வேறு துறை (பொருளாதாரம்). பேரா.நெடுமாறனின் மருமான். அவர் வாங்கும் அத்தனை புதுக்கவிதை நூல்களும் அவர் வாசிப்பிற்குப் பின் நேரடியாக நந்துவின் கைக்கு வந்துவிடும். நந்து கவிதை செய்த போது எழுதப்படாத ஸ்லேட்டுபோல் அவன் மனது இருந்தது. இவன் புதுக்கவிதை செய்தது பின்னால் பல தமிழ்த்துறை மாணவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது! ஒரு ஆய்வு மாணவர் சொல்லியே விட்டார், ‘நந்து நீவீர் கொடுத்து வைத்தவர். சங்கம் தொடங்கி காளமேகம் வரை எல்லாச் சிலுவையையும் சுமந்து கொண்டு நாங்கள் அலைகிறோம். நீர் சுமைதாங்கியாக இல்லாமல் சுதந்திரமாக எழுதுகிறீர். நாங்கள் எழுதினால் அத்தனை புலவரின் ஆவிகளும் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு மிரட்ட ஆரம்பிக்கின்றன!!’ என்று சொல்லிச் சிரித்தார். நந்து ஜே.கேயை அறிந்து கொண்டபின் அதன் அர்த்தம் புரிந்தது! சுதந்திரம் என்பது இழப்பதற்கு ஒன்றுமில்லை எனும் நிலை! நந்து புதுக்கவிதை இயக்கத்தைப் பெரிதும் ஆதரித்தான். ஏனெனில் தமிழ்த் தாகமுடைய, ஆனால் தமிழ்த்துறை சாராதோருக்கு புகல்தரும் தருவாக அது இருந்தது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Freedom and Authority can possibly never go together. Freedom and Intelligence can go together instead! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/w0cjoOIWi9U?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/w0cjoOIWi9U?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt; &lt;br /&gt;&lt;br /&gt;(சின்ன விழியம்) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்து கல்லூரி நாட்களில் ஜெயகாந்தன் முழுவதையும் படித்து முடித்திருந்தான். ஜெயகாந்தன் மதுரையில் வாழ்ந்தவர் என்பது அவனுக்கு ஒரு ஆறுதல். புதுக்கவிதை ஆசிரியர்கள் எல்லோரும் பழக்கமாகியிருந்தனர். ஆயினும் அவனுக்கு உண்மையான நவீன இலக்கியம் பரிட்சயமானது பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த போதுதான். இவன் தன் சகோதரி வீட்டிலிருந்து நாகமலை புதுக்கோட்டைக்கு ரயிலில் தினம் வருவான். பல்கலைக் கழக ஆய்வு என்பது ஒரு கொத்தடிமை முறையில் அப்போது நடந்து வந்தது. கல்லூரிகளில் உயர் மதிப்பெண் பெற்று வரும் மாணவர்கள் மேலும் படிக்க வேண்டுமென்ற ஆவலில் பல்கலைக் கழகம் விரிக்கும் ஆய்வு வலையில் சிக்கிக் கொண்டனர். முதல் இரண்டு வருடங்களுக்கு எந்த ஸ்டைபண்டும் கிடையாது. தன் காலிலேயே நின்று பேராசிரியர்களுக்கு தங்கள் தனியாத ஆர்வத்தைக் காட்டி மெய்ப்படுத்த வேண்டும். எனவே, பெரும்பாலும் பணக்கார வீட்டுப் பையன்களே அக்காலத்தில் ஆய்வு செய்து வந்தனர். நல்லவேளை நந்து ஒரு வருடம் கல்லூரியில் வேலை பார்த்து காசு சேர்த்துவைத்திருந்தான். இப்படி இவன் சம்பாதிக்காமல் மேலே படிக்கப் போனதில் குடும்பத்தில் கொஞ்சம் வருத்தம். கல்யாணமாகாத சகோதரிகள் இருக்கும் போது வேலைக்குப் போய் கல்யாணம் செய்து வைக்காமல் இவன் தாந்தோன்றியாக ‘டாக்டர் பட்டம்’ வாங்கியே தீர்வது என்று பழிகிடக்கிறானே! என்று! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு வழித்துணையாக வந்து சேர்ந்தாள் ராதா. அவளுக்கு இவனைப் பிடித்திருந்தது. அவள் இவனது பேராசிரியரிடம் காரியதரிசியாக வேலை பார்த்து &lt;br /&gt;வந்தாள். அவளுக்கு தி.ஜானகிராமன் கதைகளில் ஆய்வு செய்யும் ஒரு சௌராஷ்டிரக் கல்லூரி ஆசிரியரைத் தெரியும். எனவே அவரிடமுள்ள அத்தனை புத்தகங்களையும் நந்துவிற்கு ஒவ்வொன்றாய் கொண்டு வந்து கொடுத்தாள். தி.ஜானகிராமன் நந்துவிற்கு புதியதோர் உலகைக் காண்பித்தார். அவர் காட்டிய உலகு மென்மை உணர்வுகள் கொண்டதோர் உலகு. வீட்டிற்குள் கிடக்கும் மறைவான அழகைக் காட்டினார். உறவுகளில் புதைந்துள்ள மறை பொருள்களைக் காட்டினார். மோகமுள் எனும் பிரம்மாண்டம் மூலம் பிஞ்சில் தைத்த மோகமுள் என்னென்ன பாடு படுத்தும் என்று காண்பித்தார். நந்து பாபுவாகி யமுனாவிற்காக அலைந்தான். இவன் பார்த்திராத கும்பகோண வீதிகளில் மானசீகமாய் அலைந்தான். ரசனை, ருசி என்பது தீவிரமாக உட்புகுந்து இவன் அழகியலை முற்றும் முழுதுமாய் மாற்றியது. ராதாவே இவனுக்கு லா.ச.ராவையும் காட்டினாள். நந்துவின் முற்றும் படித்த பட்டியலில் ஜெயகாந்தன், தி.ஜா, லா.ச.ரா போன்றோர் சேர்ந்தனர். நந்துவிற்கு தி.ஜாவைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை. அவரது மரப்பசு கதாநாயகி போல் அவர் கையைத் தொட்டு உணர ஆசை. ஆனால், இவன் ஆசை நிறைவேறுவதற்கு முன் அவர் இறந்துவிட்டார். எனவே, லா.ச.ரா போகும் முன் அவரைக் காண இவன் புறப்பட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்துவின் பல்கலைக் கழகம் லா.ச.ராவைக் கௌரவித்தது. புசு, புசுவென்ற புருவமும், தீர்க்கமான கண்களும் கொண்ட அந்த மனிதர் மேடையில் இப்படிச் சொன்னார். ‘என் &lt;br /&gt;ஆக்கத்தின் மேல் ஆய்வு செய்வதாகப் பேராசிரியர்கள் சொல்கிறார்கள். லா.ச.ராவைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவன் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாலும் அதில் பொருள் இருக்கும் என்பதை அறிய வேண்டும்’ என்றார். இப்படி சிந்திப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. மிகப்பின்னால் அவரை இவன் சந்தித்த போது, வாசற்கதவைத் திறந்து கொண்டே, ‘நீர் வைஷ்ணவரோ?’ என்றார். இதை எப்படி இவர் கண்டு பிடித்தார்? என்று நோக்கியபோது, ‘உனது கடுதாசியில் இந்தத் தேதி ‘தோதுப்படுமா?’ என்று கேட்டிருந்தாய். அப்பயன்பாடு வைஷ்ணவர்களுடையது!’ என்று சொன்ன போது இவன் விக்கித்துப்போகவில்லை. இதை எதிர்பார்த்து அனுபவிக்கத்தான் அவன் வந்திருந்தான். ஆறுமாதமாக ஒரு சிறுகதை எழுதுவதாகச் சொன்னார். வார்த்தை, வார்த்தையாக செதுக்கிக்கொண்டு இருக்கிறாராம். மதியம் முழுவதும் பேசிக்கொண்டு இருந்தனர். அவரோடு இருப்பது ஏதோ இறைச் சந்நிதியில் இருப்பது போல் பட்டது நந்துவிற்கு. மாலையாகிவிட்டது. பெரியவர் சாப்பிட வேண்டும். ‘மாமா! உத்தரவு கொடுங்கோ! கிளம்பறோம்!’ என்றான் நந்து (கூட வந்தது இவன் மருமான் கோபிநாத்). ‘நந்து உன்னை விடவே மனசு வரலைடா! சரி உள்ளே வா!’ என்று அழைத்துப் போனார். ‘மாமியையும் கூப்பிடுங்கள்! சேவிக்கிறோம்’ என்றனர். இவர் பழுத்த சிவனாகவும், மாமி அப்படியே அகிலாண்டேஸ்வரியாகவும் நந்துவிற்கு தோற்றமளிக்க அப்படியே சாஷ்ட்டாங்கமாக விழுந்து சேவித்தான். கையில் திருநீறு தட்டும் அதுவுமாக அவர் ஏதோ சித்த புருஷர் போல் இருந்தார். மீண்டும் வாசற்கதவுவரை வந்து வழி அனுப்பியவர், ‘நந்து, இது இந்த ஜென்ம உறவில்லைடா! நமக்கு முன்னாலேயே தொடர்பு இருக்கு! நன்னா இரு!’ என்று மீண்டும் ஆசீர்வதித்து வழி அனுப்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்துவின் முதற்கதை முன்னமே வெளிவந்து இருந்தது. ஆய்வுக் கொத்தடிமை வாழ்வில் இவனைத் தளிர்ப்பித்துக் கொண்டிருந்தது தமிழ். தமிழ்த்துறை மாணவர்களுடம் பழக &lt;br /&gt;ஆரம்பித்தவுடன் அவர்கள் இன்னும் சீரிய இலக்கிய கர்த்தாக்களை அறிமுகப்படுத்தினர். முதன்முதலாக ‘ஒரு புளியமரத்தின் கதை’ படித்தான். நல்ல இலக்கியம் படைக்க என்னென்ன வேண்டும் என்பதை நந்து புரிந்து கொண்டான். அவன் கவிதைகள் கணையாழியில் தொடர்ந்து வெளியாகத் தொடங்கின. சுஜாதாவின் தேர்வில் கூட &lt;br /&gt;இவன் கவிதைகள் தேறின. அது அவனுக்கு நம்பிக்கையை அளித்தது. அதே நேரத்தில் இவன் தமிழ் அறிவியலுக்கும் பயன்பட்டது. முதன்முறையாக ஒரு அறிவியல் நாடகம் எழுதி கணையாழிக்கு அனுப்பினான். அது வெளிவந்தது. திருச்சி வானொலி நிலையத்தில் அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்தித்தரும்படி அழைப்பு வந்தது. தான் கற்ற அறிவியலை பிறருக்குச் சொல்வதற்காக தமிழ் கற்ற நந்து அதை நன்கு பயன்படுத்தினான். நட்சத்திர நிகழ்ச்சியாக ஐன்ஸ்டைன் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சியொன்றை தயாரித்துத்தர நந்து அழைக்கப்பட்டான். அப்போது ஒரு பெரும் பட்டாளத்தையே நந்து அழைத்துக் கொண்டு திருச்சி போனான். அதில் பாடல்களும் இடம் பெற்றன. பாடல்களை எழுதி இசையமைத்தது விவேகாநந்தாக் கல்லூரியில் பின்னால் முதல்வராக இருந்த வா.வே.சு (வி.வி.எஸ்). இவனது சகோதரியும் பாடினாள். கொத்தடிமை முறையில் 7 ஆண்டுகள் &lt;br /&gt;பிடித்தன இவன் ஆய்வு செய்து முடிக்க. இவன் பிறந்த சாதி அங்கும் வந்து அழிச்சாட்டியம் பண்ணியது. இவனது ஆய்வு நூலை அனுப்புவதில் எதிர்பாராத தாமதங்கள். பல்கலைக் கழகக் கொத்தடிமை முறையில் ஜாதிக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. துறைகளுக்கு அறிவியல் பேர் இருந்தாலும் நடைமுறையில் ஐயர் துறை, செட்டியார் துறை, நாடார் துறை, பிள்ளைமார் துறை என்றே இருந்தது. பல்கலைக் கழக நிர்வாகமும் அதற்கேற்றவாறே செயல்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை கஷ்டங்களிலும் நந்துவிற்குத் துணையாக இருந்தது தமிழும், அவன் ஆக்கமுமே! இந்நிலையில் மொழி மேவிய ஒரு தேடல் என்பது நந்துவினால் செய்ய முடியாததாக இருந்தது. மேலும் மொழியின் ஆளுமை என்பது இன்னும் பிடிபடாமல் இருந்ததால் நந்து மேலும் மேலும் நவீன இலக்கியத்தில் தோய்ந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;A short introduction to J.Krishnamurti &lt;br /&gt;&lt;br /&gt;நந்துவின் சிந்தனாமொழி தமிழாக இருந்ததால் ஜே.கிருஷ்ணமூர்த்தி முதல் பார்வையில் உவப்பளிக்கவில்லை. ஜேகேயும் நம்ம வீட்டுப் பிள்ளைதான். ஆனால் பசுவிடமிருந்து கன்றைப் பிரிப்பது போல் வெள்ளையர் ஆதிக்கம் அடையாறு கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கள்ளமற்ற சிறுவனை அவன் தாயிடமிருந்து, உறவுகளிடமிருந்து, தாய் மண்ணிடமிருந்து பிரித்துத் தனித்து கொடுமை செய்துவிட்டது. கிருஷ்ணமூர்த்தி சுந்தரத்தெலுங்கில் பேசிக்கொண்டு இருந்திருக்க வேண்டியவர். அவர் கடைசிவரை சொன்ன ஒரே தெலுங்குச் சொல், ‘அம்மா’ என்பது. அதுவும் தன் தாயைக் குறித்து அல்ல. அன்னிபெசண்ட் அம்மையாரை நோக்கி!! இந்தப் பிரிவினை, இத்தனிமை அவர் வேண்டிப் பெற்றதன்று. அவர் மேல் திணிக்கப்பட்டது. தங்கத்தைப் புடம் போடுவது போல் அவர் புடம் போடப்பட்டார். அவர் இந்திய மண்ணில் இயற்கையாக மலர்ந்திருக்க வேண்டிய மலர். இந்திய ஆன்மீக மரபின் ஒரு வித்து அவர். செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழம் அவர். வெள்ளையர் உலகம் கண்ட கோயில் யானை அவர்!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர் கிடைத்ததால் இந்திய ஞான மரபு என்பது எவ்வளவு தீவிரமானது என்பதை முதன்முறை மேற்குலகம் கண்டது. இவரிடம் சமரசமே கிடையாது. ‘என்னை நீ தனிமைப் படுத்தினாயா! உலகே! நீயும் படு அந்த அவதியை!! என்று பழி தீர்த்துக் கொண்ட மார்க்கம் ஜே.கே மார்க்கம்! கொஞ்சம் மூர்க்கமானதும் கூட. பயித்தியமான சில கேசுகளுண்டு. ஆனால், அவர் கடைசிவரை சமரசம் செய்து கொள்ளவில்லை. இவரை ‘கிழக்கின் நட்சத்திரம்’ என்றனர். இவரை அவதார புருஷராக்கி கோயில் கட்டினர் (தேவாலயம்-சர்ச்). இவர் அது தோற்றுவிக்கப்பட்ட கணத்திலேயே அழித்துவிட்டார். இவரை உருவாக்கி காத்து வந்தஅன்னிபெசண்டின் நெஞ்சம் உடையும் வண்ணம் இவர் தியசோபிகல் சொசைடியை விட்டு விலகினார். Truth is a pathless land என்று நடக்க ஆரம்பித்துவிட்டார். அப்போது இவர் பதின்ம வயதினர். எங்கிருந்து வந்தது அந்த திடம்? அது வெறும் கோபம் தரும் பலமா? இல்லை, ‘அத்தைத்தின்று அங்கே கிடக்கும்’ இவ்வுலகை வெறுத்த மெய்மை தந்த திடமா (வைராக்கியம்)? குஜராத்தில் சுவாமி நாராயண் எனும் குழந்தை! இறைவனை நம்பி உலகைத் துறந்து வெளியே வந்துவிட்டது. இமயமலையெல்லாம் தனியே அலைந்தது. கல்லுக்கும் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் காவலன் யார்? ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியிடம் அறக்கட்டளை நிர்வாகிகள், ‘தாங்கள் இறந்துவிடும் பக்ஷத்தில் தங்கள் உடலை என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டனர். நம்மவூர் குருமார்களாக இருந்தால் ஒரு நீண்ட பட்டியல் தந்திருப்பர். தலையில் தேங்காய் உடை என்பதிலிருந்து ஆரம்பித்து சமாதி கட்டும்வரை. ஜேகே சொன்னார், ‘கடலில் எறிந்துவிடுங்கள்!’ என்று! கடைசிவரை அவர் எதிலும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரை சமூகப் புரட்சியாளர் என்று காண்போருமுண்டு. இவ்வளவும் அவர் சாதித்ததற்கு அவர் மொழியிலிருந்து பெற்ற விடுதலை ஒரு காரணம். சமூகப் பதப்படுத்தல்கள் அதிகமற்ற தனிமை ஒரு காரணம். மொழியின் உண்மை வடிவைக் கண்டு மெய்சிலிர்த்தவர் ஜே.கே. ஆனால், அதை அடைவதற்கு முன் மொழியைச் சமூகம் பயன்படுத்தி வைத்திருக்கும் பதப்படுத்தலிலிருந்து விடுதலை பெற வேண்டும். ஜே.கேயின் பேச்சுக்களில் பெரும்பாலும் ஆங்கில மொழியின் வேர்ச்சொல் பற்றிய ஆய்வு இருக்கும். வேர்ச்சொல் மிக அர்த்த புஷ்டியாக இருக்கும். ஆனால் சமூகம் அதைப் பொருளற்ற இயந்திர கதியில் பயன்படுத்திவரும். ஜேகே அடிக்கடி சொல்வார் உலகில் மிகவும் கொஞ்சைப் படுத்தப்பட்ட சொல், ‘காதல்/அன்பு (Love)' என்பது என்று!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பாவம் நந்து அப்போதுதான் தமிழை சுவைக்கத் தொடங்கியிருந்தான். இவன் படிப்பில் தமிழ் இலக்கியம் என்பதற்கே இடமில்லாமல் போன போது, இவனுக்கு ஆறுதலாக வந்து சேர்ந்தான் தாமரைச் செல்வன். ஒரு வருடம் சீனியர். வேறு துறை (பொருளாதாரம்). பேரா.நெடுமாறனின் மருமான். அவர் வாங்கும் அத்தனை புதுக்கவிதை நூல்களும் அவர் வாசிப்பிற்குப் பின் நேரடியாக நந்துவின் கைக்கு வந்துவிடும். நந்து கவிதை செய்த போது எழுதப்படாத ஸ்லேட்டுபோல் அவன் மனது இருந்தது. இவன் புதுக்கவிதை செய்தது பின்னால் பல தமிழ்த்துறை மாணவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது! ஒரு ஆய்வு மாணவர் சொல்லியே விட்டார், ‘நந்து நீவீர் கொடுத்து வைத்தவர். சங்கம் தொடங்கி காளமேகம் வரை எல்லாச் சிலுவையையும் சுமந்து கொண்டு நாங்கள் அலைகிறோம். நீர் சுமைதாங்கியாக இல்லாமல் சுதந்திரமாக எழுதுகிறீர். நாங்கள் எழுதினால் அத்தனை புலவரின் ஆவிகளும் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு மிரட்ட ஆரம்பிக்கின்றன!!’ என்று சொல்லிச் சிரித்தார். நந்து ஜே.கேயை அறிந்து கொண்டபின் அதன் அர்த்தம் புரிந்தது! சுதந்திரம் என்பது இழப்பதற்கு ஒன்றுமில்லை எனும் நிலை! நந்து புதுக்கவிதை இயக்கத்தைப் பெரிதும் ஆதரித்தான். ஏனெனில் தமிழ்த் தாகமுடைய, ஆனால் தமிழ்த்துறை சாராதோருக்கு புகல்தரும் தருவாக அது இருந்தது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Freedom and Authority can possibly never go together. Freedom and Intelligence can go together instead! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=w0cjoOIWi9U (சின்ன விழியம்) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்து கல்லூரி நாட்களில் ஜெயகாந்தன் முழுவதையும் படித்து முடித்திருந்தான். ஜெயகாந்தன் மதுரையில் வாழ்ந்தவர் என்பது அவனுக்கு ஒரு ஆறுதல். புதுக்கவிதை ஆசிரியர்கள் எல்லோரும் பழக்கமாகியிருந்தனர். ஆயினும் அவனுக்கு உண்மையான நவீன இலக்கியம் பரிட்சயமானது பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த போதுதான். இவன் தன் சகோதரி வீட்டிலிருந்து நாகமலை புதுக்கோட்டைக்கு ரயிலில் தினம் வருவான். பல்கலைக் கழக ஆய்வு என்பது ஒரு கொத்தடிமை முறையில் அப்போது நடந்து வந்தது. கல்லூரிகளில் உயர் மதிப்பெண் பெற்று வரும் மாணவர்கள் மேலும் படிக்க வேண்டுமென்ற ஆவலில் பல்கலைக் கழகம் விரிக்கும் ஆய்வு வலையில் சிக்கிக் கொண்டனர். முதல் இரண்டு வருடங்களுக்கு எந்த ஸ்டைபண்டும் கிடையாது. தன் காலிலேயே நின்று பேராசிரியர்களுக்கு தங்கள் தனியாத ஆர்வத்தைக் காட்டி மெய்ப்படுத்த வேண்டும். எனவே, பெரும்பாலும் பணக்கார வீட்டுப் பையன்களே அக்காலத்தில் ஆய்வு செய்து வந்தனர். நல்லவேளை நந்து ஒரு வருடம் கல்லூரியில் வேலை பார்த்து காசு சேர்த்துவைத்திருந்தான். இப்படி இவன் சம்பாதிக்காமல் மேலே படிக்கப் போனதில் &lt;br /&gt;குடும்பத்தில் கொஞ்சம் வருத்தம். கல்யாணமாகாத சகோதரிகள் இருக்கும் போது வேலைக்குப் போய் கல்யாணம் செய்து வைக்காமல் இவன் தாந்தோன்றியாக ‘டாக்டர் பட்டம்’ வாங்கியே தீர்வது என்று பழிகிடக்கிறானே! என்று! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு வழித்துணையாக வந்து சேர்ந்தாள் ராதா. அவளுக்கு இவனைப் பிடித்திருந்தது. அவள் இவனது பேராசிரியரிடம் காரியதரிசியாக வேலை பார்த்து &lt;br /&gt;வந்தாள். அவளுக்கு தி.ஜானகிராமன் கதைகளில் ஆய்வு செய்யும் ஒரு சௌராஷ்டிரக் கல்லூரி ஆசிரியரைத் தெரியும். எனவே அவரிடமுள்ள அத்தனை புத்தகங்களையும் நந்துவிற்கு ஒவ்வொன்றாய் கொண்டு வந்து கொடுத்தாள். தி.ஜானகிராமன் நந்துவிற்கு புதியதோர் உலகைக் காண்பித்தார். அவர் காட்டிய உலகு மென்மை உணர்வுகள் கொண்டதோர் உலகு. வீட்டிற்குள் கிடக்கும் மறைவான அழகைக் காட்டினார். உறவுகளில் புதைந்துள்ள மறை பொருள்களைக் காட்டினார். மோகமுள் எனும் பிரம்மாண்டம் மூலம் பிஞ்சில் தைத்த மோகமுள் என்னென்ன பாடு படுத்தும் என்று காண்பித்தார். நந்து பாபுவாகி யமுனாவிற்காக அலைந்தான். இவன் பார்த்திராத கும்பகோண வீதிகளில் மானசீகமாய் அலைந்தான். ரசனை, ருசி என்பது தீவிரமாக உட்புகுந்து இவன் அழகியலை முற்றும் முழுதுமாய் மாற்றியது. ராதாவே இவனுக்கு லா.ச.ராவையும் காட்டினாள். நந்துவின் முற்றும் படித்த பட்டியலில் ஜெயகாந்தன், தி.ஜா, லா.ச.ரா போன்றோர் சேர்ந்தனர். நந்துவிற்கு தி.ஜாவைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை. அவரது மரப்பசு கதாநாயகி போல் அவர் கையைத் தொட்டு உணர ஆசை. ஆனால், இவன் ஆசை நிறைவேறுவதற்கு முன் அவர் இறந்துவிட்டார். எனவே, லா.ச.ரா போகும் முன் அவரைக் காண இவன் புறப்பட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்துவின் பல்கலைக் கழகம் லா.ச.ராவைக் கௌரவித்தது. புசு, புசுவென்ற புருவமும், தீர்க்கமான கண்களும் கொண்ட அந்த மனிதர் மேடையில் இப்படிச் சொன்னார். ‘என் &lt;br /&gt;ஆக்கத்தின் மேல் ஆய்வு செய்வதாகப் பேராசிரியர்கள் சொல்கிறார்கள். லா.ச.ராவைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவன் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாலும் அதில் பொருள் இருக்கும் என்பதை அறிய வேண்டும்’ என்றார். இப்படி சிந்திப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. மிகப்பின்னால் அவரை இவன் சந்தித்த போது, வாசற்கதவைத் திறந்து கொண்டே, ‘நீர் வைஷ்ணவரோ?’ என்றார். இதை எப்படி இவர் கண்டு பிடித்தார்? என்று நோக்கியபோது, ‘உனது கடுதாசியில் இந்தத் தேதி ‘தோதுப்படுமா?’ என்று கேட்டிருந்தாய். அப்பயன்பாடு வைஷ்ணவர்களுடையது!’ என்று சொன்ன போது இவன் விக்கித்துப்போகவில்லை. இதை எதிர்பார்த்து அனுபவிக்கத்தான் அவன் வந்திருந்தான். ஆறுமாதமாக ஒரு சிறுகதை எழுதுவதாகச் சொன்னார். வார்த்தை, வார்த்தையாக செதுக்கிக்கொண்டு இருக்கிறாராம். மதியம் முழுவதும் பேசிக்கொண்டு இருந்தனர். அவரோடு இருப்பது ஏதோ இறைச் சந்நிதியில் இருப்பது போல் பட்டது நந்துவிற்கு. மாலையாகிவிட்டது. பெரியவர் சாப்பிட வேண்டும். ‘மாமா! உத்தரவு கொடுங்கோ! கிளம்பறோம்!’ என்றான் நந்து (கூட வந்தது இவன் மருமான் கோபிநாத்). ‘நந்து உன்னை விடவே மனசு வரலைடா! சரி உள்ளே வா!’ என்று அழைத்துப் போனார். ‘மாமியையும் கூப்பிடுங்கள்! சேவிக்கிறோம்’ என்றனர். இவர் பழுத்த சிவனாகவும், மாமி அப்படியே அகிலாண்டேஸ்வரியாகவும் நந்துவிற்கு தோற்றமளிக்க அப்படியே சாஷ்ட்டாங்கமாக விழுந்து சேவித்தான். கையில் திருநீறு தட்டும் அதுவுமாக அவர் ஏதோ சித்த புருஷர் போல் இருந்தார். மீண்டும் வாசற்கதவுவரை வந்து வழி அனுப்பியவர், ‘நந்து, இது இந்த ஜென்ம உறவில்லைடா! நமக்கு முன்னாலேயே தொடர்பு இருக்கு! நன்னா இரு!’ என்று மீண்டும் ஆசீர்வதித்து வழி அனுப்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்துவின் முதற்கதை முன்னமே வெளிவந்து இருந்தது. ஆய்வுக் கொத்தடிமை வாழ்வில் இவனைத் தளிர்ப்பித்துக் கொண்டிருந்தது தமிழ். தமிழ்த்துறை மாணவர்களுடம் பழக &lt;br /&gt;ஆரம்பித்தவுடன் அவர்கள் இன்னும் சீரிய இலக்கிய கர்த்தாக்களை அறிமுகப்படுத்தினர். முதன்முதலாக ‘ஒரு புளியமரத்தின் கதை’ படித்தான். நல்ல இலக்கியம் படைக்க என்னென்ன வேண்டும் என்பதை நந்து புரிந்து கொண்டான். அவன் கவிதைகள் கணையாழியில் தொடர்ந்து வெளியாகத் தொடங்கின. சுஜாதாவின் தேர்வில் கூட &lt;br /&gt;இவன் கவிதைகள் தேறின. அது அவனுக்கு நம்பிக்கையை அளித்தது. அதே நேரத்தில் இவன் தமிழ் அறிவியலுக்கும் பயன்பட்டது. முதன்முறையாக ஒரு அறிவியல் நாடகம் எழுதி கணையாழிக்கு அனுப்பினான். அது வெளிவந்தது. திருச்சி வானொலி நிலையத்தில் அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்தித்தரும்படி அழைப்பு வந்தது. தான் கற்ற அறிவியலை பிறருக்குச் சொல்வதற்காக தமிழ் கற்ற நந்து அதை நன்கு பயன்படுத்தினான். நட்சத்திர நிகழ்ச்சியாக ஐன்ஸ்டைன் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சியொன்றை தயாரித்துத்தர நந்து அழைக்கப்பட்டான். அப்போது ஒரு பெரும் பட்டாளத்தையே நந்து அழைத்துக் கொண்டு திருச்சி போனான். அதில் பாடல்களும் இடம் பெற்றன. பாடல்களை எழுதி இசையமைத்தது விவேகாநந்தாக் கல்லூரியில் பின்னால் முதல்வராக இருந்த வா.வே.சு (வி.வி.எஸ்). இவனது சகோதரியும் பாடினாள். கொத்தடிமை முறையில் 7 ஆண்டுகள் &lt;br /&gt;பிடித்தன இவன் ஆய்வு செய்து முடிக்க. இவன் பிறந்த சாதி அங்கும் வந்து அழிச்சாட்டியம் பண்ணியது. இவனது ஆய்வு நூலை அனுப்புவதில் எதிர்பாராத தாமதங்கள். பல்கலைக் கழகக் கொத்தடிமை முறையில் ஜாதிக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. துறைகளுக்கு அறிவியல் பேர் இருந்தாலும் நடைமுறையில் ஐயர் துறை, செட்டியார் துறை, நாடார் துறை, பிள்ளைமார் துறை என்றே இருந்தது. பல்கலைக் கழக நிர்வாகமும் அதற்கேற்றவாறே செயல்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை கஷ்டங்களிலும் நந்துவிற்குத் துணையாக இருந்தது தமிழும், அவன் ஆக்கமுமே! இந்நிலையில் மொழி மேவிய ஒரு தேடல் என்பது நந்துவினால் செய்ய முடியாததாக இருந்தது. மேலும் மொழியின் ஆளுமை என்பது இன்னும் பிடிபடாமல் இருந்ததால் நந்து மேலும் மேலும் நவீன இலக்கியத்தில் தோய்ந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;A short introduction to J.Krishnamurti &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/0_FcKz9fs-Y?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/0_FcKz9fs-Y?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-1842853871772660198?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/1842853871772660198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=1842853871772660198' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/1842853871772660198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/1842853871772660198'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/09/6.html' title='ஆலவட்டம் 6'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-8421504980732290172</id><published>2010-09-25T13:43:00.002+09:00</published><updated>2010-09-25T13:46:42.150+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='JK and K'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Spiritual travelogue'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='J.Krishnamurti'/><title type='text'>ஆலவட்டம் 5</title><content type='html'>• [Mr. Jiddu Krishnamurti]: ‘... does thought realise of itself that it is &lt;br /&gt;limited? I have to find out. I am being challenged. Because I am challenged &lt;br /&gt;I have great energy. Put it differently: does consciousness realise its &lt;br /&gt;content is itself? Or is it that I have heard another say: ‘Consciousness is &lt;br /&gt;its content; its content makes up consciousness’? Therefore I say, ‘Yes, it &lt;br /&gt;is so’. Do you see the difference between the two? ... So I am asking &lt;br /&gt;myself: has thought realised its own limitations? Or is it pretending to be &lt;br /&gt;something extraordinary, noble, divine? Which is nonsense because thought is &lt;br /&gt;based on memory. I see that there must be clarity about this point: that &lt;br /&gt;there is no outside influence imposing on thought saying it is limited. &lt;br /&gt;Then, because there is no imposition there is no conflict; it simply &lt;br /&gt;realises it is limited; it realises that whatever it does – its worship of &lt;br /&gt;god and so on – is limited, shoddy, petty (...) Verbally we can go only so &lt;br /&gt;far: what lies beyond cannot be put into words because the word is not the &lt;br /&gt;thing. Up to now we can describe, explain, but no words or explanations can &lt;br /&gt;open the door. What will open the door is daily awareness and attention – &lt;br /&gt;awareness of how we speak, what we say, how we walk, what we think. It &lt;br /&gt;depends on your state of mind. And that state of mind can be understood only &lt;br /&gt;by yourself, by watching it and never trying to shape it, never taking &lt;br /&gt;sides, never opposing, never agreeing, never justifying, never condemning, &lt;br /&gt;never judging – which means watching it without any choice. And out of this &lt;br /&gt;choiceless awareness perhaps the door will open and you will know what that &lt;br /&gt;dimension is in which there is no conflict and no time’. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*(‘The Only Revolution’ 1970, pp. 130-131 (from ‘The Second Penguin &lt;br /&gt;Krishnamurti Reader’).* &lt;br /&gt;** &lt;br /&gt;** &lt;br /&gt;இவை ஞானமொழிகள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குப் புரிகிறது. நீங்கள் கையைத் தூக்கினாலும் என்னால் காண முடியாது. கண்டாலும் மெய்யுணரமுடியாது. இது புரியவில்லை எனில் ஏன் புரியவில்லை. காரணிகள் என்னென்ன? ஏன் புரிதலை ஒரு அளவிற்கு மேல்தான் வார்த்தைகளால் இட்டுச் செல்ல முடியும் என்கிறார் ஜே.கே? அனுபவத்தில் பட்டவை சொற்களுக்குள் பிடிபடும். அனுபவத்தை மேவிய மெய்மையை எப்படி உணர்த்துவது? ஏன் ஆலவாய் அண்ணல் ஆலமரத்திடை மௌனமாய் உபதேசிக்கிறார்? அப்படி என்னதான் சொல்கிறார். வாய்ச்சொல் ஏன் அருளவில்லை? மொழி மேவிய நிலையை ஒரு சாதாரணன் எப்படி அடைவது? வழி காட்டுகிறார் ஜே.கே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ப்பற்ற பிரக்ஞை. வாய்ப்பற்ற பார்வை. வாய்ப்பற்ற அணுகல். வாய்ப்பற்ற அவதானம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இற்றைப் புள்ளியில் &lt;br /&gt;எற்றைப் பொழுதும் &lt;br /&gt;இற்றைப் பொழுதாய் &lt;br /&gt;நிலையுற்று இருத்தல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இருந்து பழகப்பழக, நினைவுகள் மெல்ல மனக்குளத்தில் படிந்து மறைகின்றன. இற்றைப்பொழுதில் இறைமை தாண்டவமாடத்தொடங்குகிறது. அத்தாண்டவம் காணுதலே தவம். அது ருத்ர தாண்டவமாக இருந்தாலும், ஆனந்த தாண்டவமாக இருந்தாலும் காணுதல் மட்டுமே கடமை! பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்ற வாய்ப்பில்லை. அது அப்படித்தான்! காணுதலில் அகம் அழிந்து காட்சியே நிற்கிறது. அக்காட்சியை எவ்வளவு முயன்றாலும் வார்த்தைப் படுத்த முடியாது. வார்த்தைகள் ‘சலாம்’ அடித்து அமர்ந்துவிடுகின்றன. உள்ளம் அமைதியில் ஆழ்கிறது. கொதி நிலை குறைகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ப்புகள் என்பதுதான் சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை. வாய்ப்பற்ற வாழ்வு என்பதுதான் ஆன்மீகத்தின் ஆரம்பநிலை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்து ரீடர் கிருஷ்ணமூர்த்தி என்றவுடன் ஆசையுடன் பார்த்தான். காரணம் கிருஷ்ணமூர்த்தி என்பதுதான் இவன் பெயரும். நம்மவர் ஒருவர் பற்றி உலகின் மிகப்பெரிய பதிப்பகமான பென்குவின் புத்தகம் போடுகிறது எனில், அது சாதாரண விஷயமில்லை என்று நந்துவிற்குப் புரிந்தது. ஆனால் புத்தகத்தை எடுத்துப் படித்தால் ஒன்றும் புரியவில்லை! ஏன் புரியவில்லை என்பது அப்போது நந்துவிற்குத் தெரியவில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னால் புரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. அவன் சிந்தனா மொழியாக தமிழ் இருந்தது! &lt;br /&gt;2. அவன் சமய வாழ்வு இதைக் கற்றுத்தரவில்லை. &lt;br /&gt;3. நந்து அப்போது பக்குவப்படவில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொழி எப்படி நம்மை ஆட்கொண்டு வழி நடத்துகிறது என்பது கண்டோம். நந்துவின் சிந்தனா மொழியாக தமிழ்தான் இருந்தது அன்றுவரை. ஆங்கிலத்தின் பாதிப்பு இன்றுள்ள அளவு கூட அன்றைய பேச்சு, நடையில் இல்லை. ஆங்கிலம் கற்றுக் கொள்ள மாணவர்களுக்கும் ஆர்வமில்லை, தகுதியான ஆசிரியர்களும் இல்லை. சினிமாவெல்லாம் தமிழிலேயே நடந்தன. ஆங்கிலப்படம் பார்க்க வேண்டுமெனில் ரயிலில் ஏறி மதுரை செல்ல வேண்டும். அந்தப் பழக்கம் அவனுக்கு மிகப்பின்னால்தான் வந்தது, தன் அண்ணனுடன் மதுரை சென்று ஜேம்ஸ்பாண்ட் படம் பார்ப்பான். படம் புரிகிறதோ இல்லையோ ‘பலா’வான காட்சிகள் அவனைக் கிளர்ச்சியூட்டின. அவன் பள்ளியிறுதிவரை தமிழிலேயே படித்தான். பள்ளிக்காலத்தில் அவனுக்கு பாரதி, வள்ளலார், ராஜாஜி, கல்கி, சாண்டில்யன், சுஜாதா அறிமுகமாகியிருந்தனர். பக்தி இலக்கியம் மிகக்கொஞ்சமாக அறிமுகமாகியிருந்தது. சங்கம் மிக சொல்பம். மாறும் கல்வி போதானாமுறை இவன் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டன. எல்லாப் பரிசோதனை முயற்சிகளிலும் இவன் இருந்தான். முதன் முறையாக ‘எலெக்டிவ்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மாணவனின் எதிர்காலம் ஒருவாறு நிர்ணயிக்கப்பட்டது. கலை அல்லது அறிவியல் என்பது துல்லியமாக பிரிக்கப்பட்டது. இவன் வகுப்பில் முதல் நிலை மாணவன் என்பதால் ஆசிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு தத்தம் துறைக்கு இழுத்தனர். கெமிஸ்ட்ரி வாத்தியார் முதலில் இழுத்துவிட்டார். அவர் அப்போதுதான் கல்லூரி முடித்துவிட்டு வந்திருந்தார். ஒரே உற்சாகம். பாலசுப்ரமணியன் என்று பேர். ஆனால், கணக்கு வாத்தியார் விடுவாரா? ‘நந்து! கணக்குதான் அறிவியல் மொழி. கணக்கு இல்லாமல், ஒரு காரியமும் நடக்காது. எனவே கணக்குப் பாடம் எடுத்துக் கொள்!’ என்றார். நந்து வேதியியலிருந்து கணக்கிற்கு மாறினான். ஆனால், பாலசுப்ரமணியன் சும்மா இருப்பாரா?இவன் வீட்டிற்கே வந்துவிட்டார். அவ்வளவுதான், அதுவே ஒரு பண்பாட்டு அழுத்தமாகப் போக, நந்து மீண்டும் வேதியியலுக்கு மாறினான். இவனுக்கு தமிழ் மிகவும் பிடித்திருந்தது. இவனது தமிழ் வாத்தியார் ஸ்ரீநிவாசன் நெடுமால் போல் உயர்ந்திருந்தார் அனைத்திலும! ஆயினும் அறிவியலே வென்றது. அதுவே சோறு போடும் எனும் எண்ணம் விதைக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும், கோடை விடுமுறையில் நூலகம் சென்று தமிழ் நாவல்கள் எடுத்து வந்து படிப்பான். சாண்டில்யனின் யவனராணி மிகவும் பிடித்திருந்தது. கதை முடிந்ததும் அவளுக்காக அழுதான். தாத்தா ஸ்ரீனிவாசாச்சாரியார் ஒரு ராஜாஜி பக்தர். எனவே கல்கி தொடர்ந்து வாங்குவார். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ முறையாக எடுத்து வைக்கப்பட்டு பைண்டு செய்யப்பட்டிருந்தது. பக்கத்துவீட்டு சுந்துவின் அப்பாவிற்கு இந்த பைண்டு வேலையெல்லாம் தெரியும். அவர்தான் முறையாக எல்லா இதழ்களையும் ஒன்றுவிடாமல் கோர்த்துக்கொடுத்தார். இவன் பாண்டி நாட்டுக்காரன். 'வையை எனும் பொய்யாக்குலக்கொடி’ தவழும் தீராநதிக்காரன். ஆயினும் உண்மையில் பொய்க்காத காவிரி நதி பற்றி கல்கி சொல்லும் போது இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. வந்தியத்தேவன் வந்து நின்றால் காலைத்தடவும் நதி இவனை ஏதோ செய்தது. இவன் பத்தாம் வகுப்பிற்கு வரும்போது சுஜாதாவின் கணேஷ், வசந்த் பிடித்துப் போயினர். தமிழ்வாணன் அறிமுகப்படுத்திய சங்கர்லாலிருந்து வசந்த், கணேஷ் மிகவும் வித்தியாசப்பட்டனர். சுஜாதா புதியதொரு உலகை நந்துவிற்கு அறிமுகப்படுத்தினார். இவன் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கண்ட உலகுடன் அது ஒத்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புகுமுக வகுப்பில்தான் முதன்முறையாக அனைத்தும் ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்டது. எல்லாப் பசங்களும் தடுமாறினர்.புரிகிறதோ இல்லையோ ‘மொட்டை உரு’ப்போட்டு பரிட்சை எழுதினர். கல்லூரி தமிழ்ப்பாடம் வித்தியாசமாக சொல்லி கொடுக்கப்பட்டது. அந்த வகுப்பில்தான் நந்து கொஞ்சம் வீட்டிலிருப்பது போல் உணர்ந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் டாக்டராக வேண்டும் என்ற ஆசையை யாரோ விதைத்துவிட்டனர். எப்போது யாரால், விதைக்கப்பட்டது என்று தெரியவில்லை. நந்து உயிரியல் படிக்கத் தொடங்கினான். பியூசி முடித்ததும் முதல் முயற்சி. கழகம் ஆட்சிக்கு வந்துவிட்டது. சோணையாத்தேவர் எம்.எல்.ஏ. கிச்சய்யர் இவனை அழைத்துக்கொண்டு சோணையா வீட்டிற்குப் &lt;br /&gt;போனார். எல்லாம் பார்த்துச் செய்வோம் என்றுதான் சொன்னார். ஆனால் இவன் பெயர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கிச்சய்யர் காசு கொடுத்திருக்க வேண்டும் என்றனர்.கிச்சய்யர் இருந்த காசையெல்லாம் செங்கண்மால் கோயிலில் போட்டுவிட்டு ஓட்டாண்டியாக இருந்தார். இவர் சொன்னால் சோணையா கேட்பார் என்றதால் போய் பார்த்துவந்தார். காலம் மாறி வருவதை அவர் உணரவில்லை. அடுத்த வருடமும் மருத்துவ முயற்சி தோல்வி. அதற்கடுத்த வருடமும். தோல்வி. மாணவர்கள் சொன்னார்கள் இவன் ஜாதிக்கு சீட் கிடைக்காது என்று. இவன் சிறிய தந்தை எஸ்.எஸ்.எல்.சி புத்தகத்தில் ஜாதி பேர் போடாமல், ‘பாலகிருஷ்ணன்’ என்று கையெழுத்துப் போட்டிருந்தார். இவன் கிராமத்துக்காரர்கள் பேசாமல் அதே மைய்யில் ‘பாலகிருஷ்ணக்குடும்பன்’ என்று மாற்றிவிடுங்கள், ரிசர்வ் சீட்டில் இடம் கிடைக்கும் என்றனர். பலர் அப்படியெல்லாம் செய்யக்கூடாது எஸ்.எஸ்.எல்.சி புத்தகம் என்பது நிலப்பட்டா போல, அதில் விளையாடக் கூடாது என்றனர். பெற்றோர் அற்ற நிலையில் இருந்த நந்து, கஷ்டப்பட்டு படித்தே முன்னேற வேண்டும் என்றுதான் யதார்த்தம் பேசியது. பி.எஸ்.ஸி முடித்தவுடன் ஜிப்மர் பரிட்சைக்கு எழுதினால் புதுவையில் கிடைக்கும் என்றனர். இவங்க ஊர் ஆஸ்பத்திரி கம்பௌண்டர், 5000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் வாங்கலாமென்று சேதி அறிந்து சொன்னார். ஐயாயிரம் ரூபாயா? யார் கொடுப்பார்கள்? இவ்வளவு பணத்திற்கு எங்கு போவது? [நந்து பின்னால் படித்து வேலை பார்க்கும் போது தன் பெண்ணை மருத்துவம் படிக்க வைக்கலாமா என்று யோசித்த போது லஞ்சத்தின் விலை 30 லட்சமாகக் கூடியிருந்தது. விலைவாசி இந்தியாவில் கூடிக்கொண்டே போகிறது!]. நந்து டாக்டராகிவிட வேண்டும் என்ற கனவில்தான் இன்னும் படித்தான். இவன் கிராமத்துக்காரன் என்பதால் மதுரைக்கார பையன்கள் இவன் பரிட்சையில் தேறமாட்டான் என்று பெட்டு கட்டினர். இவன் புகுமுக வகுப்பிலும், பிஎஸ்ஸியிலும் முதல் வகுப்பில் தேறியபோது அவன்களுக்கு ஆச்சர்யமும் பொறாமையும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் பிஎஸ்ஸி படிக்கும் போதும் கல்வித்திட்டம் மாறியது. முதல் மொழி ஆங்கிலம். இரண்டாவது மொழியாக தமிழ் அல்லது பிரெஞ்ச் எடுத்துக் கொள்ளலாம் என்றது. இவன் இயல்பாக தமிழை எடுத்தான். ஆனால் அது இலக்கியத் தமிழ் அல்ல. அறிவியல் தமிழ். முதன்முறையாக அறிவியலைத் தமிழில் சொல்ல முடியுமா? என்று பல்கலைக்கழகம் சோதனை செய்து பார்த்தது. இவனது தமிழ்ப் பேராசிரியர் பொன்.தினகரன் ஆர்வமுடன் சொல்லிக் கொடுத்தார். இவன் தமிழில் ஏ பிளஸ் வாங்கினான். மொழித்தேர்வில் மார்க்கு கிடைப்பது மிக அரிது. நந்து ஆங்கிலக் கல்விமுறையில் படித்தாலும் தமிழே முன் நின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘உலகைப் புரட்டக்கூடிய நெம்புகோல் கவிதையை உங்களில் யார் எழுதப்போகிறீர்கள்?’ என்று புதுக்கவிதை முழக்கம் மாணவர் உள்ளங்களில் பட்டுத்தெரித்தது! இவன் ஆங்கிலப் பேராசிரியர் நெடுமாறன் கூட இடையிடையே தமிழ்க் கவிதைகளை மேற்கோள் காட்டியே நடத்தினார். நந்து கவிதை செய்ய முயன்றான். அவனது கவிதை பீரிட்டு எழுந்தது பெண்களுடன் சேர்ந்து படிக்கும் எம்.எஸ்ஸியில்தான். ஹார்மோன்களின் பாய்ச்சலில் கவிதை விளைநிலமானது. இவன் கவிதைக்கு ஒரு ரசிகை கிடைத்தாள். அவளுக்காக இவன் கவிதை செய்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜே.கிருஷ்ணமூர்த்தி இன்னும் அவனுக்கு அறிமுகமாகவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"So, the question is: Why have we such a driving need to fulfill, why are we so ruthlessly ambitious, why has sex such an extraordinary importance in our life? It is not a matter of the quality or number of one's needs, whether one has the maximum or the minimum, but why there is this tremendous urge to fulfill in family, in a name, in a position, and so on, with all the anxiety of it, the frustration, the misery - which society encourages and the church blesses." &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.jkrishnamurti.org/krishnamurti-teachings/view-text.php?tid=694&amp;chid=5013&amp;w=god&amp;s=Text"&gt;The Mirror of Relationship: Love, Sex and Chastity&lt;/a&gt;&lt;br /&gt;J.Krishnamurti&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-8421504980732290172?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/8421504980732290172/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=8421504980732290172' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/8421504980732290172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/8421504980732290172'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/09/5.html' title='ஆலவட்டம் 5'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-6012501625434577675</id><published>2010-09-25T13:36:00.002+09:00</published><updated>2010-09-25T13:39:49.482+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='JK and K'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Spiritual travelogue'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='J.Krishnamurti'/><title type='text'>ஆலவட்டம் 4</title><content type='html'>"So words, language drive us, shape us, shape our thinking, our behaviour, our action. In realising that, the slavery to language, but if we know how to use language, the exact meaning of words, the content and the significance of the depth of the word, then we are using language unemotionally, unsentimentally, not identified with a particular word, then we can communicate with each other directly and very simply. If I stick to the word 'Hindu' or an 'Indian', and that word shapes my thinking, my prejudices, all that nonsense, then the word 'Indian' or 'Hindu' forces me to act in a certain way. But whereas if I am free of that word 'Hindu' with all its national, limited, superstitious significance, then I am free to understand the human being who is behind the word. Right? Are we meeting each other? At least I hope so." &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.jkrishnamurti.com/krishnamurti-teachings/view-text.php?tid=1289&amp;chid=988"&gt;Can I Strip Myself of the Network of Language?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் புரிந்து கொள்ள முதலில் மொழியின் தளைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும். இதுவே வாழ்வின் மிகப்பெரிய சிக்கல். நாம் மொழியை உருவாக்கினோம் என்று சொல்வதெல்லாம் பேத்தல். மொழியில் மனிதன் பிறக்கிறான். மொழி அவனை உருவாக்கி வழி நடத்துகிறது. மொழியை ஒரு பாண்டம் போல் பயன்படுத்தி இவன் யாக்கை நடைபெறுகிறது (பவதி! பிக்ஷாந்தேஹி!). மொழி இல்லையேல் இவனொரு மிருகம். ஆனால் மொழி வந்த பிறகும் இவன் ஒரு மிருகமாக வாழ்வதற்குக் காரணமென்ன? என ஆய்தல் மொழிக்கும், இவனுக்கும் இருக்க வேண்டிய நல்லுறவைப் புரிந்து கொள்ள உதவும். ‘மரம்’ எனும் சொல் ‘மரமல்ல’ என கிருஷ்ணாஜீ அடிக்கடி சொல்லுவார். மொழி இங்கு ஒன்றைச் சுட்ட வருகிறது. ஒன்றின் சூட்சும வடிவமாக (abstract form) மனத்தில் வந்து நிற்கிறது. ஆனால், மொழியையே ஒரு தாயாக, தங்கையாக, இன உணர்வாக இவன் உருவகித்துக் கொள்ள முயலும் போது, மொழி வெறி வந்து நிற்க, இவன் மீண்டும் ஓர் விலங்காகிறான்." &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேது நொண்டி, நொண்டி வீடு வந்து சேர்ந்த போது நந்துவின் அன்னைதான் (கோகிலம்) முதலில் கண்டாள். அப்படியே அவனை அள்ளி அணைத்து வந்து வீட்டில் இட்டு, அடிபட்ட இடத்திற்கு ஒத்தடம் கொடுத்தாள். எண்ணெய் தைலம் போட்டாள். அவன் அன்னைக்கு இதுவெல்லாம் ஒன்றும் தெரியாது. அதனால்தான் அந்த வீட்டில் அவள் ’சித்தி’. இவள் ’அம்மா’.  சேது அம்மாவைச் சித்தி என்றுதான் கூப்பிடுவான். சாதாரணமாக மடப்புரம் காளி போல் இருக்கும் அம்மா, சில நேரங்களில் மிகவும் கனிவாக இருப்பாள். அப்பொழுதுகள் மிக மென்மையானவை, அரியவை. ’குழந்தையை போட்டு இப்படி மாட்டு அடி அடிச்சிருக்கானே! இவன் உருப்புடுவானா?’ என்று கோகிலம் சொல்ல எல்லோர் கண்களிலும் கண்ணீர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தி எதிர்ப்பு உச்சம் அடைந்திருந்தது. கட்சிப் போராட்டமாக இருந்த ஒரு செயல் மெல்ல, மெல்ல மக்களிடம் பரவ, அது மாணவர்களிடம் வந்து சேர்ந்த போது காய்ந்த சருகில் தீ பட்ட கதியாகிவிட்டது. இல்லையெனில் வேத பாடசாலையில் வேதமும், நாலாயிரமும் படிக்க வேண்டிய பையன், லாக்கப்பில் இருந்து மீண்டு வர வேண்டிய தேவையென்ன? கிச்சு ஐயர் வேண்டா வெறுப்பாக போலீஸ் ஸ்டேஷன் போனார். “சார்! ஐயரு! வந்திருக்கார்!’ ‘ஐயரா? ஏன்யா! இவனுகளெல்லாம் ஐயர் வீட்டுப் பயலுகளா? காவாலிப் பசங்க! என்ன தைர்யம் இருந்தா போலீஸ்வண்டி மேலே கல்லை விட்டு எறிவானுக? (இது பச்சைப் பொய். யாரும் கல்லை விட்டு எரியவில்லை. அதையொரு சாக்காக வைத்து மாணவர் எழுச்சியை அடக்க அரசு யத்தனித்ததுதான் உண்மை). சப் இன்ஸ்பெக்டர் கொதிப்பது போல் நடித்தார். பாவம் கிச்சய்யர் ஆடிப்போய்விட்டார். அவருக்கு ஒன்றும் தெரியாது. ‘சார்! இவன் அப்படியெல்லாம் வம்பு,தும்புக்கு போற பயல் இல்லை. ஏதோ தவறுதலாய் நடந்து போச்சு. நீங்க மன்னிச்சு விட்டுட்டங்க. வீட்டிலே ரொம்ப கவலைப்படறாங்க!’ என்று கெஞ்ச, காவல் அதிகாரி ஏதோ இரக்கம் உள்ள தேவன் என்பது போல், ஐயர் சமூகம் பற்றிய தன் விமர்சனத்தையும் சமயம் பார்த்து வைத்து விட்டு, அவனை பெயிலில் அனுப்ப ஒத்துக் கொண்டார். ‘நீங்க சொல்லறீங்களேன்னு இப்ப விடறேன்! இவன் மீண்டும் வம்பிலே மாட்டினா நாங்க என்ன செய்வோம்ங்கிறதுக்கு உத்திரவாதம் கிடையாது!’ என்று சொல்லி சேதுவை விடுவித்தார்கள். சேதுவுக்கு உள்ளூர பயம். ‘இவர் ஏன் இங்கே வந்தார்? இவர் வராமல் இருந்திருந்தால் இன்னும் இரண்டு நாளில் எப்படியும் வெளியே விட்டு விடுவார்கள். இந்த ஊர் ஜெயிலில் இத்தனை மாணவர்களை அடைத்து வைக்க இடமேது?’ என்று எண்ணினான். அவன் ஏன் அப்படி எண்ணினான் என்பது வெளியில் வந்தவுடன், காவல் நிலைய வாசலிலேயே நடந்தது. வெளியே வந்ததும் வராததுமா, அவனுக்கு முதலில் கிடைத்தது மாலை, மரியாதை அல்ல. கன்னத்தில் ஓங்கி ஒரு அறை. ‘ஏண்டா! காவலிப்பயலே! என்னை இங்கே வரைக்கும் கொண்டு வந்து விட்டு விட்டேயேடா!’ இவனுக்கு காவல்துறை கொடுத்த பரிசு, தந்தை தரும் பரிசு இரண்டையும் கட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்த போது சேது மிகவும் பரிதாபமாக இருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், போலீஸ் செய்தது ஆஹூதியில் நெய் வார்த்தது போல் ஆனது. மாணவர் போராட்டம் மிகவும் வலுப்பெற்றது. முதலமைச்சர் ராஜீனாமா எதிர்பார்க்கப்பட்டது! தமிழகமே கொதித்தது! காவல்துறை பேருந்துகள் எரிக்கப்பட்டன. தமிழகத்தில் எதிர்ப்புணர்வை அடக்க இராணுவம் அழைக்கப்பட்டது. எங்கு பார்த்தாலும் ஊரடங்கு சட்டமும், சட்டி போலீஸ் (ரிசர்வ் போலீஸ்) நடமாட்டமுமாகவும் இருந்தது. பள்ளி இழுத்து மூடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புரட்சி வெடிக்கும் முன்னமே தமிழ் போராட்ட உணர்வை தமிழாசிரியர்கள் மாணவர் உள்ளத்தில் விதைத்தனர். பள்ளியில் தமிழ் ஆசிரியருக்கு அளவு கடந்த மரியாதை ஏற்பட்டது. அவர்களது ஒவ்வொரு சொல்லும் மந்திரச் சொல்லாகக் காணப்பட்டது! பாரதியாரும், பாரதிதாசனும் உரக்க பேசப்பட்டனர். ஒருவகையில் பின்னாளைய கழக வெற்றியில் தமிழ் நாட்டின் தமிழாசிரியர்களுக்கு பெரும் பங்கு இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் அன்னையாகி அரியாசனத்தில் வந்தவுடன். இந்தி அரக்கியாகி, காலில் சங்கிலி போட்டு இழுத்துவரப்பட்டாள். இந்தி என்றால் என்னவென்றே தெரியாத கிராப்புரங்களில் பலர் அப்படியொரு அரக்கி கிளம்பிவிட்டாள் என்றே நம்பத்தொடங்கினர். எதிர்மறையாக அந்த அரக்கியைக் கொல்லும் ராமனாக, ‘கம்பரசம்’ எழுதிய அண்ணா உருவாக்கப்பட்டார். பாரதி, வள்ளலார், ஆழ்வார்கள் வசனங்கள் மேற்கோள் காட்டப்படாமல் கழகக் கண்மணிகளால் பேசப்பட்டன. அவர்களின் தமிழ் ஆற்றலைக் கண்டு தமிழகமே வியந்து நின்றது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயல்பாகவே ஒற்றை மொழிக் கலாச்சாரத்தில் திளைக்கும் கிராமப்புறங்களில் தமிழ் ஆட்சி மொழியாகும் என்ற எதிர்பார்ப்பு வந்து சேர்ந்தது. ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை இப்போதுதான் பெற்றது போலிருந்தது, ஆனால் முழு விடுதலை கழகங்களே தமிழர்களுக்கு அளிக்கும் என்று பேசப்பட்டது! ஆங்கிலத்திலிருந்து விடுதலை! இந்தியிலிருந்து விடுதலை! என்று கிராமப்புறம் எதிர்பார்த்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின் நடந்தது வேறு. எதிலிருந்து விடுதலை பெற வேண்டுமென நினைத்தார்களோ அதற்கே அடிமையாகி நின்றதுதான் நடந்தது. எந்த மரபைப் பற்றிய புரிதல் வர வேண்டுமென தமிழாசிரியர்கள் எதிர்பார்த்தார்களோ அந்த தமிழ் மரபு புறக்கணிக்கப்பட்டது. தமிழ் ஆட்சி பீடத்தில் வந்தால் தமிழ் கல்வி சிறப்புறும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்தபடி நடக்காமல் தமிழ் எடுத்துப் படித்தால் அவன் பயித்தியக்காரன் எனும் நிலையே வந்தது. எந்தத் தமிழாசிரியர்கள் இந்தி எதிர்ப்பு காலத்தில் முக்கியமாகப் பட்டார்களோ அவர்கள் இருபது ஆண்டுகளில் செல்லாக்காசு ஆனதுதான் நடந்தது. தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் ஆங்கிலம் வந்து அமர்ந்தது! &lt;br /&gt;இந்தி முற்றும் முழுவதுமாக பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது! இந்திப் பண்டிட் திடீரென்று டிராயிங் மாஸ்டர் ஆகிவிட்டார். பண்டிட் மகாலிங்கத்திற்கும் ஓவியத்திற்கும் சம்பந்தமே கிடையாது. மேலும் அங்கு ஓர் ஓவிய ஆசிரியர் ஏற்கனவே இருந்தார். இருந்தாலும் இந்தி சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று ஆனபின் அவர்தான் என்ன செய்வார்? அவருக்கு ஏதாவதொரு சப்ஜெக்ட் தர வேண்டும். ஓவியப்பாடம் தரப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கோகிலம் மிகவும் பயந்த தருணம் எதுவென்றால் மாணவர்கள் தமிழுக்காக தீக்குளிக்கத் துணிந்ததுதான். விடலைப் பருவம் என்பது மிகவும் உளவியல் சிக்கலுள்ள பருவம். பெற்றோர்களுக்கு பிள்ளைகளை எப்படி நடத்தி நல்ல குடிமகன்களாக மாற்ற வேண்டும் என்பதில் எந்தப் பயிற்சியும் கிடையாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் மாட்டை அடிப்பது போல் அடிப்பதுதான். நந்துவின் பள்ளிக்கு சில மாணவர்கள் காலில் கட்டையுடன் வருவார்கள். அடங்காத மாட்டை அடக்க காலில் கட்டை கட்டுவது வழக்கம். அதே உத்தியை இளம் பிள்ளைக்கும் பயன்படுத்தினால் பிள்ளைகள் மனது என்ன பாடு படும்? ஒன்று அம்மாணவர்கள் பின்னால் வன்முறை நிறைந்த ரவுடிகளாக வருவர். இல்லை முரட்டு போலீஸ் அதிகாரியாக வருவர். இல்லை இராணுவத்தில் சேருவர். இல்லை தற்கொலை செய்து கொள்வர். பிள்ளை தற்கொலை செய்து கொண்டால் பெற்றோர் திருந்த மாட்டார்கள். பழியைப் பெண்ணாட்டி மேல் போட்டு அவளைப் போட்டு மொக்கு, மொக்கு என்று மொக்குவர். இப்படிப் பட்ட கிராமத்தில் விடலைக்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்து, தமிழுக்காக உயிர் கொடுத்தல் பெரிய ‘தியாகம்’ என்பது போல் காட்டப்படும் போது மாணவர்களில் பலர் சாகத்துணிந்தனர். இந்த மாணவர்களை அவர்கள் பெற்றோர்கள் சரியாக வளர்க்காததும் ஒரு முக்கிய காரணம். வன்முறை என்றால் என்னவென்று புரிந்து கொள்ளாத கிராமம். வன்முறை நிரம்பி வழிந்த கிராமம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அந்தணர், வேளாளர், கிறிஸ்தவர், முஸ்லிம் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. எல்லோர் வீடுகளிலும் வன்முறை நிரம்பி வழிந்தது. இந்த வன்முறையின் ஒரு வெளிப்பாடாகத்தான் தீக்குளிப்புகள் நிகழ்ந்தன. வாழ்வு மென்மையானது. வாழ்வு மலர் போன்று நிரந்தரமற்றது. வாழ்வு குகையில் வளர் சுடர். அதனைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். என்றெல்லாம் யாரும் சிந்திப்பதில்லை. எதற்கெடுத்தாலும் அடி. தாய்மை கொஞ்சம் கூட இல்லாத தாய்மார்கள் அந்தணர் குடியிருப்பிலும் இருந்தனர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இயல்பாகவே வன்முறை உடையவர்களாக இருந்தனர். நந்துவோடு பூப்பந்து விளையாடும் பாலா, எதிர்ப்புறம் இருப்பவனை மட்டை கொண்டு தாக்க. பேட்மிண்டன் மட்டை இரண்டு துண்டமாகி விழுவதைக் கண்டு நந்து நடு, நடுங்கிப் போனதுண்டு. ஏனெனில் பாலாவை அவன் தாய் என்றும் அன்பாகப் பேசி அரவணைத்தது இல்லை. பல நேரங்களில் வாய் பேசாது, விளக்கமாரு பேசுவதை நந்து கண்டுள்ளான். விளக்கமாரில் அடிவாங்குவது துன்பம் தருவது. அந்தப் பள்ளியில் அடித்தால் உரைக்கும் வண்ணம் செய்யும் மரம், செடி எதுவென்று ஒரு ஆராய்ச்சியே நடந்தது. புளியம் விளாரு மிகவும் சிறந்தது என்று சொல்லி மாணவர்களை நல்லப் புளியம் விளாராகப் பார்த்து எடுத்து வரச் சொல்லுவர். இந்த அசடுகளும் எந்தப் புளியம் விளாரினால் தனக்கு அடிவிழப்போகிறதோ அதைப்பார்த்து பதவிசாக எடுத்து வந்து கொடுப்பர். ஆசிரியர் முதலில் அதை சோதிப்பது பெரும் பாலும் கொண்டுவரும் மாணவர் முதுகில்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான வன்முறை சூழ்ந்துள்ள அக்கிராமத்தில் வளரும் சேது எங்காவது தீக்குளிக்கப் போய்விடுவானோ என்று கோகிலம் கவலைப்பட்டாள். சித்திக்கு விவரம் போதாது. அவளும் எட்டுப் பிள்ளை பெற்று எல்லாம் கொடுத்துவிட்டு இரண்டு தங்கி நிற்க அக்காவுடன் ஒண்டி வாழ்கிறவள். அந்த ஒத்தைப் பிள்ளையையும் ஒழுங்காய் பாதுகாக்க அவளுக்குத் தெரியாது. எனவே எல்லோருக்கும் அம்மாவான கோகிலம் இந்த சேது மீது இப்போது கூடுதல் கவனம் செலுத்தலானாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-6012501625434577675?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/6012501625434577675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=6012501625434577675' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/6012501625434577675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/6012501625434577675'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/09/4.html' title='ஆலவட்டம் 4'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-4725720027731740252</id><published>2010-09-25T13:23:00.000+09:00</published><updated>2010-09-25T13:30:03.087+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='JK and K'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Spiritual travelogue'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='J.Krishnamurti'/><title type='text'>ஆலவட்டம் 3</title><content type='html'>“When the mind is acute, then it begins to question the environment, &lt;br /&gt;the conditions, and in that questioning, intelligence is functioning; &lt;br /&gt;and it is only intelligence that will lead man to the fullness of life &lt;br /&gt;and to the discovery of the significance of sorrow" J.Krishnamurti &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஊரில் யாரும் கேள்வி கேட்பதில்லை. வீட்டில் கேள்வி கேட்டால் அறை விழும். நந்துவின் சகோதரி இப்படி அம்மாவிடம் கேள்வி கேட்டு அடி வாங்குவாள். அது பெரும்பாலும் நந்துவிற்கு மட்டும் வீட்டில் ஏன் சலுகைகள் அதிகம் என்பது போன்ற கேள்விகள். அம்மா பதில் சொல்ல மாட்டாள் அறைதான் விடுவாள். சித்திதான் பதில் சொல்லுவாள். ‘டீ! ஏண்டி அக்காவைத் தொந்தரவு செய்யறே! ஏழுக்குப் பிறகு கண்ணே கண்ணு ஒண்ணே ஒண்ணுன்னு ஒரு ஆம்பிளைப் பையன் பிறந்திருக்கான். அதுதான்’ என்பாள். சித்திக்கும் திட்டுவிழும். &lt;br /&gt;&lt;br /&gt;‘ஆமாம்! இவ பெருசாக் கண்டா!’. &lt;br /&gt;&lt;br /&gt;‘அப்படிச் சொல்லாதே அக்கா! நந்து மாதிரி ஒரு குழந்தை கிடைக்கணுமே’ &lt;br /&gt;&lt;br /&gt;என்று! சௌந்திரம் கேட்ட கேள்விக்கு விடை கிடைக்காமல் கூடுதலாக நந்து மேல் எல்லோரும் பாசம் பொழிவதால் சௌந்திரம் இன்னும் கூடுதல் எரிச்சலடைந்து அந்த இடத்தை விட்டு அழுது கொண்டே போய்விடுவாள். நந்துவிற்கு சித்தியென்றால் உயிர். சித்திக்கும் அப்படியே. ஆனால் நந்துவின் அம்மாவிற்கு எல்லோரையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் குறி. நந்து வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது சேட்டை செய்து கொண்டிருக்கும்போது அடுப்படியில் இருக்கும் அம்மாவிற்கு அது எப்படித் தெரியும் என்பது ஒரு மர்மம். ஆனால் அடுப்படியிலிருந்து அவள் குறி பார்த்து வீசும் சின்ன டம்பளர் நந்துவைப் பதம் பார்ப்பதுண்டு. நந்து அழுதால் சித்திதான் பதறி அடித்துக் கொண்டு ஓடிவருவாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் கேள்வி கேட்டால் பிரம்படி கிடைக்கும். அதுவும் வாத்தியாருக்குத் தெரியாத கேள்விகளைக் கேட்டுவிடக் கூடாது! ஐரோப்பிய வரலாறு என்று பாடம் இருக்கும். நெல்சன் எப்படி பிரெஞ்சுக் கடற்படையைத் தோற்கடித்தான் என்று இந்திய மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பாடம் இருக்கும். டென்மார்க் பற்றி பூகோளம் பேசும். தமிழகத்தின் ஏதோவொரு கிராமத்திலிருந்து வரும் வாத்தியாருக்கு மாணவனுக்குப் புரியும் அளவிற்குத்தான் இந்த வெளிநாட்டுச் சமாச்சாரமெல்லாம் புரியும். அவரைப்போய் ஏடாகூடமாக ஐரோப்பிய சரித்திர நுணுக்கங்களைக் கேட்டால் பிரம்படி விழும். தமிழ்ப் பாடமென்றாலும் அடிவிழும். அங்கொரு நொண்டிக்கை வாத்தியார் இருந்தார். சோத்துக்கை முடம். எனவே "எல்லாம்" இடது கையில்தான். இதை மாணவர்களும், மற்றவர்களும் அவருக்கு எப்படியோ உணர்த்திய வண்ணம் இருப்பதாக ஆசிரியர் உணர்வார். அதனால் எப்போதும் ஓர் கொதி நிலை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டியிலே பாதி அந்தச் &lt;br /&gt;சட்டுவத்தில் பாதி இட்டிருக்க &lt;br /&gt;இட்டமுடன் நாடி வந்த சோனேசர் &lt;br /&gt;இங்கு வா! என்றழைத்தவுடன் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளை ஓடி வந்தது எவ்வாறு உரை!? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று இருக்கும் கேள்வி. முதலில் கேள்வி புரியும் படியாக இருக்க வேண்டும். கேள்விக்கே பொருளுரை தேவைப்படும் போது பதில் எப்படி எதிர்பார்க்கமுடியும்? பதில் சொல்லவில்லை எனில் பின்னி எடுத்துவிடுவார். அவருக்கு மாற்றுத்திறனாளர்களை தமிழ் சமூகம் நடத்தும் அவநிலைக்கு தான் கொடுக்கும் பரிசு என்பது போல் அவர் தரும் அடிகள் ஒன்றுமறியா மாணவர்களின் மீது மழையாய் பொழியும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தில் கேள்வி கேட்டால் கொலைதான் விழும்! அந்த ஊரில் சேர்வார்களுக்கு செல்வாக்கு. அந்த ஊரின் பெரிய ரௌடி சேர்வார் வீட்டு ஆளு! தலித்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஊரின் மையப்பகுதிவிட்டு விளிம்புப் பரப்புகளில் வாழ்வர். அங்கு கொலை விழுந்தால் கூட இரண்டு நாள் கழித்துதான் தெரியும். பல்வேறு வகையில் கொலை விழும். ஒரு நாள் எல்லோரும் கிசு, கிசு என்று பேசிக்கொண்டிருந்தார்கள். முனீஸ்வரர் ஆல மரத்தில் ஒருவன் தூக்கிட்டுத் தொங்குகிறான் என்று. நந்து தன் கோஷ்டியுடன் உடனே ஆற்றை நோக்கி ஓடினான். இவனுக்கு ஆச்சர்யம் என்னவெனில் அந்த ஆலமரம் மிகவும் சிக்கலான அமைப்புக் கொண்டது. மதிலைத்தாண்டி விழுதுகளை மண்மீது பாய விட்டு சாய்ந்து நிற்கும் மரமிது. மதிலுக்கு உள்ளே, மரத்தடியில் முனீஸ்வரர் சந்நிதி. மிகவும் சக்தி வாய்ந்த முனீஸ்வரர் என்று பெயர். அவரை மிதித்து மரத்தில் ஏறி, இவன் தொங்கும் இடத்திற்கு வருவதற்குள் குளவி, தேள், தேனீ இவை கொட்டி கீழே விழ வேண்டியிருக்கும் அல்லது கரடு முரடான வழுக்கு மரத்தில் ஏறமுடியாமல் கீழே விழ வேண்டியிருக்கும். இவ்வளவு சிக்கலையும் தாண்டி அவன் நடு மரத்திற்கு வந்து தூக்குப்போட்டுத் தொங்குகிறான் எனில் அதுவொரு சாதனை என்று பாராட்டுப்பெற வேண்டியிருக்க ஏன் சாக வேண்டும்? நந்து செத்தவனைப் பார்த்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்க ஊர்ப்பெரிசுகள் சிறுவர்களை விரட்டினர். பிறகுதான் தெரிந்தது அது தூக்கு அல்ல, கொலை என்று. போஸ்ட்மார்ட்டம் செய்யும் போது தெரிந்தது இறந்தவனின் கொட்டைகள் நசுக்கப்பட்டு இறந்திருக்கிறான் என்று. இப்படி விநோதமாகக் கொலை விழும் கிராமம் அது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அச்சமூகத்தைக் கேள்விக்குறியாக்கி நின்றன கழகச் சுவரொட்டிகள். ‘கடவுளை நம்புகிறவன் முட்டாள்! கடவுள் இல்லை. இல்லவே இல்லை!’ என்று. இதைப் பெரிய கரிகொண்டு சண்முகபட்டர் வீட்டுச் சுவரில் வேண்டுமென்றே எழுதிவிட்டான். அவரும் வெள்ளையடிக்க, இவன்களும் மீண்டும் எழுத என்று ஒரு யுத்தமே அங்கு நடந்து கொண்டு இருந்தது. எனவே சொல்லாமலே இரண்டுபட்டிருக்கும் ஊரில் இதுவொரு பெரிய பிரிவினையை, ஒரு நிழல் யுத்தத்தை கிளப்பி விட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அடிவிழாமல் கேள்வி கேட்கப்படும் ஒரே இடம் பார்பர் ஷாப்பாக இருந்தது. அதுவே அந்த ஊரின் அறிவாலயமாக இருந்தது. கழகத்தின் பாசறை என்று பார்பர்ஷாப்பைச் சொல்லலாம். அங்குதான் புரட்சியின் கனல்கள் பொத்தி பொத்தி காக்கப்பட்டன. அங்கும் அடிதடி நிகழும் வண்ணம் சூடு பரக்கும் விவாதங்கள் நிகழ்தாலும் பார்பர் கையில் கத்தி இருப்பதால் எல்லோரும் கொஞ்சம் அடக்கியே வாசிப்பதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்படிக் கேட்கப்பட்ட கேள்விகள் அச்சமூகத்தை முற்றும் முழுவதுமாக மாற்றிவிடவில்லை. எல்லாம் அரைகுறை சாமாதானமாக, அச்சமூக அமைப்பில் நிகழ்ந்த வரப்பு மாற்று உத்திகளாக மட்டுமே நிகழ்ந்தன. அம்மக்களை அச்சமூகம் போட்டிருந்த தளைகளிலிருந்து முற்றும் முழுதுமாக விடுதலை செய்யும் கேள்விகளை கேட்கும் திறனுள்ள அறிவாளி அந்த ஊரில் யாரும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்துவைப் பொறுத்த மட்டில் அந்த ஊரின் ஒரே அறிவாளி அவன் அக்காள் செல்லம்மாள்தான். அவள்தான் எல்லாப் பரீட்சையிலும் முதல் மார்க் வாங்கினாள். இருக்கும் பரீட்சைகள் போதாதென்று தமிழ் மன்றப் பரீட்சையென்று மானாமதுரை போயும், ஹிந்தி பிராத்மிக் பரீட்சையென்று மதுரை போயும் எழுதிக் குவித்தாள். பாட்டுப் போட்டிகளில் வேறு கலந்து கொள்வாள். அந்த ஊருக்கு யாராவது முக்கியப் பிரமுகர்கள் வந்து நடத்தும் விழாக்களில் இவளும், இவள் தங்கையும்தான் இறை வணக்கம் பாடுவர். கயிற்றில் நடப்பது போன்ற அருணகிரியாரின் பாடல்களையெல்லாம் அவர்கள் சரளமாகப்பாடுவர். மார்கழி மாதத்தில் காலை நேரங்களில் பெரியகோயில் போய் திருப்பாவை பாடுவர். செல்லம்மாள்தான் அந்த ஊரில் நடந்த எஸ்.எஸ்/எல்.சி பரீட்சையில் முதல் மதிப்பெண் பெற்றுத் தேர்ந்தாள். அவளே முதன்முறையாக கல்லூரி வாசலையும் எட்டினாள். பாத்திமா கல்லூரி தந்த மேலைநாட்டு கிறிஸ்தவ மேனர்ஸ் மெல்ல, மெல்ல நந்து வீட்டிற்கும் வந்தது. ஒரு கோடை விடுமுறையில் எப்படி ஒருவர் உதவி செய்தால் ‘நன்றி’ சொல்வது என்று சொல்லிக்கொடுத்தாள். வீட்டிற்குள் ஒருவருக்கொருவர் நன்றி சொல்வதா? அது யாரும் கேள்விப்படாத வழக்கமாக இருந்தது. அது நல்ல பழக்கம் என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்குப் பரிசாகக் கிடைக்கும் வியாசர் விருந்து, சக்கிரவர்த்தித் திருமகன், பாரதியார் பாடல்கள், தாகூரின் கீதாஞ்சலி போன்ற புத்தகங்களெல்லாம் நந்துவிற்கும் விருந்தாக அமைந்தன. அந்த ஊரில் பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் ஒரு நூலகமுண்டு. அதுவே நந்துவின் அறிவாலயமாக செயல்பட்டது. அங்குதான் வெளி உலகம் இவனுள் புகுந்தது. கலைக்கதிர் எனும் நூல் அவனை மிகவும் ஈர்த்தது. ஆழிப்பேரலை பற்றியெல்லாம் அறியும் போது வியப்பு மேலிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் அந்த ஊர் நூலகத்திலும் ஜே.கே பற்றிய நூல்கள் இல்லை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="393"&gt;&lt;param name="movie" value="http://www.dailymotion.com/swf/video/x9klzo?additionalInfos=0"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed type="application/x-shockwave-flash" src="http://www.dailymotion.com/swf/video/x9klzo?additionalInfos=0" width="480" height="393" allowfullscreen="true" allowscriptaccess="always"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://www.dailymotion.com/video/x9klzo_j-krishnamurti-6-biographie_webcam"&gt;J. KRISHNAMURTI 6 biographie&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;i&gt;Uploaded by &lt;a href="http://www.dailymotion.com/jiddu-krishnamurti"&gt;jiddu-krishnamurti&lt;/a&gt;. - &lt;a href="http://www.dailymotion.com/channel/webcam/featured/1"&gt;Discover more webcam videos and video blogs.&lt;/a&gt;&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-4725720027731740252?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/4725720027731740252/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=4725720027731740252' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/4725720027731740252'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/4725720027731740252'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/09/3.html' title='ஆலவட்டம் 3'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-2500567370456151376</id><published>2010-09-25T13:02:00.001+09:00</published><updated>2010-09-25T13:04:51.751+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='JK and K'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Spiritual travelogue'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='J.Krishnamurti'/><title type='text'>ஆலவட்டம் 2</title><content type='html'>2. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்துவின் கிராமத்தில் ஜே.கேயை அறியாதோர் அதிகமிருந்தது ஆச்சர்யமில்லை. ஏனெனில் அது சாதாரண குக்கிராமம். விவசாயம்தான் பிரதானம். ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கும் பள்ளிக்கூடமுண்டு. எஸ்.எஸ்.எல்.சி பரீட்சை எழுத மானாமதுரை போக வேண்டும். எவன் மானாமதுரைவரை போய் பரிட்சை எழுதுவான்? அக்கிரகாரத்திலாவது அறிவுஜீவிகள் உண்டா எனில்? அங்கும் கிடையாது. திருநெல்வேலி பிராமணரான கிருஷ்ண அய்யர் திருப்புவனம் வந்து ஹோட்டல் வைத்தார். ஸ்ரீகிருஷ்ணா பவன் என்று பெயர் வைத்தார். நல்லபடியாக ஓடியது. அவரது உறவுக்காரர்கள் எல்லோரும் அவருக்கு ஒத்தாசையாக அங்கு வந்துவிட்டனர். நில, புலமென அதிகமான போது விவசாயத்தைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள தனது மச்சினனை அனுப்பினார். அன்றிலிருந்து கோபாலய்யர் விவசாயி ஆகிவிட்டார். அவர் பேச்சு, நடை உடை எதிலும் பிராமணத்துவம் பார்க்கமுடியாது. எப்போதாவது ஆவணியாவிட்டம் வந்தால் இவரைப் பூணூல் மாற்றிக் கொள்ளப் பார்க்கலாம். அவ்வளவுதான். சரி, பஞ்சாங்க ஐயங்கார் வீடு எப்படி? அவருக்கும் நில புலன்கள் உண்டே. அவர் விவரமாக பெரிய பையனை வக்கீல் படிக்க வைத்தார். சின்னவனை விவசாயி ஆக்கிவிட்டார். நாராயணன் ஆவிணியாவிட்டம் என்றால் கூட வர மாட்டான். கேட்டால், ‘ஆமா! என்னை எவன் பிராமணன் என்பான்?’ என்று சொல்லி வெட்கப்பட்டு சிரிப்பான். கோவிந்த ஐயங்கார் மட்டும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டே விவசாயம் பார்ப்பார். அதை அப்படியே அவர் பிள்ளை காளமேகமும் செய்தான். அது எப்படி சாத்தியப்பட்டது என்றறியும் திறன் நந்துவிற்கு இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இந்தப் பிராமணப்பசங்களுக்கு வேதம் சொல்லிக்கொடுக்கலாமென்று மதுரையிலிருந்து ஒரு கனபாடிகள் வந்தார். அப்படியாவது இன்னொரு மொழி இவர்களுக்கு பரிட்சயமாகட்டுமென்று. ஆனால் எவனாவது போனால்தானே! அவர் ஒரு மாதம் பார்த்துவிட்டு ‘இது ஒண்ணும் சரிப்படாது’ என்று போய்விட்டார். நந்துவிற்கு அந்த மாமாவின் முகத்தில் ஒரு தேஜஸ் இருப்பதாக புலப்படும். அதற்காக சமிஸ்கிருதம் படிக்கவா முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அங்கிருந்த பள்ளிக்கூடம் இவர்களுக்கு மாற்று மொழி சொல்லிக்கொடுக்க ஒரு திட்டம் போட்டது! அதாவது, மாலை நேரங்களில் ஆங்கிலம் வந்து கற்றுக்கொள்ளும் சிறார்களுக்கு உச்சிக்குடுமி ஐயர் கடையிலிருந்து ஒரு லட்டு, ஒரு மிக்சர் பொட்டலம் தரப்படும் என்று அறிவித்தது. நந்துவிற்கு இதுவொரு நல்ல திட்டமாகப்பட்டது. ஏனெனில் உச்சிக்குடுமி ஐயர் கடைக்குப் போய் சாப்பிட தனியாகக் காசு வேண்டும். இவன் தந்தையை வேண்டிய நேரத்தில் காண்பதரிது. சித்தியாவோ கோபக்காரர். காசு நிச்சயம் தருவார். ஆனால் அது சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து கொண்டு அருள் செய்வதற்கு ஒப்பானது. நந்துவிற்கு தீக்காயம் பட்டுப் பழகிவிட்டது. இந்த நிலையில் ஆங்கிலம் கற்றுக் கொண்டால் கசக்கவா செய்யும்? ஆனாலும், அங்கும் கூட்டமில்லை. கிராமத்துப் பசங்களை லட்டு, மிக்சர் கொடுத்தெல்லாம் அவ்வளவு எளிதில் மயக்கிவிட முடியுமா என்ன? ஆனாலும், நாலு பேர் இருந்ததால் அந்த வகுப்பு ஓடியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த போது, இந்தி வாத்தியார் ஒருவர் இருந்தார். மகாலிங்கமென்று பெயர். அவரை ஹிந்தி பண்டிட் என்றுதான் சொல்லுவார்கள். அவர் பள்ளியில் சொல்லிக்கொடுத்தது போதாது என்று மாலை வேளைகளில் வீட்டிற்கும் வந்துவிடுவார். பசங்களின் தொல்லை தாங்காத பெற்றோர்கள் சிறுவர்களை மாலைப் பாடத்திற்கு உட்கார வைத்து விடுவர். ஆத்திரம் தாங்காத நந்து பண்டிட் உட்காரும் ஈசிசேர் கம்பைக் கழட்டிவிட்டு அப்படியே வைத்துவிடுவான். அவர் பாடம் ஆரம்பிக்கவந்து உட்கார, ஈசிசேர் படுதா நழுவிக்கொள்ள ‘படார்’ என்று பின் மண்டை ஈசிசேர் கட்டையில் மோத..மூட் அவுட்டாகி பாடம் நடத்தாமல் போய்விடுவார். ஆனால் நந்துவிற்கு பேருதவி செய்தது சில கட்சிகள். அவை இந்தியை எதிர்த்தால் பள்ளிக்கூடமே மூடப்படும் எனும் நற்செய்தியை மாணவர்களிடம் பரவ விட்டது. இந்தத் தேனினும் இனிய சேதி கேட்டு நந்து போன்ற மாணவர்கள் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர். எதற்குச் செய்கிறோம் என்ற புரிதல் இல்லாமல் ஜாலியாக மாணவர்கள் வகுப்பைப் பகீஷ்கரித்தனர். ஒருநாள் பள்ளி கேட்டுக்கு உள்ளே உட்கார்ந்து கொண்டு ‘இந்தி ஒழிக!’ என்று கத்திக் கொண்டிருந்த போது (விடுமுறை நாளில்) ஒரு லாரி நிறைய ‘சட்டி போலீஸ்’ வந்திறங்கி லத்தியைக் கொண்டு மாணவர்களை வாங்கு, வாங்கு என்று வாங்கி விட்டது. நந்து இரண்டு அடியில் சுவரேறிக் குதித்து ஓடிவிட்டான். இவன் அண்ணன் மறவன். நின்று அடி வாங்கி. லாக் அப்பில் வைக்கப்பட்டான். இவன் வந்துதான் வீட்டிற்குச் சேதி சொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது தவிரவும் அந்த ஊர் முரட்டு ஊர். நினைத்தால் வெட்டு. நினைத்தால் குத்து. இவன் தாத்தா கூட சுருள் கத்தி வைத்திருந்தார். வாக்கிங் ஸ்டிக்கில் ஒரு பட்டாக்கத்தி மறைந்திருக்கும். கேட்டால் தற்காப்பிற்கு என்பார். இவன் பள்ளிக்கூடம் போகும் போது இரண்டு கொலைகள் பார்த்திருக்கிறான். முதற்கொலை கோரக்கன் கோயிலில் ஒரு ஆட்டின் தலை வெட்டப்படுவது. இரண்டாவது இவன் அக்கா கிளாஸ்மேட் பொரிகடலைக்காரப் பையன் அந்த ஊர் பெரிய ரவுடியை வயிற்றில் குத்தி சாய்ததை. முதல் கொலையைக் கண்டு விட்டு வகுப்பில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது வாந்தி எடுத்தான். இரண்டாவது கொலையை ஊரே பார்த்தது. ஆனாலும் வீட்டிற்கு ஓடி வந்து, வரும் போதே டவுசரெல்லாம் நனைந்து போய், இரண்டு நாள் கடும் ஜுரத்தில் வீழ்ந்து விட்டான். இந்த அழகில் அந்த ஊரில் எப்படி அறிவு ஜீவிகளைக் காணமுடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், அங்கு அறிவு ஜொலித்த ஒரே இடம் பார்பர் ஷாப்தான். அங்கு போனால் வரிசையாக படம் தொங்கிக்கொண்டிருக்கும். ஸ்டாலின், மார்க்ஸ், இங்கர்சால், அம்பேத்கார் என்று. இவர்களெல்லாம் யார் என்று யாரும் இவனுக்கு விளக்கிச் சொன்னதில்லை. சவரக்கடையில் கிடக்கும் நாளிதழ்களைக் கூட தைர்யமாக எடுத்துப் படித்துவிட முடியாது. எவனாது முரடன், மிலிட்டரிக்காரன் வந்து விட்டான் எனில். படிக்கும் பேப்பரை அறைந்து வாங்கிப் படிப்பான். அங்கு என்றும் வாய் பேசியதில்லை. எடுத்தவுடன் கைதான் பேசும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் உள்ள ஊரில் ஜே.கிருஷ்ணமூர்த்தியை எப்படி அறிந்திருக்க முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; Knowledge is always accompanied by ignorance &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;A great many scientists in the West have gone into the question of the &lt;br /&gt;brain. They say that we are using only a very small part of the whole brain. &lt;br /&gt;We can observe whether this is so in ourselves, for it is part of meditation &lt;br /&gt;to find out—for ourselves—whether the whole brain or only a very small part &lt;br /&gt;is operating. Now, thought is the response of memory which has been stored &lt;br /&gt;through knowledge; knowledge is gathered through experience. That is, &lt;br /&gt;experience, knowledge, memory stored in the brain, then thought, then &lt;br /&gt;action. This is our pattern of living, and the whole process is based on &lt;br /&gt;this movement. Man has done this for the last million years. He has been &lt;br /&gt;caught in the cycle, which is the movement of thought. And within this area &lt;br /&gt;he has choice. He can go from one corner to the other and say, “This is my &lt;br /&gt;choice, this is my movement of freedom”—but it is always within the limited &lt;br /&gt;field of the known. And knowledge is always accompanied by ignorance because &lt;br /&gt;there is no complete knowledge about anything. So we are always in this &lt;br /&gt;contradictory state: knowledge and ignorance. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*A Timeless Spring, p 163*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-2500567370456151376?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/2500567370456151376/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=2500567370456151376' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/2500567370456151376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/2500567370456151376'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/09/2.html' title='ஆலவட்டம் 2'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-9139487996400202639</id><published>2010-09-25T12:43:00.006+09:00</published><updated>2010-09-25T13:06:44.865+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nandhu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='JK and K'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Spiritual travelogue'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='J.Krishnamurti'/><title type='text'>ஆலவட்டம் 1</title><content type='html'>பள்ளிக்காலங்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி நந்து அறிந்திருக்கவில்லை. வள்ளலாரைப் பற்றி ம.பொ.சி எழுதிய புத்தகம் இருந்தது (வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) போல், ஸ்வாமி அண்ட் பிரண்ட்ஸ் என்று ஆர்.கே.நாராயணன் புத்தகம் இருந்தது போல் ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றி யாரும் அறிமுகம் செய்யவில்லை. அவன் வளர்ந்த கிராமம் ஒரு சிவஸ்தலம். காமகோடி பீடம் ஆச்சார்யர் வந்த போது எல்லோரும் விழுந்து சேவிக்கச் சொன்னார்கள். நந்து மகிழ்வுடன் விழுந்து சேவித்தான். ஏனெனில், காலில் விழுந்து சேவிப்பது என்பது குழந்தையிலிருந்து அவனுக்குக் கற்பிக்கப்பட்டு வந்தது. மேலும் பெரியவர்கள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தால் நாம் மரியாதையாக தரையில் அமரவேண்டும் என்ற நாசூக்கும் நந்து கற்றிருந்தான். ஆனால், அந்த ஊரிலேயே யாரும் ஜே.கே பற்றி அவனிடம் சொன்னதில்லை. கிராமத்து வாழ்க்கையில் அரசமரத்துப் பிள்ளையார் உண்டு, ஆற்றோர முனீஸ்வரர் உண்டு, முருகன் உண்டு, சிவனுண்டு, பெருமாளுண்டு. சங்கரர் உண்டு, இராமானுஜர் உண்டு, பெரியாருண்டு, அண்ணா உண்டு ஆனால் ஜே.கிருஷ்ணமூர்த்தி கிடையாது. யாரும் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி வந்து சேர்ந்தது ஒரு பெரிய திருப்பம். இவன் அரைக்கால் சட்டையுடன் கல்லூரியில் சேர மனு வாங்கப் போனபோது உதட்டோர ஆங்கிலத்தில் பேசி இவனைக் கேலி செய்த விடலையர் கூட ஜே.கே பற்றி இவனுக்குச் சொன்னதில்லை. இவனது ஆங்கில வாத்தியார் அப்படியே தன்னை ஆங்கிலேயன் போல் பாவித்து நடத்துவார் ஆனால் அவருக்கும் ஜே.கேயின் இருப்பு தெரிந்திருக்கவில்லை. அது ஏன்? இவரது நாத்திகப் பேராசிரியர் எல்லா நாத்திக சிந்தனையாளர்கள் பற்றியும் பேசுவார். பரீட்சைப் பேப்பரில் ‘ஓம்’ என்று எழுதும் சந்திரசேகரனைக் கிண்டல் அடிப்பார். இவனை தன்னுடைய சிந்தனைப்போக்கில் வழி நடத்த எண்ணிய அவர் கூட ஜே.கே பற்றிச் சொன்னதில்லை. கல்லூரி சேப்பலில் இலவசமாக பைபிள் புத்தகம் தருவார்கள். இவன் வாங்கிக்கொள்ளமாட்டான். ஸ்வாமி (Swami and Friends)யின் நினைவு உடனே வந்துவிடும். தன்னை மதம் மாற்றிவிடுவார்கள் என்று அம்மாதிரிப் புத்தகங்களை வாங்கிக்கொள்ளமாட்டான். அக்கல்லூரியில் விவேகாநந்தர் பற்றிய முழு வால்யூமும் இருந்தது. இவனுக்கு விவேகாநந்தர் பிடித்திருந்தது. அவரது நெஞ்சு நிமிர்த்திய போட்டோ பிடித்திருந்தது. ஆனால் அக்கல்லூரி நூலகத்தில் ஜே.கே பற்றி எந்தப் புத்தகமும் இவன் கண்டதில்லை. இவனை எப்படியும் சிவாநந்தர் வழியில் கொண்டு வந்துவிட வேண்டுமென்று வேதியியல் ஆசிரியருக்கு ஆசை. ஆனால் இவனோ நாத்திகம் பாதி, ஆத்திகம் பாதி என்று இருந்தான். ஆப்ரகாம் சொல்வதை நம்புவதா? ஐயங்கார் சொல்வதை நம்புவதா? என்ற குழப்பம். ஐயங்கார் வாத்தியார் இவனை முதன் முதல் நெருங்கி வந்த போது தோள் மீது கை போட்டு முதுகில் ஏதோ தேடினார். இவனுக்கு பயம். வாத்தியார் எதுக்கு தோள் மீது கை போடுகிறாரென்று! சரி! ஆத்திகமா! நாத்திகமா என்று இவர்கள் இருவரையும் மோதவிட்டுப் பார்த்துவிட வேண்டியதுதான் என்று ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் இவன் வகுப்பு மாணவர்களுக்காக ஆப்ரகாமையும், ஐயங்காரையும் மோதவிட்டுப் பார்த்தான். எல்லோருக்கும் ஒரே வேடிக்கை. ஐயங்கார் பேசினால் சாமி இருப்பது போல் தோன்றும். ஆப்ரகாம் பேசும் போது அது இல்லாதது போல் தோன்றும். ஆக, அந்த டிபேட் பெரிய குழப்பத்தில் இவனை கொண்டு போய் விட்டது. ஆனால் ஐயங்கார் ஸ்வாமிகள் எப்படியும் இவனை சிவாநந்தர் வழிக்குக் கொண்டு வந்துவிட வேண்டுமென்பதில் கவனமாக இருந்தார். மீனாட்சி கோயில் ஆடி வீதிக்கு வாரா, வாரம் போக வேண்டியதாய் போய் விட்டது. புதிய, புதிய வாயில் நுழையாத பஜன்களையெல்லாம் பாட வைத்தார்கள். இவனுக்கு கோரக்கன் கோயில் பலிக்கு முன் கட்டிய ஆடுதான் நினைவிற்கு வந்தது. அவ்வளவு பெரிய கல்லூரியில் யாரும் இவனுக்கு ஜே.கே பற்றிச் சொன்னதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி முடிந்து ஆய்வகம் வந்த போது பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தான்.அங்குள்ள நூலகம் இவன் அதுவரை பார்த்த நூலகங்களிலேயே பெரிதான நூலகமாக இருந்தது. இவன் புத்தகப்புழு அல்லன். ஆனாலும் நூலகம் எப்போதும் இவனைக் கவர்ந்தது. ஒருநாள் இவன் கண்ணில் கிருஷ்ணமூர்த்தி பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kfionline.org/productimages/Second_k_re.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 89px; height: 135px;" src="http://www.kfionline.org/productimages/Second_k_re.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தை கையில் எடுத்து படித்துப் பார்த்தான். ஒன்றுமே புரியவில்லை. சரி இது நமக்கு சரிப்பட்டு வராது என்று புத்தகத்தை இருந்த இடத்தில் வைத்துவிட்டு நகர்ந்தவன் தான். இவன் கல்யாணம் ஆகும்வரை யாரும் ஜே.கே பற்றி இவனிடம் பேசியதே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Jiddu Krishnamurti &lt;br /&gt;&lt;br /&gt;"If I may I would like to point out we are not entertaining you. We are not &lt;br /&gt;indulging in some kind of intellectual game, or trying to point out what &lt;br /&gt;kind of belief you should have; or to seek a leader to solve our problems. &lt;br /&gt;We are not doing any kind of propaganda to persuade you to think in a &lt;br /&gt;particular direction, or to convince you of a particular point of view. But &lt;br /&gt;we are thinking together, observing together the problems, the crisis, that &lt;br /&gt;we are facing, the war, destruction, corruption, and the superstitions in &lt;br /&gt;the name of religion; all that nonsense that goes on in the name of &lt;br /&gt;religion, god and so on ..." &lt;br /&gt;&lt;br /&gt;Jiddu Krishnamurti, Madras 1st public talk 26th December 1981 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/C362GiRFO3M?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/C362GiRFO3M?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-9139487996400202639?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/9139487996400202639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=9139487996400202639' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/9139487996400202639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/9139487996400202639'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/09/blog-post.html' title='ஆலவட்டம் 1'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-6402679230801622513</id><published>2010-07-13T22:12:00.001+09:00</published><updated>2010-07-13T22:14:10.085+09:00</updated><title type='text'>செம்மொழி மாநாட்டுரை: எண்ணியப்பாதுகாப்பில் தமிழ் முதுசொம்</title><content type='html'>&lt;object classid="clsid:67DABFBF-D0AB-41fa-9C46-CC0F21721616" width="502" height="341" codebase="http://go.divx.com/plugin/DivXBrowserPlugin.cab"&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;param name="custommode" value="none" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;param name="autoPlay" value="false" /&gt;&lt;br /&gt;  &lt;param name="src" value="http://www.subaonline.net/nakannan/media/video/tamildigi2010.mkv" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed type="video/divx" src="http://www.subaonline.net/nakannan/media/video/Dr.N.Kannan@WCTC2010.mkv" custommode="none" width="502" height="341" autoPlay="false"  pluginspage="http://go.divx.com/plugin/download/"&gt;&lt;br /&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br&gt;No video? &lt;a href="http://www.divx.com/software/divx-plus/web-player" target="_blank"&gt;Download&lt;/a&gt; the DivX Plus Web Player.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-6402679230801622513?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/6402679230801622513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=6402679230801622513' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/6402679230801622513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/6402679230801622513'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/07/blog-post_13.html' title='செம்மொழி மாநாட்டுரை: எண்ணியப்பாதுகாப்பில் தமிழ் முதுசொம்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-3660623123346653132</id><published>2010-07-06T00:02:00.017+09:00</published><updated>2010-07-06T10:30:46.911+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='pondichery'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil department'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='bhakti'/><title type='text'>பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நா.கண்ணன் உரை</title><content type='html'>&lt;A href="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/TDJ5eKb4gCI/AAAAAAAAIlc/mzWLqSymAQU/s1600/pondi_july1.jpg"&gt;&lt;IMG style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 281px; CURSOR: hand" id=BLOGGER_PHOTO_ID_5490584454822395938 border=0 alt="" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/TDJ5eKb4gCI/AAAAAAAAIlc/mzWLqSymAQU/s400/pondi_july1.jpg"&gt;&lt;/A&gt;&lt;br /&gt;&lt;OBJECT id=MediaPlayer1 standby="Loading Microsoft Windows® Media Player components..." codeBase="http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab# Version=5,1,52,701" classid=CLSID:22d6f312-b0f6-11d0-94ab-0080c74c7e95 width=280 height=46 type=application/x-oleobject&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed type="application/x-mplayer2" pluginspage="http://www.microsoft.com/Windows/MediaPlayer/" src="http://www.domain.com/music/music.m3u" name="MediaPlayer1" width=280 height=46 autostart=1 showcontrols=1 volume=-300&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/OBJECT&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜீலை 1, 2010 அன்று மதியம் 2:30க்கு முனைவர் நா.கண்ணன் அவர்கள் ‘கிழக்காசிய நாடுகளில் தமிழ் ஆய்விற்கான வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் பாரதியார் தமிழ் புலம், பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையின் ஒலிவடிவம் இது. மேலே, ஒலிப்பெட்டி தெரியவில்லை என்போருக்கான புறத்தொடுப்பு &lt;A href="http://www.subaonline.net/nakannan/media/audio/pondi_01-07-2010.mp3"&gt;இங்கே&lt;/A&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-b8858b5660be162e" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v6.nonxt3.googlevideo.com/videoplayback?id%3Db8858b5660be162e%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330233893%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D6D6C9F54BC507E45B8AF4B1F570FFEB97066DDA9.6704303FC819403702A48AD3286E39854DEC62C5%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Db8858b5660be162e%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DVnzzYQiz_vr718QAj3wQMWCWj6w&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v6.nonxt3.googlevideo.com/videoplayback?id%3Db8858b5660be162e%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330233893%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D6D6C9F54BC507E45B8AF4B1F570FFEB97066DDA9.6704303FC819403702A48AD3286E39854DEC62C5%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Db8858b5660be162e%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DVnzzYQiz_vr718QAj3wQMWCWj6w&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வின் புகைப்படங்களைக் காண &lt;a href="http://picasaweb.google.com/nkannan/PondicheryJuly12010#slideshow/5490596863185075730"&gt;இங்கே சொடுக்குக&lt;/a&gt;!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-3660623123346653132?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/3660623123346653132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=3660623123346653132' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/3660623123346653132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/3660623123346653132'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/07/blog-post.html' title='பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் நா.கண்ணன் உரை'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/TDJ5eKb4gCI/AAAAAAAAIlc/mzWLqSymAQU/s72-c/pondi_july1.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-8927755544886298155</id><published>2010-06-17T10:57:00.005+09:00</published><updated>2010-06-17T11:15:12.725+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Oval Office Speech'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='world environment day'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Barack Obama'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Oil Spill'/><title type='text'>புவியன்பு உரை - ஒபாமா (ஓவல் அலுவலகம்)</title><content type='html'>&lt;object width="525" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Gh76oepKFc8&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Gh76oepKFc8&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="525" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓபாமாவின் இந்த உரை உலகிற்கோர் விழிப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;ஊழலும், வஞ்சமும், குறும் பார்வையும் நிறைந்த அரசியல் உலகில் இப்படிப் பட்ட தலைவர்கள் கூட இருப்பது நமக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. எண்ணெய் கசிவால் அமெரிக்கா மாசு பட்டுள்ளது. இச்சூழல் பிரச்சனையை ஒரு இராணுவப் பிரச்சனை போல் கருதி ஒபாமா அளித்திருக்கும் இவ்வுரை 21ம் நூற்றாண்டின் ‘உரத்த சிந்தனை’ யின் வெளிப்பாடு என்று சொல்லிவிடலாம். 70கள் தொடக்கம் சூழலியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து பேசி வந்த அறிவியல் உண்மைகள் கால் நூற்றாண்டுகளுக்குப் பின் அரசியல் தளத்திற்கு வந்திருக்கிறது. இச்சூழல் விழிப்புணர்வில் என் ஆய்வுகளும் இடம் பெறுகின்றன என்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். தொடர்ந்து விழிக்கும் மூன்றாம் உலகிற்கு ஒளியூட்ட பயிலரங்கள் நடத்தி வருகிறேன் என்று சொல்வதிலும் ஆனந்தம். இது நாம் ஒவ்வொருவரும் இணைந்து செயல்பட வேண்டிய பிரச்சனை. மற்றோரைக் கை காட்டுவதால் ஓடிப்போய் விடக்கூடிய பிரச்சனை அல்ல. ஒபாமா தனது பேச்சில் ஒளிவு மறைவின்றிச் சொல்வது போல், நம் பிழைகளை ஒப்புக்கொண்டு, திருந்தும் வழிகள் பற்றி யோசித்து, ஒளிமயமான எதிர்காலம் அமையும் எனும் நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் செயல்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வறட்டுத்தனமான நாத்திகம் ஒரு அரசியல் மாட்சிமையாகிப் போன தமிழகச் சூழலில், இறைமை உணர்வுடன் பேசும் ஒபாமாவின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. இறைவன் கஷ்டங்களை நீக்குவதற்காக உருவான ஆசாமி இல்லை, கஷ்டங்கள் வரும் போது நமக்கு தெம்பு அளித்து அக்கஷ்டங்களில் இருந்து எப்படி மீண்டு எழுவது என்று ஊக்கமளிக்கும் நல்ல நண்பனே இறைவன். இதை ஒபாமா எவ்வளவு அழகாக சித்தரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;21ம் நூற்றாண்டை அமெரிக்காவின் நல்லிதயங்கள் வழி நடத்தட்டும்! இறைவன் அருள் எல்லோர்க்கும் கிட்டுக!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-8927755544886298155?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/8927755544886298155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=8927755544886298155' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/8927755544886298155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/8927755544886298155'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/06/blog-post.html' title='புவியன்பு உரை - ஒபாமா (ஓவல் அலுவலகம்)'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-5131200152945822950</id><published>2010-02-15T19:23:00.004+09:00</published><updated>2010-02-15T20:11:44.047+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='avatar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='hollywood'/><title type='text'>அவதாரம்! (சினிமா விமர்சனம்)</title><content type='html'>இதுவொரு மெகா ஹிட். வெளியான ஆறுவாரங்களுக்குள் 2 பில்லியன் டாலர்கள் வசூலாம், ஐரோப்பாவில். இதன் முக்கிய வருமானம் இது தரும் முப்பரிமாண அனுபவம் என்பதைக் கருத்து தெரிவிப்பு சொல்கிறது. உண்மைதான். அந்தப் பண்டோரா கிரகத்தில் வாழ நம் எல்லோருக்கும் ஆசை வரும் படி எடுத்து இருக்கிறார்கள். மெய்நிகர் அனுபவம் என்பது சமகால வாழ்வியலில் ஒரு கூடுதல் அனுபவச் செறிவு என்றே சொல்ல வேண்டும். கணினி சார் தொழில் நுட்பத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும். இப்படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதைக் காட்டும் வீடியோ கீழே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/L6JXUoWeZ7Q&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;hl=en_US&amp;feature=player_embedded&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/L6JXUoWeZ7Q&amp;color1=0xb1b1b1&amp;color2=0xcfcfcf&amp;hl=en_US&amp;feature=player_embedded&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் சிறப்பு என்னவெனில் நடிக,நடிகைகளின் முகபாவத்தையெல்லாம் குறிப்பாக எடுத்து கணினி மூலம் ஒரு திரைச்சித்திரத்தை உருவாக்குவது. இதை நான் நேரடியாக சென்னையிலுள்ள பெண்டாஃபோர், ட்ரீம் மீடியா ஸ்டூடியோவில் பார்த்திருக்கிறேன். நடிக/நடிகையர்கள் நடித்து முடித்தவுடன் சுடச்சுட அவர்களது மின் அவதாரம், உருவாக்கப்பட்ட பண்டோரா கிரகத்தில் ஒட்ட வைத்துக் காட்டப்படும் போது மெல்ல, மெல்ல நடிக, நடிகையர் அவர்கள் அவதாரமாக வாழத்தலைப்படுகின்றனர். அதன் மூலம் திரைச்சித்திரத்திற்கு மனித குணநலம் இயல்பாக ஒட்டிக்கொள்கிறது. எனவே இது வெறும் வால்ட் டிஸ்னி கார்ட்டூன் படமல்ல. உண்மையான அவதாரம்.அதுவே இப்படத்தின் வெற்றிக்கான பார்முலா.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி இதில் கதை என்று ஏதுமில்லை. 14 வருடத்திற்கு முன்பே கதையை உருவாக்கிவிட்டேன் என்கிறார் இயக்குநர். ஆனால் அதற்குள் எத்தனையோ முன்னோடிப்படங்கள் வந்து நமக்கு இப்படம் ஒரு மசாலா என்பது போன்ற பிரம்மையைத் தருகிறது. சூப்பர் ஹிட் எனப்படும் எல்லாப்படத்தின் அம்சங்களையும் இதில் காண முடிகிறது. மாட்ரிக்ஸ், ஹேரிபாட்டர், லார்டு ஆப் தி கிங்க்ஸ், ஈடி, ஸ்டார் வார்ஸ், பிற வால்ஸ்டிஸ்னி படங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் இது சொல்லும் சேதி முக்கியம். இது சூழல் அன்பு பேசும் படம். கண்மூடித்தனமான சூழல் சூறையாடல் என்பது அழிவிற்கு இட்டுச் செல்லும் என்பது முக்கிய சேதி. எனவே பண்டோராவின் ஆதிக்குடிகளைக் காட்ட ஆப்பிரிக்க, அமேசான் போன்ற இடங்களில் உள்ள பழம் குடிகளின் தோற்றத்தை, நடவடிக்கைகளை காப்பி அடித்துள்ளனர். லாரி கிங் ஷோவில் பேசும் போது இப்படத்தை எடுத்த எல்லோரும் வெளிகிரகங்களில் உயிரினம் வாழ்வது உறுதி என்றே சொல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கதையைப் பற்றிப் பேசும் கிறிஸ்தவ தேவாலய மதகுரு (போப் ஆண்டவர்) இது shamanistic என்று ஒதுக்க வேண்டிய கருத்து என்று சொல்லியிருக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்றுதான். இது கிறிஸ்தவத்திற்கு எதிரான போக்கு என்று அவர் காண்கிறார். ஆனால், வழக்கம் போல் இப்படம் இந்தியக் கண்ணோட்டத்தில் மிகவும் பழக்கப்பட்ட தீம் என்றே தோன்றுகிறது. நமக்குதான் தேவர்கள், அசுரர்கள், பாதளலோகம் இவையெல்லாம் பழக்கப்பட்ட சிந்தனைகள்தானே! உயிர்களின் தொடர்ச்சி பற்றிய இப்படத்தின் சித்திரம் வெகுவாக இந்தியப்பின்புலம் கொண்டுள்ளது. கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்பதை நாம் சித்தி என்கிறோம். அது அறிவியல் சாத்தியம் என்பது போல் காட்டுகிறது படம். இதே தீமில் வேறொரு ஹாலிவுட் படம் பார்த்த ஞாபகம். இது அறிவியல் புதினம். ஆனால், மசாலா அறிவியல் புதினம். ஒன்று கூட புதிய கருத்தில்லை. எல்லாம் பேசப்பட்டு, படமாக்கப்பட்டவையே! அப்படி இருந்தும் இப்படம் சூப்பர்ஹிட் ஆகியிருக்கிறது என்றால் நம் கற்பனைக்கு அது சோறு போடுகிறது என்றே பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல படம். எல்லோரும் குடும்பத்துடன் காண வேண்டிய படம். முப்பரிமாணக் காட்சி கூடுதல் விலை. ஏனெனில் அதற்கென தனி உபகரணங்கள் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறதாம். ஐமேக்ஸில் பார்க்க முடிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். முப்பரிமாண அனுபவத்திற்கு ஊர் விட்டு, ஊர் போய் பார்த்தேன். அதுவே இப்போதைக்கு திருப்தி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/S3kqiSQoJII/AAAAAAAAIOM/MtZw-kqI_D8/s1600-h/avatar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 136px;" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/S3kqiSQoJII/AAAAAAAAIOM/MtZw-kqI_D8/s320/avatar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5438424793532081282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு மகாபாரதம், இராமாயணம் போன்ற பிரம்மாண்டமான கதைக்கருவூலங்கள் இருப்பினும் நம்மால் அவைகளை இம்மாதிரிப் படங்களாக உருமாற்றும் முன், பிறரால் அவை எடுக்கப்பட்டு விடுகின்றன. எனவே இம்மாதிரிப் படங்களைப் பார்த்து, நமக்குத்தெரிந்த கற்பனைப் பின்புலத்தில் வைத்து ரசிக்க வேண்டியதுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-5131200152945822950?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/5131200152945822950/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=5131200152945822950' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/5131200152945822950'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/5131200152945822950'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/02/blog-post_4341.html' title='அவதாரம்! (சினிமா விமர்சனம்)'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/S3kqiSQoJII/AAAAAAAAIOM/MtZw-kqI_D8/s72-c/avatar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-1473300555536707586</id><published>2010-02-15T10:17:00.007+09:00</published><updated>2010-02-15T11:02:37.580+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kim Yun Jin'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='harmony'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='korean film'/><title type='text'>ஹார்மொனி கொரியன் சினிமா (விமர்சனம்)</title><content type='html'>புதுவருட (சீன) வெளியீடாக வந்திருக்கும் ஒரு நெகிழ்வான கொரியப்படம் ஹார்மொனி என்பது. இப்படம் தன் கணவனைக் கொன்ற ஒரு இளம் கர்ப்பவதியின் கதையுடன் தொடங்கிறது. பெண் குற்றவாளிகளுக்காகவே உள்ள பிரத்தியேக சிறையில், இப்படிப் பல குற்றவாளிகள். இவர்கள் எல்லோரும் குடும்ப வன்முறை, பொறாமை (காதல்) போன்ற காரணங்களினால் தற்காப்பிற்காக ஏதோ செய்யப்போய் அது கொலைக் குற்றமாக ஆகி சிறையில் வைக்கப்படுகின்றனர். கதை ஒரு கர்ப்பவதி (நடிகை கிம் ஜோன் ஜின்), ஒரு வயதான தாய் (நே மூன் ஹி) இவர்களைச் சுற்றியும், அங்குள்ள மற்ற பெண் கைதிகளைச் சுற்றியும் போகிறது. சிறைச்சாலை விதியின் படி இவள் சிறையில் பிரசவிக்கும் பிள்ளையை 18 மாதங்களே கட்டிக்காக்க முடியும். இவளது தண்டனையோ 10 ஆண்டுகள். எனவே குழந்தையை தத்து என்று தாரை வார்க்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/S3inqJY2NsI/AAAAAAAAIN0/9pPmxs49rbk/s1600-h/Harmony.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 224px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/S3inqJY2NsI/AAAAAAAAIN0/9pPmxs49rbk/s320/Harmony.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5438280892566353602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தைப் பார்த்துவிட்டு நெஞ்சு நெகிழவில்லையெனில் ஒன்று நாம் அரக்கனாக இருக்க வேண்டும் இல்லை நெஞ்சே இல்லாதவராக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="560" height="340"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/XULCbjpRFxU&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/XULCbjpRFxU&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் பார்த்தபிறகு மனிதனது சட்டங்களும், குற்றவியல் துறையும் இன்னும் எவ்வளவு தூரம் முன்னேற வேண்டியுள்ளது என்பது புலனாகிறது. சிறைக்கைதிகளுக்கு வாய்ப்புகள் அதிகமில்லை, அக்கம்பிகளை விட்டு வெளியே வர. ஆயினும், கதாநாயகி, சிறையில் காணும் ஒரு இசைக்கச்சேரியைப் பார்த்துவிட்டு நாங்களும் பாடுவோம் என்று சொல்லப்போய் கதை அதைச் சுற்றி நீள்கிறது. இறுதியில் அபஸ்வரங்கள் எல்லாம் ஸ்வரப்படுத்தப்பட்டு ஒரு அற்புத கச்சேரியைச் செய்து விடுவதுவதான் ஹார்மோனி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/S3io-Da97XI/AAAAAAAAIN8/KoU6EjAmO64/s1600-h/Hormony.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/S3io-Da97XI/AAAAAAAAIN8/KoU6EjAmO64/s320/Hormony.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5438282334073646450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொரிய சினிமா மிகப்பெரிய அளவில் உலக அரங்கில் வளர்ந்து வருகிறது. இது பற்றி எனது விமர்சனங்களில் மீண்டும், மீண்டும் சொல்லிவருகிறேன். இப்படம் என் நம்பிக்கைக்கு மீண்டும் உரம் சேர்த்திருக்கிறது. கொரிய சினிமாவின் தரத்தை நோக்கும் போது நமது படங்களெல்லாம் வெறும் ஜுஜூபி என்று எண்ணத்தோன்றுகிறது. இளம் நடிகைகள் எல்லாம் சாவித்திரி, சிவாஜியை தூக்கி சாப்பிட்டு விடுகின்றனர். என்ன நடிப்பு. சத்யஜித்ரே படத்தின் மந்திரம் போல் இவர்கள் படங்களில் குழந்தைகள் (1 வயதுக்குழந்தை) கூட நடிக்கின்றனர். நாம் இன்னும் கும்பல், கும்பலாக வெளிநாட்டுத் தெருக்களில் பாட்டுப்பாடி காதலித்துக் கொண்டிருக்கிறோம், நமது சினிமாக்களில். கொரியன் நடிகையான கிம் யுன் ஜின் உண்மையிலேயே ஒரு திறமை வாய்ந்த நடிகை. இவர் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில், குறிப்பாக Lost, Seven days போன்ற தொடர் சித்திரங்களில் பிரபலமாகி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.koreatimes.co.kr/www/news/art/2010/01/141_58855.html"&gt;Kim Yun-jin Sings in 'Harmony' Onscreen &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர் ஹாலிவுட்டில் தன் திறமையால் முன்னேறிய பின் மெல்ல, மெல்லப் பல கொரிய நடிக, நடிகையர்கள் முயல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/S3iptSpD5tI/AAAAAAAAIOE/WD_O2gyNHko/s1600-h/photo_Kim-Yun-jin.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/S3iptSpD5tI/AAAAAAAAIOE/WD_O2gyNHko/s320/photo_Kim-Yun-jin.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5438283145613141714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொரிய சினிமா உலகை அதிசயக்க வைக்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை. நம் பாலிவுட், கோலிவுட் தமது மடத்தனமான கனவுலகை விட்டு வெளியே வந்து முன்னேறும் ஆசிய சினிமாவைக் கண்டு, கற்றுக்கொள்வதாக!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-1473300555536707586?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/1473300555536707586/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=1473300555536707586' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/1473300555536707586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/1473300555536707586'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/02/blog-post_15.html' title='ஹார்மொனி கொரியன் சினிமா (விமர்சனம்)'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/S3inqJY2NsI/AAAAAAAAIN0/9pPmxs49rbk/s72-c/Harmony.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-3639906401077508420</id><published>2010-02-05T14:30:00.005+09:00</published><updated>2010-02-05T14:39:47.647+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil tradition goes to Korea'/><title type='text'>கொரியா செல்லும் தமிழ் வழக்கம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/S2utBKiDPeI/AAAAAAAAINI/LNCPsJSXkOQ/s1600-h/Ponnadai-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/S2utBKiDPeI/AAAAAAAAINI/LNCPsJSXkOQ/s320/Ponnadai-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5434627610871283170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சர்யமாக இருக்கிறதா? கொரியாவில் பொன்னாடை போர்த்துவதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆம! &lt;a href="http://www.kordissri.re.kr/"&gt;கொரியக் கடலாய்வு மையத்தில்&lt;/a&gt; இன்று காலை நடந்த ஒரு நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த பேரா.டாக்டர் தொங்வாங் லீ இவ்வாறு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டார்! கொரிய நாட்டில் இம்மாதிரி சிறப்பு நடைபெறுவது இதுவே முதல்முறை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/S2utHPUPj_I/AAAAAAAAINQ/nqzKNjCO7rA/s1600-h/Ponnadai-2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/S2utHPUPj_I/AAAAAAAAINQ/nqzKNjCO7rA/s320/Ponnadai-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5434627715234762738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு விருந்தினருடன் பிற கொரிய விஞ்ஞானிகள் (இடமிருந்து வலம்): டாக்டர் கிம், பேரா.பாக், டாக்டர் லீ, டாக்டர் இம், டாக்டர் ஹாங்க்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-3639906401077508420?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/3639906401077508420/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=3639906401077508420' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/3639906401077508420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/3639906401077508420'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/02/blog-post_05.html' title='கொரியா செல்லும் தமிழ் வழக்கம்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/S2utBKiDPeI/AAAAAAAAINI/LNCPsJSXkOQ/s72-c/Ponnadai-1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-187741383210128767</id><published>2010-02-02T13:38:00.005+09:00</published><updated>2010-02-02T14:24:51.425+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='avatar'/><title type='text'>아바타 - அவதாரம் (சினிமா)</title><content type='html'>இந்த அவதாரம் எனும் பதம் இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதைப் பார்த்தால் இவர்களைத் திருத்த ஒரு அவதாரம் எடுத்தால் தேவலை என்றிருக்கிறது :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/S2etAhjbOeI/AAAAAAAAIM8/hk3Dm0w2-60/s1600-h/avatar_holiwood.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 242px;" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/S2etAhjbOeI/AAAAAAAAIM8/hk3Dm0w2-60/s320/avatar_holiwood.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5433501699964352994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹாலிவுட்டில் இதைப் பெயரிட்டவர்கள் 'அவடார்', 'அவடார்' என்றுதான் சொல்கின்றனர். அங்கு 'த' ஒலி இல்லையென்றில்லை. Bath எனும் போது 'த' என்று ஒலிக்கிறார்கள். ஆனால் நாம் பத்மா என்பதை Badma என்று சொல்வது போல், பூரி என்பதை Buri என்று சொல்வது போல் அவதார் என்பதை மண்டையில் அடிக்குமாறு அவடார் என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கொரியாவில் இவர்களுக்கு 'வ' வராது. எனவே அவதார் 'அபதா (아바타)' என்றாகிவிட்டது. நல்லவேளை 'அப்பத்தா' என்று அழைக்காமல் விட்டார்களே!&lt;br /&gt;&lt;br /&gt;முப்பரிமாணத்தில் இப்படத்தைப் பார்த்த 43 வயது தைவான் சீனர் இதயம் நின்று போய் இறந்துவிட்டதாக &lt;a href="http://www.news.com.au/entertainment/feature/man-died-after-watching-avatar/story-e6frfnv0-1225821333043"&gt;செய்திகள் வருகின்றன&lt;/a&gt;. அதன் பின் சீனாவில் அப்பத்தா பார்க்க பயப்படுகிறார்களாம். நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு விமர்சிக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-187741383210128767?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/187741383210128767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=187741383210128767' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/187741383210128767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/187741383210128767'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2010/02/blog-post.html' title='아바타 - அவதாரம் (சினிமா)'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/S2etAhjbOeI/AAAAAAAAIM8/hk3Dm0w2-60/s72-c/avatar_holiwood.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-1539679463161552233</id><published>2009-11-22T21:27:00.003+09:00</published><updated>2009-11-22T21:48:01.468+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='unnai pol oruvan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil cinema'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kamal'/><title type='text'>உன்னைப்போல் ஒருவன்</title><content type='html'>இப்படியொரு படமெடுக்க கமலை எது தூண்டியிருக்குமென்று யோசிக்கிறேன்? விக்ரம் நடித்து வெற்றிவாகை சூடிய `அந்நியன்`? கமலுக்கு எப்போதும் தொழில்முறை சவால் பிடிக்கும். விக்ரம் வித்தியாசமான வேடங்களில் நடிப்பது கூட கமலின் பாதிப்பு என்று சொல்லலாம். ஆக இருவரும் ஒரு ஆரோக்கியமான போட்டியில் உள்ளனர் என்று சொல்லலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அந்த நாள் &lt;/strong&gt;படத்திற்குப் பிறகு பாட்டே இல்லாத ஒரு படம். ஸ்ருதி ஹாசன் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். கமல், 'அந்நியன்' போல ஒரு படம் எடுக்கிறார் என்றால் அவரது முத்திரையைக் காட்ட வேண்டாமா? (ஆமாம், விக்ரம் பெயர் இராமானுஜம், கமலுக்கும் அதே பெயர்!). வித்தியாசமாக எடுத்திருக்கிறார். ஹாலிவுட் படத்தின் தரம் மெல்ல, மெல்ல தமிழ்திரைக்குள் வருவது வளர்ச்சி. அவர் காலத்திற்குள் கமலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தால் நல்லது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/SwkykLObpkI/AAAAAAAAIHM/AhqJypqNnms/s1600/unnaipol-oruvan-stills01.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5406908424704992834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 213px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/SwkykLObpkI/AAAAAAAAIHM/AhqJypqNnms/s320/unnaipol-oruvan-stills01.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் அமெரிக்கமயமாகி வருவதை சமீபத்திய ஐடி வளர்ச்சி இன்னும் ஊக்குவிக்கிறது என்பதை இப்படம் மெய்ப்பிக்கிறது. `ரொம்பப் பழைய கம்யூட்டர் சார்! அபிவாதயே! சொல்லிட்டுத் தொடறேன்` எனும் வசனம்! அது சரி இப்போதெல்லாம் யார் அபிவாதயே சொல்லி சேவிக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஓ! அது இரா.முருகன் வசனம் என்பதாலோ? சில இடங்களில் இரா.முருகனின் முத்திரையும் தெரிகிறது. காமன் மேன் என்பதற்கு தரும் விளக்கம்! அச்சாக முருக தரிசனம்!&lt;br /&gt;&lt;br /&gt;இது லோ பட்ஜெட் படம்தான். ஆனால், நல்ல முறையில் எடுக்கப்பட்ட படம். ஆனால், தெனாலி போல் இரண்டு, மூன்றுமுறை பார்க்கத்தூண்டும் படமல்ல (ஓ! தெனாலி படச் சாயல் கூட இப்படத்தில் உண்டு).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-1539679463161552233?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/1539679463161552233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=1539679463161552233' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/1539679463161552233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/1539679463161552233'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2009/11/blog-post.html' title='உன்னைப்போல் ஒருவன்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/SwkykLObpkI/AAAAAAAAIHM/AhqJypqNnms/s72-c/unnaipol-oruvan-stills01.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-254183008715012402</id><published>2009-08-26T10:04:00.006+09:00</published><updated>2009-08-26T13:54:16.235+09:00</updated><title type='text'>தமிழ்மணம்! 5 ஆண்டு நிறைவு. காசியின் கேள்விகளுக்குப் பதில்</title><content type='html'>தமிழ்மணம் காசியை அறியாதோர் யார் உளர்? புதியோருக்கு ஒரு &lt;a href="http://kasiblogs.blogspot.com/2009/08/blog-post.html"&gt;தொடுப்பு&lt;/a&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;காசி "அண்ணா" என்று என்னை எழுத்தில் விளிக்கும் போதே நெஞ்சில் அன்பு ஊறும். நேரில் கேட்டால் எப்படி இருக்குமோ? நான் இன்னும் அவரைப் பார்த்ததில்லை. பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்புகள் இப்போது வலையில் பின்னிப்பினவெடுக்கின்றன ;-)&lt;br /&gt;&lt;br /&gt;காசி நுட்பமான ஆசாமி. கோவைத்தமிழர்களுக்கே உரிய தொழில்நுட்பம்! அவர் ஆரம்பித்து வைத்த 'தமிழ்மணம்' இன்று 5 ஆண்டுச்சேவையை நிறைவு செய்கிறது! மகிழ்வான சேதி.&lt;br /&gt;&lt;br /&gt;இதையொட்டி நட்சத்திர பதிவாளராக வலம் வரும், காசி ஆறுமுகம் என்னிடம் கேட்ட கேள்விகளை என் பதிவில் இடச்சொல்லியிருக்கிறார். அவரது ஆசைப்படி, அவரது கேள்விகளும், என் பதிலும்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;strong&gt;1.&lt;/strong&gt; &lt;em&gt;இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தை நோக்கும் போதோ இல்லை ஆசிய மொழிகளான கொரியன், ஜப்பானிஸ்,சீனத்தை நோக்கும் போதோ நாம் பின் தங்கியுள்ளோம் என்பதே உண்மை. இதற்கு முக்கிய காரணம் தமிழர்களுக்கு அடிப்படை தமிழ் கல்வி இல்லாததால் தமிழில் உள்ளீடு செய்வோர் குறைவு. இணையத்தில் "தமிழர்களின்" பங்களிப்பு என்றால் ஆங்கிலத்தில் கணிசமான அளவு உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தமிழில் உள்ளீடு செய்யும் படித்த தமிழர்கள் தொழில்முறையில் வேறு ஏதோ தொழில் செய்து கொண்டு மாபெரும் முயற்சிகளை யெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்ல உதாரணம் நீங்களே. தமிழ்மணம் உருவாவதற்கு எத்தனை மணித்தியாலங்கள் தாங்கள் உழைத்திருப்பீர்கள்? அதன் பொருளாதார மதிப்பு எத்தனை லட்சம் பெறும்? ஆயின் சுயநலம் கருதாமல் செய்து இருக்கிறீர்கள். இது &lt;a href="http://www.projectmadurai.org"&gt;மதுரைத்திட்டம்&lt;/a&gt;, &lt;a href="http://www.tamilheritage.org"&gt;தமிழ் மரபு அறக்கட்டளை&lt;/a&gt; போன்ற இணைய முயற்சிகளுக்கும் பொருந்தும். இந்தப் பதில் கூட என் வேலை நேரத்தில் எழுதுவதே. இதை ஸ்பான்சர் செய்வது கொரிய அரசு என்று சொல்லலாம். தமிழ் இன்னும் இப்படியான ஒட்டுண்ணி வாழ்வில்தான் காலம் ஓட்டுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கணினித்துறை பற்றிய தெளிவை கல்லூரியில் எல்லாத்துறையினருக்கும் அளிக்க வேண்டும். குறிப்பாக தமிழ் துறைக்கு. இது குறித்து நான் கோவையில் பி.எஸ்.ஜி கல்லூரியிலும், பேரூர் தமிழ் கல்லூரியிலும், மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியிலும் எடுத்துரைத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விஷயமுள்ள தமிழர்கள் தமிழில் எழுதுதல் அவ்வளவு கேவலமில்லை என்று உணர வேண்டும். ஆங்கிலத்தில் எழுதத்தான் ஆயிரம் பேர் இருக்கிறார்களே! தமிழ் பதிவுகளுக்கு நல்ல கவன ஈர்ப்பைத் தந்து இதை ஊக்குவிக்க வேண்டும். தமிழ்மணம் இதைச் செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;strong&gt; 2.&lt;/strong&gt; &lt;em&gt;தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் என்னால் இதற்கான முழுப்பதிலையும் சரியாக அளிக்க முடியுமா எனத்தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மடலாடற்குழுக்களில் வரும் சேதிகளைப் பார்த்தால் மின் - இறையாண்மை என்பது தமிழகத்தில் செயல்படுவது போலுள்ளது. எவ்வளவு தூரமெனத்தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னரட்டை (சாட்) தமிழில் முழுவதும் பாவிக்கப்படுகிறது. வீடியோ கான்பரன்ஸ் வசதியைத் தமிழர்கள் நன்கு பயன்படுத்துகின்றனர் என்றே கூறவேண்டும். இப்போது சென்னையில் இருந்து கொண்டு அமெரிக்க மாணவிகளுக்கு பாட்டு கிளாஸ் நடத்துவது உண்மை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;strong&gt;3.&lt;/strong&gt; &lt;em&gt;தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் முன்னிடுதல் என்பதில் ஜாதி அரசியல் அனாவசியமாக புகுந்துள்ளதைக் காணமுடிகிறது. உலகில் வேறெங்குமில்லாத பிரச்சனை இது. அடுத்து மொழியின் மீதான அதீதப்பற்று. இது 'இனவாதம்' எனும் அளவிற்கு நிற்பது ஆரோக்கியமானதில்லை. ஆங்கிலமொழியை விபசார மொழி என்று கூடச் சொல்வதுண்டு. ஆனால் அதன் வளத்தின் முன்னே நாம் கைகட்டி அல்லவோ நிற்கிறோம்? 'தூய்மைவாதம்' என்பது எப்படி நோக்கினும் இனவாதமே, நிறவாதமே! இதுவும் ஜாதீயம் என்று பார்த்து எப்போது நாம் முதிர்ச்சியடைகிறோமோ அப்போது நம் மொழி இடுகைகள் கூடும். இணையத்தில் மொழி வளம்பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;strong&gt;4.&lt;/strong&gt; &lt;em&gt;நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தமிழ் மனம் எப்படி செயல்படுகிறதோ, அப்படியே 'உள்ளது உள்ளபடி' அதன் வடிவத்தை மின்னுலகிற்கு மாற்றுவேன். எவ்வகை இனவாதம், மொழிவாதம், நிறவாதம் போன்றவை தலையெடுக்காமல் தடுப்பேன். மொழி என்பது மனிதர் போல்தான். எவ்வளவு தடுத்தாலும் 'கலப்பு' என்பதை நம்மால் தவிர்க்கவியலாது. மொழியும் அவ்வாறே. மேலும் தமிழகம் உலகின் பெரிய கலைடாஸ்கோப்பாக உள்ளது. Melting pot ஆக உள்ளது. அதுவே அதன் வளம். அதை அப்படியே மின்னுலகிற்கு கொண்டு வருவேன். தமிழின் முதுசொம் (பழைய சொத்து, பிதுர்ராஜ்ஜியச் சொத்து) முழுவதும் 'உள்ளது உள்ளபடி' வலையேற்றம் காண வைப்பேன். தமிழன், மேலதிகாரிகளுக்கு ஜால்ரா அடித்தே தன் சுயமரியாதையை இழந்திருக்கிறான். ஆங்கிலேயர்களுக்கு குனிந்த முதுகு, சுதந்திரமாகியும் நிமிரவே இல்லை. அடிமைக் குணமில்லாத புதிய தமிழ்மணம் மின்னுலகில் வீசச்செய்வேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;strong&gt;5.&lt;/strong&gt; &lt;em&gt;தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவு எனும் தொழில்நுட்பம் பாரிய அளவில் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கிறது. தமிழின் &lt;a href="http://www.subaonline.net/nakannan/articles/6thiNai/cyberindex.html"&gt;&lt;em&gt;ஆறாவது திணை இணையம் &lt;/em&gt;&lt;/a&gt; என்று இலக்கணம் சொல்லியுள்ளேன். அத்திணையின் புதிய இலக்கியம் இங்குதான் உருவாகிறது. சூழல் பாங்கான (environmental friendly) புதிய இலக்கியம் இனிமேல் மின்னிலக்கியமாகவே இருக்கும். அதன் வடிவம் தமிழ் முன்பு காணாத அளவில் இருக்கும். வலைப்பதிவு, ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம்' என்பது போன்றது!&lt;br /&gt;&lt;br /&gt;யோசனை?&lt;br /&gt;&lt;br /&gt;1. முதலில் மனிதனை மனிதனாக, எழுத்தை எழுத்தாகக் காணுங்கள். ஜாதீயம் மின்னுலகில் நுழைய வேண்டாம். ஒரு தலித் தேசம் விட்டு தேசம் போனால் எவ்வளவு சுதந்திரம் பெருகிறானோ அது போல்தான் மெய்யுலகிலிருந்து மெய்நிகர் உலகிற்கு வரும் எழுத்தும் உணர்கிறது. ஆனால் மெய்யுலகில் காணும் எச்சங்களை இங்கும் கொண்டுவந்து கொட்ட வேண்டுமா? யோசியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. நேரமிருப்பின் நிறைய எழுதுங்கள்.'சித்திரமும் கைப்பழக்கம்' என்பது போல் மின்னுலகில் எழுதி இன்று இலக்கிய தாரகைகளாக ஜெயந்தி சங்கர். மீனா முத்து போன்றோர் ஜொலிக்கின்றனர். இதற்கு தளம் அமைத்துக் கொடுத்தது வலைப்பதிவே!&lt;br /&gt;&lt;br /&gt;3. பல்வேறு துறைக்கென புதிய பதிவுகளை உருவாக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. பின்னூட்டமில்லையென்று சோம்பி விடாதீர்கள். மின்பதிவான எழுத்து ஊசிப்போவதில்லை. எப்போது வேண்டுமானாலும் பார்த்து அனுபவிக்க முடியும். என்றாவது ஒருநாள் ஆசைப்பட்ட கவன ஈர்ப்பு கிடைக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;5. மின் தாக்குதலைக் கண்டு கலங்கி விடாதீர்கள். அவை வெறும் மின்னணு என்று ஒதுக்கித்தள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6. நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் கொண்டு எழுதுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;7. சொல்லும் சொல் மந்திரச் சொல்லாக இருக்கட்டும். அது நிச்சயம் வாசிப்பவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி நல்வழிப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. மேற்கோள் அதிகம் காட்டாமல் சுயமாக சிந்தித்து எழுதப் பழகுங்கள்.மேற்கோள் என்பது முதியோர் ஊன்றும் கைத்தடி போன்றது. மழலை கை கைவண்டி போன்றது. சுயமாக நடை பயிலுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;strong&gt;6.&lt;/strong&gt; &lt;em&gt;தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் மின்தமிழ் வளர்ச்சியில் பெரும் கிரியாஊக்கி. அதுவே மின்னுலகின் நகர மையம். அங்கு வந்தால் எல்லோரையும் பார்க்கலாம். மிக நல்ல சேவை.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்பத்தை இன்னும் முடக்கி, எல்லா வலைப்பதிவு தளங்களிலும் தமிழ்மணம் பொறி செயல்படுமாறு செய்யுங்கள். தமிழ்மணம் நாலுவகை வலைப்பதிவாளர் நிருவனத்திற்கு மட்டும் செயல்படும் என்றால், ஒருவகையில் புளோக்கர், வேர்டுபிரஸ் இவைகளை மட்டும் ஆதரிப்பது எனும் நிலைக்கு தமிழனைத் தள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூ! என்று ஆரம்பித்த காலத்திலிருந்து உங்களுடன் பயணப்படும் எனக்கு இவ்வளர்ச்சி பேருவகை தருகிறது. வாழ்க வளமுடன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-254183008715012402?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/254183008715012402/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=254183008715012402' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/254183008715012402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/254183008715012402'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2009/08/5.html' title='தமிழ்மணம்! 5 ஆண்டு நிறைவு. காசியின் கேள்விகளுக்குப் பதில்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-3876589864619143349</id><published>2009-08-25T16:57:00.002+09:00</published><updated>2009-08-25T17:09:25.261+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Chennai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='August 30 2009'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='THF 8th anniversary'/><title type='text'>மின்னாக்கப்பணிக்கோர் நினைவுறுத்தல்</title><content type='html'>வருகின்ற 30ம் தேதி (ஞாயிறு) நேரமிருந்தால் தமிழ் மரபு அறக்கட்டளை நடத்தும் 8ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ளலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரா பார்த்தசாரதி&lt;br /&gt;திருப்பூர் கிருஷ்ணன்&lt;br /&gt;பெ.சு.மணி&lt;br /&gt;கடலோடி நரசய்யா&lt;br /&gt;யுகமாயினி சித்தன்&lt;br /&gt;புதுவை சுகுமாரன்&lt;br /&gt;கடலூர் வாசுதேவன்&lt;br /&gt;&lt;br /&gt;போன்ற தமிழ்ப் பண்பாடு மீது அக்கறையுள்ளோர் கலந்து கொள்கின்றனர். அழைப்பிதழ் கீழே காண்க. 10வது நிறைவாண்டை நோக்கி நடைபோடும் த.ம.அயின் முதல் வெள்ளோட்டமிது. உங்கள் ஆதரவு இருந்தால் தொடர்ந்து நடத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos-a.ak.fbcdn.net/hphotos-ak-snc1/hs166.snc1/6240_1127223735931_1087297991_30365920_8166756_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 483px; height: 604px;" src="http://photos-a.ak.fbcdn.net/hphotos-ak-snc1/hs166.snc1/6240_1127223735931_1087297991_30365920_8166756_n.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/d58c8914f9e3e64e"&gt;மின்தமிழ்&lt;/a&gt; குழுமத்திலும் இவ்விழா மெய்நிகராகக் கொண்டாடப்படவிருக்கிறது! கலந்து கொண்டு சிறப்பிக்க!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-3876589864619143349?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/3876589864619143349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=3876589864619143349' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/3876589864619143349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/3876589864619143349'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2009/08/blog-post_25.html' title='மின்னாக்கப்பணிக்கோர் நினைவுறுத்தல்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-1707500517680187345</id><published>2009-08-24T09:35:00.003+09:00</published><updated>2009-08-24T09:46:35.335+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='space science'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Korea and India'/><title type='text'>பெருமை கொள் இந்தியா!</title><content type='html'>இந்தியா ஏழை நாடு! பட்டினித்தொகை விண்ணை முட்டும்! போன்ற காலை வாரும் கணக்குகள் ஒரு புறம் இருக்க. இந்தியா அறிவியலில் வேகமாக முன்னேறி வருவதை மற்ற நாடுகலளுடன் ஒப்பிடும் போதுதான் தெரிகிறது. ஸ்ரீஹரிகோட்டா உருவாகி விண்வெளி ஆய்வில் இந்தியா நிரந்தர இடம் பெற்று நாளாகிறது. ஆனால், கொரியா இன்னும் சிறு பிள்ளை போல் தவழ்ந்து கொண்டு இருப்பதைக் கண்ணுறும் போது ஆச்சர்யமாக உள்ளது. இன்று கொரியன் ஹெரால்டு பத்திரிக்கையில் வந்திருக்கும் ஆங்கிலச் சேதியை கீழே தந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சர்யம் என்னவெனில் விண்வெளி ஆய்வின் தொடக்கத்தில் இந்தியாவிற்கும் ரஷ்யாதான் உதவியது. இப்போது கொரியாவிற்கும் ரஷ்யாதான் உதவுகிறது. ஆயினும் ஏழுமுறை ராக்கெட்டை அனுப்புமுடியாமல் கொரியா திணறுகிறது. சுமார் $399 million செலவில் உருவான இத்திட்டத்தில் 40 விழுக்காட்டு ரஷ்ய ஆய்வகத்திற்கு போயிருப்பதாகவும் இத்தோல்விக்கு ரஷ்யாவும் காரணமென்று கொரியா குற்றம் சாட்டுகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது, இவர்கள் செலவழித்ததில் பாதிச்செலவில் இந்தியா பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு ராக்கெட்டுகள் அனுப்பி, செய்மதியை உலாவவிட்டிருப்பது பெருமைப்பட வேண்டிய விஷ்யம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஏழைகள் அல்ல. பல்லக்குத் தூக்கிகள் அல்ல. உலகின் முதல்தர மனிதர்கள். டாக்டர் கலாம் சொல்வதை நம்பத் தயாராகுங்கள். நம்மால் எல்லாம் முடியும்! ஜெய் ஹிந்த்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Rocket launch hopes for lucky number 8  &lt;/strong&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;After seven failed attempts to get its first space rocket off the ground, Korea announced yesterday it has scheduled the next attempt for Aug. 25. &lt;br /&gt;&lt;br /&gt;The latest attempt to launch Naro, or the Korea Space Launch Vehicle-1, failed Wednesday after a technical glitch halted the countdown minutes before blastoff. &lt;br /&gt;&lt;br /&gt;"We have completed checkups on the software errors in the automatic sequence system that led to a halt of the launch," said Kim Jung-hyun, vice minister of education, science and technology. He added that the renewed date reflects weather conditions and other technical preparedness. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;According to the ministry, the historic launch of Naro has been rescheduled to take place between 4:40 p.m. and 6:20 p.m. next Tuesday at the Naro Space Center, the country's first spaceport in Goheung, South Jeolla Province. &lt;br /&gt;&lt;br /&gt;Officials said they will know whether the launch has been successful approximately nine minutes after blastoff. The first communication with the satellite is expected to take place about 12-13 hours after the launch. &lt;br /&gt;&lt;br /&gt;Naro, which weighs 140 tons and measures 33.5 meters in length and 2.9 meters in diameter, has been jointly developed by KARI and Russia's Khrunichev State Space Science and Production Center. &lt;br /&gt;&lt;br /&gt;The Russian institution has developed the liquid fuel first-stage rocket, which is powered by liquid oxygen and kerosene, and generates a thrust of 170 tons. &lt;br /&gt;&lt;br /&gt;The solid fuel second-stage rocket, which is powered by a "kick motor" and generates eight tons of thrust, has been developed by KARI. &lt;br /&gt;&lt;br /&gt;As a follow on from the first launch, another rocket will be launched nine months later as agreed in a contract with the Russian company. The Russians will also be responsible for a third launch if either of the first two launches fails. &lt;br /&gt;&lt;br /&gt;Korea has spent 502.4 billion won ($399 million) on the project, which began in August 2002. About 40 percent of that amount has been paid to the Russian institution. &lt;br /&gt;&lt;br /&gt;The launch was originally scheduled for 2005, but was delayed a total of seven times including the latest one. &lt;br /&gt;&lt;br /&gt;(sshluck@heraldm.com) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;By Song Sang-ho &lt;br /&gt;&lt;br /&gt;2009.08.22&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-1707500517680187345?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/1707500517680187345/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=1707500517680187345' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/1707500517680187345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/1707500517680187345'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2009/08/blog-post_24.html' title='பெருமை கொள் இந்தியா!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-1533885740283954618</id><published>2009-08-04T09:29:00.004+09:00</published><updated>2009-08-04T09:44:40.355+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='malware'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='DDOS'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='korea'/><title type='text'>மின்னுலகின் நுண்கிருமி</title><content type='html'>நுண்கிருமிகள் என்பவை ஒட்டுண்ணிகள். பாசி போல் அவைகளால் தனித்து வாழ முடியாது. பாசி சூரிய் ஒளிச்சக்தியை உள்வாங்கும் திறன் பெற்றது. ஆனால் நுண்கிருமிகள் ஒட்டுண்ணிகள். இது உயிரில் உலகில் சாத்தியமென்றால் மனிதன் உருவாக்கிய மெய்நிகர் உலகிலும் இது சாத்தியப்படுவது ஆச்சர்யம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Malware&lt;/strong&gt;, &lt;em&gt;short for malicious software, is software designed to infiltrate or damage a computer system without the owner's informed consent. The expression is a general term used by computer professionals to mean a variety of forms of hostile, intrusive, or annoying software or program code&lt;/em&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மால்வேர் சமீபத்தில் கொரியாவை ஸ்தம்பிக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/SneBNvNMBvI/AAAAAAAAH9s/QMPxQSrSsog/s1600-h/malware_Korea.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 310px; height: 202px;" src="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/SneBNvNMBvI/AAAAAAAAH9s/QMPxQSrSsog/s320/malware_Korea.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5365899554045298418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொரியாவின் கூகுள் போன்ற நேவர் (www.naver.com) செயலற்றது. கொரியப் பாராளுமன்றம் வரை இத்தாக்குதல் போயிற்று. DDOS எனும் மால்வேர் (மருவூ) இதற்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு எங்கள் கணிகளுக்கு அம்மைப்பால் குத்தினர். இந்த மருவூ உங்கள் கணினியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். சாதுவாக இருக்கும் (ஜோம்பி என்று பெயர். சோம்பி அல்ல Zombie). தன் ரகசியக் குறிகளை மற்ற கணினிகளுக்குப் பரப்பும். ஏதாவதொரு கணினி குறிப்பிட்ட நாளில் தன்னைத்தானே அழித்துக் கொண்டு மாயும்! என்ன கொடூரமான சிந்தனை! செயற்பாடு!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/SneDNbwAXdI/AAAAAAAAH90/UuvIZk5EpUE/s1600-h/malware_top10.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 305px; height: 209px;" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/SneDNbwAXdI/AAAAAAAAH90/UuvIZk5EpUE/s320/malware_top10.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5365901747845881298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாக்குதல் வடகொரிய அரசு செய்தது என்று பத்திரிக்கை சொன்னது. பொதுவாக கொரியாவைத்தாக்கும் 10 நுண்கிருமி பரப்பும் நாடுகளென அ.ஐ.கு (அமெரிக்கா), சீனா, ரஷ்யா, ஜெர்மனி, கொரியா, உக்கிரைன், இங்கிலாந்து, துருக்கி, செக், தைவான், பிற என்று ஒரு கணக்குக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது போல் இந்தியாவை இலக்கு வைக்கும் நாடுகளும் இருக்கும்தானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-1533885740283954618?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/1533885740283954618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=1533885740283954618' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/1533885740283954618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/1533885740283954618'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2009/08/blog-post.html' title='மின்னுலகின் நுண்கிருமி'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/SneBNvNMBvI/AAAAAAAAH9s/QMPxQSrSsog/s72-c/malware_Korea.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5593630.post-6471019074106280427</id><published>2009-07-26T11:17:00.009+09:00</published><updated>2009-07-26T22:34:48.940+09:00</updated><title type='text'>நான் கடவுளைக் கண்டேன்!</title><content type='html'>நேற்று உலகின் இரண்டாவது ஆகப்பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலைக்குப் போயிருந்தோம். &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் பெரும் தொழிற்சாலைகள் இந்தியாவில் உருவாக வேண்டுமென்று கனாக்கண்ட நேரு, “தொழிற்சாலைகளே இந்தியாவின் நவீன கோயில்கள்” என்றார். ஏனப்படிச் சொன்னார் என்பது நேற்று புரிந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இறைச்சந்நிதானத்தில் நின்று இறைச்செயல்களை எண்ணி விக்கி, வியந்து போய்விடுகிறோம். அதுதான் நிகழ்ந்தது இந்த மாபெரும் இராட்சச தொழிற்சாலையில் நின்ற போது. எத்தனை வகையான கப்பல்கள்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/SmxRoGvBAPI/AAAAAAAAH7w/Aokgshv1ARQ/s1600-h/IMG_1125.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/SmxRoGvBAPI/AAAAAAAAH7w/Aokgshv1ARQ/s320/IMG_1125.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5362751005735846130" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கச்சா எண்ணெய் கொண்டு போகும் கப்பல்கள்.&lt;/div&gt;&lt;div&gt;சரக்கேற்றும் கப்பல்கள்&lt;/div&gt;&lt;div&gt;உல்லாசப்பயணக்கப்பல்கள்&lt;/div&gt;&lt;div&gt;காரேற்றும் கப்பல்கள்&lt;/div&gt;&lt;div&gt;கடற்படைக்கப்பல்கள்&lt;/div&gt;&lt;div&gt;கடலோரப்பகுதிகளில் எண்ணெய் கண்டுபிடித்து வடித்தெடுக்கும் கப்பல்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இக்கப்பல்களெல்லாம் ஏதோ ஓடம் போல் என்று எண்ணிவிடக்கூடாது. ஒவ்வொன்றும் 5-6 மாடிக்கட்டடம் உயரம். பெரிய வீதியின் அகலம் (உம்.அண்ணா சாலை). &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_eySWrbVwCy4/SmxR61Yw1uI/AAAAAAAAH74/fzpdIYAD64o/s1600-h/IMG_1132.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_eySWrbVwCy4/SmxR61Yw1uI/AAAAAAAAH74/fzpdIYAD64o/s320/IMG_1132.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5362751327496623842" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இக்கப்பல்கள் ஆயிரக்கணக்கான உருக்கு உதிரிப்பாகங்கள் கொண்டு கட்டப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இரும்பை நீரில் போட்டால் மூழ்கிவிடும். ஆனால் மூழ்காத இரும்பு கப்பல். எப்படி முடிகிறது? அறிவியல்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இரும்பு மூழ்கும் என்பது மட்டுமல்ல, சரக்கேற்றிய இரும்பு மிதக்கவா செய்யும்? இல்லையே! அதுவும் மூழ்குமே! ஆனால் மிதப்பது அதிசயம்! அறிவியல்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கட்டப்படும் கப்பல் தரையில் இருக்கிறது. அதை மெதுவாக கடலுக்கு நகர்த்த வேண்டும். பின் கடலில் வைத்து சில நிர்மாண வேலைகள் செய்ய வேண்டும். இம்மாம் பெரிய கப்பலைத்தாங்கும் மிதவைக் கப்பல்கள் இதைச் செய்கின்றன. இரும்புக்கப்பல் மூழ்குமெனில், இரும்புக்கப்பலைத்தாங்கும் இரும்பு மிதவை எப்படி இவ்வளவு கனத்தையும் தாங்கி மிதக்கிறது? அறிவியல்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சும்மா 10 கிலோ எடையைக்கல்லைத் தூக்கவே பயில்வான் திறமை வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள கப்பலை எப்படி நகர்த்துவது? முதலில் உதிரிப்பாகங்கள் நகர்த்தப்படுகின்றன. பல 100 டன் எடையுள்ள உதிரிப்பாகத்தை நகர்த்துவது காற்றடைத்த டயர் கொண்ட இராட்சச ஊர்த்திகள். காற்று உலகிலேயே மெல்லிய பொருள். ஆனால், அக்காற்று எப்படி பல லடசம் கிலோகிராம் எடையுள்ள கப்பல் பாகங்களைத்தாங்கி நகர்த்துகிறது? அறிவியல்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/SmxSkyPu8_I/AAAAAAAAH8I/r-gA9cBEVXk/s1600-h/IMG_1122.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/SmxSkyPu8_I/AAAAAAAAH8I/r-gA9cBEVXk/s320/IMG_1122.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5362752048207950834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கப்பலை நகர்த்தும் பொறி! ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள கப்பலை நகர்த்தப் பயன்படும் பொறி வலுவுள்ளதாக இருக்க வேண்டும் இல்லையா? அதற்கும் ஒரு எடையுண்டே! அந்த எடையைத்தாங்கிக்கொண்டும் கப்பல் நகர வேண்டும்! அறிவியல்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்பொறி இயங்க எரிசக்தி வேண்டும். இவ்வெரி எண்ணெய்க்கும் எடையுண்டே! அந்த எடையைத்தாங்கிக்கொண்டும் கப்பல் நகர வேண்டும்! அறிவியல்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரே நேரத்தில் பல்வேறு வகையான கப்பல்கள் உருவாகிக்கொண்டிருந்தன. எந்த உதிரி எங்கு போய் எத்துடன் ஒட்ட வேண்டும்? ஒரே சமயத்தில் 25,000 ஊழியர்கள் கட்டுமானப்பணியில் ஈடுபடுகின்றனர். 24 மணி நேரம், 7 நாட்கள், 365 நாட்கள்! இத்தொழில் ஒரு நாள் கூட நிற்பதில்லை. இத்தனை ஊழியர்களின் கணக்கு வழக்கைப் பார்த்து, வேலைப்பணி கொடுத்து, குழப்பமில்லாமல் வழி நடத்த வேண்டுமே? எப்படி செயல்படுகிறது? இதற்குப்பின்னுள்ள பிரம்மாண்ட மூளை எது? அறிவியல்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/SmxSKh7PS3I/AAAAAAAAH8A/6Igm43tep3k/s1600-h/IMG_1130.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/SmxSKh7PS3I/AAAAAAAAH8A/6Igm43tep3k/s320/IMG_1130.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5362751597150423922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்தப்பெரும் கப்பல் முன் மனிதன் கடுகு போல் நிற்கிறான். எப்படி இச்சிறு மனிதனால், இப்பெரும் கப்பலைக் கட்டமுடிகிறது? அறிவியல்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;To err is human! தவறுகள் சகஜம். ஒரு சிறு தவறு. சிறு ஓட்டை! கப்பலையே கவிழ்த்துவிடும். ஆயிரம் உதிரிகள். பல பாகங்கள் எங்கெங்கோ உருவாக்கப்பட்டு இங்கு வருகின்றன. கொரியாவின் பிற நகரங்கள் என்றில்லாமல், சீனா, தைவான் போன்ற நாடுகளிலிருந்தும் உதிரிப்பாகங்கள் வருகின்றன.  அவையவை தகுதித்தறம் கொண்டவையா என்று யார் கண்காணிப்பது? அறிவியல்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/SmxS-RHPLLI/AAAAAAAAH8Q/84vkGg7gBj4/s1600-h/IMG_1139.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/SmxS-RHPLLI/AAAAAAAAH8Q/84vkGg7gBj4/s320/IMG_1139.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5362752485990542514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கப்பல் காட்டியபின் ஓட்ட வேண்டும். வெள்ளோட்டம் செய்யும் முன்னமே மெய்நிகராக பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சிகளை உருவாக்குவது பிரம்மாண்ட கணிகள். இக்கணினிகளுக்கு ப்யிற்சி அளிப்பது யார்? அறிவியல்!!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடல் பரந்து விரிந்து கிடக்கிறது. எங்கு எப்படிப் போவது? திசை காட்டும் வழிகாட்டி யார்? அதுவேறு அறிவியல்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடல் எப்போதும் அமைதியாய் இருப்பதில்லை. மாபெரும் கப்பலுக்கு முன் மனிதன் கொசுறு என்றால், மாபெரும் கடலின் முன் கப்பல் கொசுறு. ஆயினும், எல்லாச் சூழலிலும் கப்பல் சமாளிக்கும் படி திட்டமிட்டு கப்பல் செய்வது யார்? எப்படி? அறிவியல்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்று அக்கப்பல் தொழிற்சாலையில் நின்ற இரண்டு மணி நேர அனுபவம், மெய்சிலிர்க்கும் அனுபவம். அந்த தொழிற்சாலை ஒரு macrocosm ஆக இயங்கிக் கொண்டிருந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எப்படி மனித ஆக்கசக்தி இத்தகு செய்லகளை செய்ய முடிகிறது? நான் முதன் முதலாகக் கொரியா வந்த போது உலகின் முதல் மூன்று பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் அங்கிருந்தன. இரண்டு வருடங்களில் உலகின் ஆகப்பெரிய 5 தொழிற்சாலைகளும் கொரியாவிலிருந்தன. இன்று உலகின் முதல் 7 பெரிய தொழிற்சாலைகள் கொரியாவிலுள்ளன. ஹியூந்தே (Hundai), தேவு (Daewoo),  சாம்சுங் (Samsung)! இப்பெயர்களை அறியாதோர் அரிது. கப்ப்ல் தொழிலில் ஈடுபட்டவுடன், அதற்குத்தேவையான கச்சா இரும்புத் தொழிற்சாலைகள் வேண்டியிருந்தன. அவை தோன்றின. உதிரிப்பாகங்கள் கட்டும் தொழிற்சாலைகள் தேவைப்பட்டன. அவை தோன்றின. இதிலிருந்து கிளைத்ததுதான் கார் செய்யும் தொழில். அடுத்து, கணினித் தொழில்நுட்பம். அடுத்து மெய்நிகர் தொழில்நுட்பம். இப்படி, ஒரு தொழில் செய்யப்போய் படிப்படியாய் பல தொழில்கள் இந்த நாட்டில் பெருகிவிட்டன. முதலில் இத்தகு பெருஞ்செயல் செய்யும் கனவு கொரியர்களுக்கு வந்திருக்கிறது. பின் இதற்கான முதலை அரசும், வங்கிகளும் வழங்கியுள்ளன. இன்று கப்பல் கட்டும் தொழில் என்பது கொரியப்பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் நிற்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தியாவால் இதைச் செய்யமுடியாதா? 20 ஆண்டுகளுக்கு முன் கொரியா ஏழை நாடு. பிச்சைக்காரர்கள் மிகுந்த நாடு. இன்று உலகின் 11வது பெரிய பொருளாதார வளமுள்ள நாடு. 20 ஆண்டுகளுக்குள் இந்த அதிசயம். இந்தியாவால் முடியாதா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை:&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;செயற்கரிய செயல்களும் எளிய கனவுகளில் தொடங்குகின்றன! எனவே கனவு கான வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கனவு மெய்பட மெய்வருத்தம் பாராது உழைக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சாதி, மத வேறுபாடுகள் பார்க்காது ஒற்றுமையுடன் தேசிய முன்னேற்றத்தை மனதில் கொண்டு உழைக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வரப்புயர நீர் உயரும் என்பது போல், ஒரு தொழில், இன்னொரு தொழிலுக்கு வித்தாகி, மொத்தப் பொருளாதாரமும் உயரும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எப்போதும் அந்நிய தொழில்நுட்பத்தை நம்பி இராமல் நாமே சுயமாக தொழில் செய்ய முற்படும் போதுதான், புதிய தொழில்நுட்பங்கள் நம் நாட்டில் வளரும்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நேரு சொன்னது உண்மை!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பெரிய, பெரிய தொழிற்சாலைகளே நவ இந்தியாவின் கோயில்கள். கோயில்கள் செய்யும் அதே பணியை இவையும் செய்கின்றன. இறைத்தரிசனம் என்பதை எவ்வளவு விளக்கினாலும், அவரவர்க்கு சுயானுபவம் கிட்டும்வரை உணரமுடியாது. அதுபோல்தான் இதுவும். இங்கு வந்து இந்த பிரம்மாண்டத்தைப்பார்த்து, அனுபவித்து, விக்கித்துப்போய் நின்றால்தான் தெரியும், அறிவே தெய்வமென்று!! &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5593630-6471019074106280427?l=emadal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://emadal.blogspot.com/feeds/6471019074106280427/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5593630&amp;postID=6471019074106280427' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/6471019074106280427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5593630/posts/default/6471019074106280427'/><link rel='alternate' type='text/html' href='http://emadal.blogspot.com/2009/07/blog-post.html' title='நான் கடவுளைக் கண்டேன்!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_eySWrbVw
